Thursday, May 23, 2024

Holy Trinity In Tamil

Scroll down to download the pdf

மூவொரு கடவுள் பெருவிழா 26/05/2024

மூவொரு கடவுள் பெருவிழா

by

 

திருப்பலி முன்னுரை

இறை உறவில் ஒன்றிணைந்த சகோதர சகோதரிகளே!

இன்றைய நாளில் நம் தாய் திருஅவை மூவொரு கடவுளின் பெருவிழாவை கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கின்றது. உலகம் தோன்றியது முதல் இன்று வரை தந்தை, மகன், தூய ஆவியார் ஆகிய மூவரும் தங்களின் எல்லையில்லா ஆற்றலால் இவ்வுலகைப் படைத்து, பராமரித்து, வழிநடத்தி வருகின்றனர். இம்மூவரும் வெவ்வேறு ஆட்களாய் இருந்தாலும், அவர்களுடைய வல்லமை, ஞானம், மற்றும் அன்புறவு ஆகிய இறைத்தன்மைகளின் வாயிலாக ஒரே கடவுளாய் ஒன்றுபட்டு இருக்கின்றார்கள். தந்தை கடவுள் இவ்வுலகை படைத்து, மக்கள் இனத்தை உருவாக்கி, இறை வழியில் வாழ அவர்களுக்கு கட்டளைகளை அளித்தார். மகன் கடவுளாகிய இயேசு கிறிஸ்து உலகை பாவத்திலிருந்து மீட்பதற்காக சிலுவையில் இறந்து உயிர்த்தார். தூய ஆவியார் உலகின் தொடக்க முதல் இன்று வரை தன் எல்லையில்லா ஆற்றல்களை திருஅவையின் மீது பொழிந்து, திருவைக்கு உயிரோட்டம் அளிக்கின்றார். இவ்வண்ணம் உலக படைத்து, பாவத்திலிருந்து மீட்டு, நம்மை வழிநடத்தும் மூவொரு கடவுளிடம் நம் வாழ்வை அர்ப்பணிப்போம்.

நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் மூவொரு கடவுளின் துணையும், அவருடைய அருளும் நம்முடன் என்றும் இருக்கவும், மேலும் கடவுளின் பெயரால் உலகெங்கும் நடக்கும், வன்முறைகளும் போர்களும் முடிவடைந்து, மூவொரு கடவுள் அருளும் அமைதியும், ஆசியும் உலகெங்கும் பரவிட வேண்டி இக்கொண்டாட்டத்தின் விருந்தில் பக்தியுடன் செபிப்போம்.

வாசக முன்னுரை

மூவொரு கடவுள் பெருவிழா

முதல் வாசகம்

ஆண்டவரின் அருளும், ஆசியும் நம்முடன் இருக்கும் பொழுது நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் முழுமை பெறுகின்றது. இறைவன் இஸ்ரேயல் மக்களை காத்து, அவர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு, தன்னுடைய அன்பை வெவ்வேறு வடிவில் அவர்களுக்கு வெளிப்படுத்தினார் என்றும், . இஸ்ரேயல் மக்களின் வாழ்வு எவ்வாறு முழுமைப் பெற்றது என்றும் மோசே இஸ்ரேயல் மக்களுக்கு அறிவுறுத்துகின்றார். அன்று இஸ்ரேல் மக்களை காத்த இறைவன் இன்று நம்மையும் காக்கின்றார் என்ற மனநிலையுடன் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசகம்

நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகள், கடவுளின் பிள்ளைகள் என்ற மனப்பான்மையைப் பெற்றவர்கள். இம்மனப்பான்மை நம்முள் ஆழமாக வேறொன்றும் பொழுது, நாம் அச்சத்தில் இருந்து மீண்டு தூய ஆவியாரின் துணையுடன் கடவுளின் பிள்ளைகள் என்ற நிலையில் நிலைத்து வாழ்கின்றோம். இதனால், கடவுளின் பிள்ளைகள் என்ற முறையிலும், கிறிஸ்துவின் சகோதர, சகோதரிகள் என்ற முறையிலும் கிறிஸ்து ஏற்றுக்கொண்ட துன்பங்களில் பங்கெடுக்க நமக்கு அழைப்பு விடுக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவி கொடுப்போம்.

