இறை வெளிச்சம் புனித திருப்பலி உதவியை வழங்குகிறது. புனித திருப்பலி முன்னுரை நீங்கள் இங்கே காணலாம்.

Monday, December 30, 2024

Mary the Mother of God and New Year Mass Introduction 2026

அன்னை மரியா இறைவனின் தாய் மற்றும் புத்தாண்டு விழா

01 – 01 – 2026

✦ திருப்பலி முன்னுரை

வாழ்க்கையில் மிளிர்ந்திட! வசந்தத்தை அளித்திட! வாட்டத்தை போக்கிட! வளமுடன் வாழ்ந்திட! வரும் ஆண்டை – இப்புத்தாண்டை வாழ்த்தி வரவேற்போம்.

அன்னை மரியா இயேசுவை கருவில் சுமந்து இறைவனை ஆராதித்தது போல, கிறிஸ்துவை மனதில் ஏற்று ஆராதிக்க வந்திருக்கும் சகோதர, சகோதரிகளே! இன்பம் பொங்கும் இந்நாளில் அன்னை மரியா இறைவனின் தாய் மற்றும் புது வருட பிறப்பு என்ற இரு பெரும் விழாவினை பெரு மகிழ்வுடன் கொண்டாடி கொண்டிருகின்றோம்;. ஒரு முழு ஆண்டை முழமையாக நிறைவு செய்து இன்னொரு புத்தாண்டில் காலடியெடுத்து வைக்கும் இத்தருணத்தில் நன்றி மற்றும் நம்பிக்கை என்ற இருபெரும் இறைப்பண்பை பெற்று அதன் துணையுடன் நடைபோட அழைக்கப்படுகின்றோம்.

கடந்த ஆண்டில் இறைவன் நமக்கு செய்த அனைத்து நன்மைகளையும் நினைவு கூர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். இறைவனின் தாயாகிய அன்னை மரியா, அமல உற்பவியாக இவ்வுலகில் தன்னை பிறக்க வைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக கிறிஸ்துவை கருவில் சுமந்து, பாவத்திற்கெதிரான பாடுகளின் பாதை உருவாகுவதற்கு காரணமாக அமைந்தார். அன்னை மரியாவைப் போல கடந்த ஆண்டில் நாம் பெற்ற நன்மைகளின் நன்றியை, நம்முடைய நன்மை பயக்கும் செயல்களால் வெளிப்படுத்த வேண்டிய தருணமிது.

மேலும், இறைவனின் துணையுடனும், அன்னை மரியாவின் பரிந்துரையுடன் நற்பாதையில் பயணிப்போம் என்ற நம்பிக்கையுடன் இப்புதிய ஆண்டில் அடியெடுத்து வைப்போம். கன்னி மரியாவை, இறைவனின் அன்னையாக உயர்த்திய பொழுது, இறைவனை முழுமையாக நம்பி ‘ஆகட்டும்’ என்று மொழிந்து இறை திட்டத்திற்கு இசைந்தார் அன்னை மரியா. அன்று, இறைவனை கருவெந்தி, மடியேந்திய தாய் இன்று நம்மை அரவணைக்க தயாராக உள்ளார்.

எனவே, இப்புத்தாண்டின் பெரும் மகிழ்வு நாளில் இறைவனுக்கு நன்றி செலுத்தி, இறை நம்பிக்கையுடனும், அன்னை மரியாவின் பரிந்துரையுடனும் புது வாழ்வை தொடங்குவோம். எதிர்நோக்கின் திருப்பயணிகளாக யூபிலி ஆண்டில் கற்ற விழுமியங்களை வாழ்வாக்கி, அன்னை மரியாவை மாட்சிபடுத்துவோம்;. இம்மீட்பின் கொண்டாட்டத்தில் பெருமகிழ்வுடன் பங்குகொள்வோம்.