மன்றாட்டுகள்

மூவொரு கடவுள் பெருவிழா

1. எங்களை வழிநடத்தும் மூவொரு இறைவா!

தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால் உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள் என்ற உம் வார்த்தையை, இன்றளவும் தளராது பின்பற்றும் உன் திருஅவையை வழிநடத்தும் திருஅவை தலைவர்களையும், அதன் உறுப்பினர்களையும் நிறைவாக ஆசீர்வதியும். மூவொரு இறைவனின் அருள் இவர்களுடன் என்றும் இருக்கவும், மூவொரு இறைவனின் பெயரால் நற்செய்தியை இன்னும் முழு வேகத்துடன் உலகெங்கும் எடுத்துச் செல்லவும், இவர்களுக்கு வேண்டிய ஆற்றலையும் ஞானத்தையும் தந்தருள் வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

2. உலகின் ஒரு முனை முதல் மறுமுனை வரை நிறைவை கொணரும் எம் மூவொரு இறைவா!

நீர் அன்று இஸ்ரேல் மக்களை உம்முடைய மக்களாக கருதி, பாலை நிலத்தில் உன் கரங்களால் அரவணைத்து காத்து வழி நடத்தியது போல, உலகை ஆளும் ஒவ்வொரு தலைவர்களும் தங்களிடம் அளிக்கப்பட்டு மக்களை, தன்னுடைய மக்களாகக் கருதி அவர்களுக்கு தேவையான நலன்களையும், அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய அயராது உழைக்க வேண்டுமென்றும், சுயநலம் இன்றி பிற நல பணிக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணிக்க வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

3. வாழ்க்கைத் துணையாய் வரும் எம் மூவொரு இறைவா!

இன்று இத்திருப்பீடத்தின் முன் கூடியுள்ள உம்முடைய பிள்ளைகள் ஒவ்வொருவருக்காகவும் மன்றாடுகின்றோம். இறைவனின் பிள்ளைகள் என்ற மனப்பான்மையை பெற்றவர்களாய், இறைவனின் துணையுடன், இறை வார்த்தையின் வழியில் என்னாலும் நாங்கள் நடக்கவும், எங்களுடைய இல்லங்களில் மூவொரு இறைவனின் அருள் என்னாலும் இருக்கவும் எங்களுக்கு தேவையான மரங்களைத் தந்தருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

4. அமைதியை நிலைநாட்டு மையம் அன்பு இறைவா!

ஈரான் அதிபரின் திடீர் மரணத்தால், உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ள போர் பதற்ற நிலை விரைவில் முடிவுக்கு வரவேண்டி மன்றாடுகின்றோம். உலகின் வெவ்வேறு மூலைகளில் போர்களாலும், இனவாதத்தாலும், மதவாதத்தாலும் பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அனைத்து மக்களையும் நீர் உம்முடைய மக்களாக ஏற்று அவர்களை காத்து, அவர்களுக்கு துணையாய் இருக்க வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

மூவொரு கடவுள் பெருவிழா


Please Leave Your comments Here

Saturday, May 4, 2024

முதல் வான்விருந்து திருப்பலி முன்னுரை

 First Holy communion mass introduction and prayer of faithful. The word form and pdf form are available at the end.



தம் அன்பின் அளவை

இவ் அவனிக்கு உணர்த்த

விண்ணகத்தின் உன்னத கடவுள்

மண்ணகத்தின் மாந்தாரை பிறந்து

தம்மகத்தில் நம்மை சேர்க்க

உறுதி கொண்டார்,

தம் உதிரம் கொடுத்தார்,

நமக்கு உயர்வை கொடுத்தார்,

நாம் நம்பிக்கையில் உறுதிபட


திருப்பலி முன்னுரை

இறை உறவில் ஒன்றிணைந்த சகோதர சகோதரிகளே!

    இறைவன் இவ்வுலகை படைக்கத் திட்டமிட்ட நாள் முதல் இந்நாள் வரை தம்முடைய எல்லையில்லா வரங்களால் நம்மை ஆசிர்வதித்து நம்மை வழி நடத்துகிறார். இறைவன் தன்னுடைய அன்பை தம் படைப்புகள் வாயிலாக நம்மிடத்தில் வெளிப்படுத்துகிறார். அந்தப் படைப்பு அனைத்திற்கும் சிகரமாக மனிதனை நியமித்து அனைத்தையும் அவனுடைய ஆளுகைக்கு உட்படுத்துகிறார். இப்படி நம்மை ஒரு படைப்பாகவும், தம்முடைய படைப்பின் வழியாகவும், மேலும் தம்முடைய படைப்புகளின் காப்பாளனாகவும் நம்மை நியமித்து தன்னுடைய எல்லையற்ற அன்பை நாம் முழுவதும் அனுபவிக்க நமக்கு உரிமை அளிக்கிறார். நாம் பாவத்தில் விழுந்து இவ்வுரிமையை மறுக்கும் பொழுதும், துறக்கும் பொழுதும், இறைவனே உற்ற மருந்தாக உன்னத விருந்தாக எழுந்து நம்முடைய ஆன்மாவை தூய்மைப்படுத்தும் கருவியாக செயல்படுகின்றார்.

இறைவன் தொடக்கம் முதல் இன்றைய நாள் வரை தன்னுடைய அன்பை நமக்கு தம்முடைய இறை பராமரிப்பின் வழியாக நமக்கு தொடர்ச்சியாக வெளிப்படுத்துகின்றார். ஆதாமுக்கும் ஏவாளுக்கும் ஏதேன் தோட்டத்தின் விளைச்சலை உணவாக கொடுத்து தம் அன்பை வெளிப்படுத்தினார். எகிப்தின் அடிமை தனத்தில் இருந்து விடுதலை அடைந்து பாலை நிலத்தில் பயணமான இஸ்ரேல் மக்களுக்கு மன்னாவினை அளித்து தம்முடைய உடன் இருப்பை வெளிப்படுத்தினார். எல்லாவற்றுக்கும் மேலாக இறுதி இராவுணவில் தம்மையே நமக்காக அளித்து நம்மோடு துணையாய் இன்றும் வாழ்கின்றார். இவ்வுலகில் இறைவனின் துணையோடு பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் இறைவனின் துணை இல்லாமல் வாழ முடியாது. இவ்வுன்னத விருந்தின் வழியாக நமக்கு துணையாய் வரும் இறைவன் நம் ஆன்ம நோய்களை நீக்கி நமக்கு குணமளிக்கின்றார்.

    இப்படிப்பட்ட உன்னத உணவாம் இறைவனை இன்று முதன் முதலாக பெற இருக்கும் நம்முடைய பங்கின் குழந்தைகளுக்காக இத்திருப்பலியில் சிறப்பாக செபிப்போம். இறைவனின் துணையோடு, இறைவனை உணவாய் கொண்டு, இறைவனின் வாக்கில் புதிய பயணத்தை தொடங்க இருக்கும் இவர்களுக்கு இறைவன் என்னாலும் துணையாய் இருக்கவும், புனித சாவியோவை போல நற்கருணை பக்தியில் வளரவும் ஜெபிப்போம். மேலும், இறைவனின் வாக்கை உணவாக உட்கொண்டு, நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்வை இறைவன் காட்டும் பாதையில் நடத்தி , நல்ல குணம் பெற்று நலம் பெற இம் மகிழ்வின் கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்.