✦ வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை (எண்ணிக்கை 6:22-27):
எண்ணிக்கை நூலில் இருந்து வழங்கப்பட்டுள்ள முதல் வாசகத்தில் இறைவன் தன்னுடைய ஆசீரை, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு ஆரோனின் வழியாக வழங்குகின்றார். ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக. அருள் பொழிவாராக, ஒளியை மிளிர செய்வாராக போன்ற நம்பிக்கை தரும் வார்த்தைகளுக்கு செவி கொடுத்து நம்முடைய புதிய ஆண்டின் பாதையில் திடத்துடன் பயணிக்க வேண்டிய உறுதியோடு இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை (கலாத்தியர் 4:4-7) :
இறைமகன் இம்மண்ணுலகில் பிறந்ததற்கான அர்த்தத்தை மிகச் சுருக்கமாக பவுலடிகளார் இந்த இரண்டாம் வாசகத்தில் கூறுகின்றார். பெண்ணிடம் பிறந்தவரான இறைமகன் இயேசு கிறிஸ்து, எவ்வாறு இறைவனின் மகனாகின்றார் என்றும், இயேசு கிறிஸ்து இறைவனை மகன் என்பதால் நாம் அவருடைய சகோதர சகோதரிகளாய், தந்தை கடவுளின் பிள்ளைகளாகின்றோம் என்ற மறைபொருளை விளக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செலி கொடுப்போம்.

✦ மன்றாட்டுகள்

  1. எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற கருப்பொருளினை மையமாக வைத்து, கடந்த ஆண்டு முழவதும் பயணித்த மற்றும் பயணித்துக் கொண்டிருக்கும்; திருஅவையின் அனைத்து உறுப்பினர்களையும் ஆசிர்வதித்தருளும். உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் இறைவனின் தாயகிய அன்னை மரியாவைப் போல் நம்பிக்கையில் என்றும் நிலைப் பெற்றிட தேவையான அருள் வரங்களை பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. புது வாழ்வு அளிக்க வல்ல வள்ளலே எம் இறைவா! கடுமையான போர்களாலும், இனக் கலவரங்களாலும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அனைத்து மக்களுக்காகவும் மன்றாடுகின்றோம். புலர்ந்திருக்கும் இப்புதிய ஆண்டில் அவர்களுக்கு தேவையான மன அமைதியையும், பொருளாதார தேவைகளையும் அளிந்து, அவர்களை தங்கள் வாழ்வின் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்புதவற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தருள வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.
  3. எங்களுக்கு துணை நிற்கும் எங்கள் அன்பு இறைவா! இப்புத்தாண்டில் ஆண்டில் நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலும் எங்களுடன் இருந்து, வழி காட்ட வேண்டுமென்று மன்றாடுகின்றோம். நாங்கள் எதிர்கொள்ளவிருக்கும் நல்லவைகளையும், தீங்குகளையும் சரியான முறையில் முறைப்படுத்தி எங்கள் வாழ்வில் மென்மேலும் வளமடைய எங்களுக்கு தேவையான அருள் நலன்களைத் தந்தருள வேண்டுமென்று, உம்மை மன்றாடுகின்றோம்.
  4. நெருக்கடியான வேளைகளில் எமக்கு அரணும், அடைக்கலமும் அளிக்கும் எம் இறைவா! கடந்த ஆண்டு முழுவதும் நீர் செய்த அனைத்து நன்மைகளுக்காகவும் நன்றி கூறுகின்றோம். இப்புத்தாண்டில் எங்களுடைய பங்கு, குடும்பங்கள் மற்றும் பணி புரியும் இடங்களை எல்லையில்லா வரங்களால் நிரப்பியருளும். எங்களுடைய வாழ்வில் நாங்கள் ஆன்ம அளவிலும், சமுக அளவிலும் மற்றும் பொருளாதார அளவிலும் முன்னேறிட எங்களுக்கு உதவிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  5. நேர்மையாளர்களை தேர்ந்து கொள்ளும் எம் இறைவா! நீதியின் பாதையில் நடப்பவர்களை எங்களின் தலைவர்களாக தேர்ந்து கொள்ள வெண்டிய ஞானத்தை வேண்டி மன்றாடுகின்றோம். பணம், புகழ் மற்றும் திரைக்கவர்ச்சி போன்ற தேவையற்ற மாயைகளைத் தவிர்த்து, தலைவர்களின் கொள்கைகள், திட்டங்கள் அனைத்திற்கும் மேலாக அவர்களுடைய நேர்மையை எடை போட்டு, மத, சாதிய பாகுபாடுகளைப் பாராட்டாத நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய அறிவாற்றலை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

Friday, December 27, 2024

இயேசு, மரியா மற்றும் யோசேப்பு திருக்குடும்ப பெருவிழா


இயேசு, மரியா மற்றும் யோசேப்பு திருக்குடும்ப பெருவிழா 


திருப்பலி முன்னுரை

திருக்குடும்பத்தின் உன்னதத்தை உணர்ந்து கொள்ள இவ்விறைப்பீடம் சூழ்ந்துள்ள சகோதர சகோதரிகளே! ஆண்டின் கடைசி ஞாயிறாகிய இன்று நம் தாயாம் திருஅவை இறைமகன்  இயேசு, அன்னை மரியா மற்றும் புனித யோசப்பின் திருக்குடும்பப் பெருவிழாவை கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கின்றது. இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் இறைவனை தந்தையாக விளங்குகின்றார். இப்பூவுலகின் அனைத்து உயிர்களும் இறைவனுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. எனவே, நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் ஆகின்றோம். இந்த இறை குடும்பத்திற்கு இறைவனே தலைவராக விளங்குகின்றார். விண்ணகத்திலிருந்து இறைத்திருவுளத்தை நிறைவேற்றிய இறைவன், மண்ணகம் வந்து தன் போதனைகளை போதிக்க மனிதராய் நம்மிடையே பிறந்தார். அப்படி தன்னுடைய மனித பிறப்புக்காக அவர்கள் தேர்ந்து கொண்ட உத்தம உள்ளங்கள் தான் அன்னை மரியாவும் புனித யோசேப்பும். பாவமில்லாமல் உற்பவித்த  அன்னை மரியாவும், இறை வெளிப்பாட்டால் தெளிவடைந்த புனித யோசிப்பும் மனிதராய் பிறத்த இயேசு பாலனை நன்னெறியில் நடத்தி மனித குல மீடபுக்கு காரணமாக இருந்தார்கள். ஒரு நல்ல குடும்பத்தின் பலனை அந்த சமுதாயம் அனுபவிக்கும் என்பார்கள். அதன்படி இயேசு பாலனின் திரு குடும்பம் இவ்வுலகிற்கே ஒளி கொடுத்தது. நம்முடைய குடும்பங்களும் திருக்குடும்பத்தை பிரதிபலிப்பாக இருக்கும் பொழுது நாமும் நம்முடைய சமுதாயத்திற்கு நம்மால் இயன்ற பலன்களை அளிக்க முடியும். எனவே, திருக்குடும்பத்தின் பண்புகளான தாழ்ச்சி, எளிமை, விட்டுக் கொடுத்தல், ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துதல் போன்ற பண்புகளை நம் இல்லத்தில் வளர்த்து, நம்முடைய குடும்பத்தை இறைவன் விரும்பும் திருக்குடும்பமாக மாற்ற இந்த மகிழ்வின் கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்.


வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

இறை மக்கள் சமுதாயத்தை கட்டி எழுப்ப இறைவன் அவ்வப்போது அவர்களுக்கான இறைவாக்கினர்களை தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருக்கின்றார்;. இந்த இறைவாக்கினர்கள் ஒருவரான இறைவாக்கினர் சாமுவேல் இஸ்ரேயல் மக்களின் நீதித் தலைவராக இருந்து அவர்களை பல ஆண்டுகள் வழி நடத்தினார். இறைவாக்கினர் சாமுவேலின் பிறப்பை பற்றியும் அவரை இறைவனுக்கு காணிக்கையாக அளித்ததை பற்றியும் கூறும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நம்முடைய இறைவன் நம் மீது எத்தனை அன்பு கொண்டுள்ளார் என்று நம்முடைய இயேசு பாலனின் பிறப்பு நமக்கு உறக்கச் சொல்கின்றது. கடவுளின் பிள்ளைகளாய் நம்மை மாற்ற, கடவுளின் பிள்ளையே இம்மண்ணில் மனிதராய் தோன்றி நம்மை நீதியின் பாதையில் நடத்திச் செல்கின்றார். அப்படி மண்ணில் தோன்றிய இயேசு பாலனின் போதனைகளை கடைபிடிக்கும்படி வலியுறுத்தும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.