மன்றாட்டுகள்

1. நற்கருணை ஏற்படுத்திய எம் அன்பு இறைவா |

    உன் அன்பின் அடையாளமாக, நீர் கற்பித்த அன்பின் பகிர்வை நற்கருணை பகிர்வின் வழியாக அனுதினமும் கொண்டாடும் உம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், திருத்தொண்டர்கள் மற்றும் துறவியர் அனைவருக்காகவும் சிறப்பாக ஜெபிக்கின்றோம். இவர்கள் அனைவரும் நற்கருணையின் வழியாய் உன்னுடைய அன்பை அனுபவித்து, அவர்கள் அனுபவித்த அந்த அன்பை பிறரோடு பகிர்ந்திடவும், பிறருக்காய் வாழ்ந்திடவும் வேண்டிய பலத்தை நற்கருணை வழியாக தந்தருள வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


2. நல்ல மேய்ப்பனே எம் இறைவா!

    இவ்வுலகில் பல்வேறு சித்தாந்தங்களின் அடிப்படையில் மக்களை ஆளும் தலைவர்களுக்காகவும், அதிகாரிகளுக்காகவும் ஜெபிக்கிறோம். இவர்கள் தங்களைப் பின்பற்றும் மக்களை நல்ல வழியில் நடத்திடவும், தங்களுடைய வாழ்வின் சுயநல எண்ணங்களுக்காக மக்களை பயன்படுத்தாமல் இருக்கவும், மக்களின் மேம்பாட்டிற்காக உழைக்க வேண்டுமென்றும், மேலும் எம் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் வழியாக மக்களுக்கு உண்மையாக உழைக்கும் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுத்து, உன் அன்பின் பணியை ஆற்ற அவர்களுக்கு தேவையான ஞானத்தை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நலம் தரும் நற்கருணை நாயகனே எம் இறைவா1!

    இவ்வுலகில் நோய்களாலும், போர்களாலும் மற்றும் கொடிய இனவாதத்தாலும் பாதிப்படைந்து தங்களுடைய அன்றாட வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாமல் தவிக்கும் ஒவ்வொருவருக்காகவும் நாங்கள் மன்றாடுகிறோம். நீர் அன்று எவ்வாறு உம்முடைய அன்பை, நற்கருணையின் வழியாக இஸ்ரேல் மக்களுக்கும், உம்முடைய சீடர்களுக்கும் வெளிப்படுத்தினீரோ, அதேபோல் உம்முடைய உடன் இருப்பை இவர்களுக்கு வெளிப்படுத்தி அவர்களின் இன்னலான சூழல்களில் அவர்களுக்கு துணையாக நின்று, அவர்களின் ஆன்ம, உடல் மற்றும் மன நோய்களுக்கு நல்ல மருந்தாக அமைய வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. உறவுகளை உன்னத விருந்தின் மூலம் கட்டி எழுப்பும் எம் அன்பு இறைவா!

    உன் அன்பின் திரு அவையின் ஒரு பகுதியாம் எம்முடைய பங்கிற்காகவும் பங்கு மக்களுக்காகவும் மன்றாடுகின்றோம். திருப்பலியில் பங்கேற்று ஒரே பாத்திரத்தில் இருந்து நற்கருணை உட்கொள்ளும் நாங்கள் அனைவரும் ஒரே மக்கள் என்ற உணர்வைப் பெற்று எவ்வித வேறுபாடு இன்றி ஒற்றுமையில் நிலைத்திருக்கவும் ஆன்மீக வாழ்வில் வளரவும் மேலும் எம் பங்கு உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் நற்கருணை நாதரின் நலம் வீசி அவர்கள் அமைதியும் பக்தியிலும் வாழவும் அருள் புரிய வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.





தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25

 தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25 திருப்பலி முன்னுரை தவம், செபம் மற்றும் தியாகம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பயணிக்கும் தவக்காலத்தின் மூன்...