மன்றாட்டுகள்

  1. இறைமகன் ஏற்படுத்திய மாபெரும் குடும்பமாகிய திருஅவையின் அனைத்து உறுப்பினர்களும், ஒரே குடும்பமாக இருந்து, இயேசு பாலன் காட்டும் அன்பின் பாதையில் தொடர்ந்து பயணிக்கவும், திருக்குடும்பத்தில் காணப்பட்ட இறைபண்புகளை இவ்வுலகெங்கும் எடுத்துரைத்து அமைதியான வாழ்வை அனைவருக்கும் அளிக்கவல்ல ஆற்றலை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
  2. நல்ல மேய்ப்பனே எம் இறைவா! இவ்வுலகில் பல்வேறு சித்தாந்தங்களின் அடிப்படையில் மக்களை ஆளும் தலைவர்களுக்காகவும், அதிகாரிகளுக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்கள் தங்களைப் பின்பற்றும் மக்களை நல்ல வழியில் நடத்திடவும், மக்கள் சமுதாயத்தை தங்களுடைய குடும்பமாக கருதி, மக்களின் மேம்பாட்டிற்காக உழைக்க தேவையான மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  3. உழைப்பின் உயர்வை அறிந்த எம் இறைவா! புனித யோசப்பை; போல கடினமாக உழைத்து இந்த சமுதாயத்தின் அனைத்து தேவைகளும் நிறைவேற்றும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். நாங்கள் எங்களுடைய பணியில் ஈடுபடும் பொழுது எந்தவித துன்பங்களும் எங்களை நெருங்காதபடியும் மேலும், எங்கள் பணியை சிறப்புடன் ஆற்ற தேவையான ஆற்றலையும் தந்தருளு வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 
  4. குழந்தைகளை விரும்பிய எம் அன்பு இறைவா! தலைமுறை இடைவெளியாலும், தகவல் தொழில் நுட்ப கருவிகளாலும் கட்டுண்டு தவிக்கும் எம் குழந்தைகளுக்கு, இறையரசின் மேன்மைகளை உணர்த்தும், நல்ல பண்புகனை கொண்ட வழிகாட்டிகளை அளித்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 
  5. திருக்குடும்பத்தை முழுமைப் பெறச் செய்த எம் இறைவா! எம் பங்கில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் திருக்குடும்பத்தைப் போல எம் பங்கிற்கும், சமுதாயத்திற்கும் நிறைந்த பலனை அளிக்க வேண்டுமென்றும், அதற்கு தேவையான ஆற்றல்களைக் இக்குடும்;பங்களை வழிநடத்துபவர்களுக்கு தந்து அவர்கள் ஆன்ம, உடல் மற்றும் பொருளாதார அளவில் மேம்பட வரமுருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

Friday, December 20, 2024

Christmas Mass Introduction 2025

கிறிஸ்து பிறப்பு திருப்பலி - 2025



திருப்பலி முன்னுரை

உன்னத்தின் இறைவன்

விண்ணகத்தின் அரியணை துறந்து

மண்ணகத்தின் மடியினில் தவழ

நம்மிடையே மலர்ந்துள்ளார்.

கிறிஸ்து பிறப்பின் பெருமகிழ்வில் கலந்திட இறைப்பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே !

உன்னதத்தின் மாட்சமிகு இறைவன், மண்ணகத்தில் இறை ஆட்சியை நிறுவ மனிதராய் நம்மிடையே பிறக்கும் நன்னாளே, கிறிஸ்துமஸ் பெருநாள். நம்மைப் படைத்த இறைவன் தம்முடைய அன்பை, அன்றாட வாழ்வின் கொடைகள் மூலம் நமக்கு வெளிப்படுத்துகின்றார். நம்மை தம் கண்ணின் மணிபோல காக்கும் அதே இறைவன், அன்பின் மிகுதியினால் தன்னையே இத்தரணிக்கு தானமாக அளித்தார். கடவுள் நிலையை இறுகப்பற்றிக் கொள்ளாமல் இறையியல்புடன் கூடிய, குறை நிறைந்த மனிதராக இம்மண்ணில் பிறக்கின்றார்;. இருப்பினும், இறையியல்பு மற்றும் இறை வேண்டலின் ஆற்றலுடன் குறைவுடைய மனித வாழ்வை நிறைவுள்ள வாழ்வாக எப்படி மாற்ற முடியும் என்று தன் வாழ்வால் அறிவித்தார். பிறரன்பு, தாழ்ச்சி மற்றும் இறை வேண்டல் மூலம் நம்முடைய வாழ்வின் போக்கை போற்ற மாற்ற முடியும் என்ற நமக்கு எடுத்துகாட்டுகின்றார்;. 

மனிதராய் பிறந்த இயேசு மாளிகையைத் தேர்ந்துகொள்ளவில்லை, மாட்டிடைக் குடிலைத் தேர்ந்துகொண்டார். அரசர்களுக்கு ஆசி வழங்கவில்லை, ஆநிரை காக்கும் ஆயர்களுக்கே காட்சியளித்தார். ஏனெனில், கிறிஸ்து ஏழைகளையும், ஏழ்மையையம் மற்றும் எளிமையையும் தன் வாழ்வாக கருதினார். இறை வேண்டலின் துணையுடனும், எளிமையின் பலமுடன் பகிர்வின் மூலம் பிறரன்பை போதித்தார்.  

எனவே, இயேசு பாலனின் பிறப்பு நம்மிடத்தில் இருக்க வேண்டிய தாழ்ச்சியையும், நாம் பிறரிடத்தில் கொள்ள வேண்டிய அன்பையும் கற்பிக்கின்றது. இயேசு இவ்வுலகத்தின் உணவாக தீவனத்தொட்டில் பிறந்து தன்னுடைய அன்பை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். ஆந்த அன்பை பெற்று, அதை பிறருடன் பகிர அழைக்கும் இப்பெருமகிழ்வின் கொண்டாட்டத்தில் இணைவோம்! மகிழ்வோம்.

கிறிஸ்து பிறப்பு திருப்பலி – 25-12-24

வாசக முன்னுரைகள்

இரவு திருப்பலி

முதல் வாசக முன்னுரை (எசா 9 : 2-4, 6-7)

தொடர் போர்களாலும், பஞ்சத்தாலும் வாடிய இஸ்ரேயல் மக்களை எதிர்வரும் மீட்பரின் வருகைக்காக தயார் செய்யும் இறைவாக்கினர் எசாயாவின் இறைவாக்குகள் இன்றைய முதல் வாசக்கத்தில் இடம் பெற்றுள்ளது. நாம் செய்த பாவத்தால், இறைவன் நம்மை கைவிட்டுவிட்டார் என்று துவண்டு கிடந்த இறைவனின் மக்களை, அவர்களுக்காக புதிதாக தோன்றவிருக்கும் புது அரசர் நினைத்து மகிழ்ந்து அக்களிக்க அழைக்கும் இம்முதல் வாசகத்திற்கு ஆவலுடன் செவி கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை ( தீத் 2 : 11-14)

இறைமகன் இயேசுவின் போதனையால் ஈர்க்கப்பட்ட பலர், கிறிஸ்தவ நம்பிக்கையில் நிலைத்து வாழ்ந்தனர். இயேசுவின் பாதைகளை தமதாக்கிக் கொண்டு பயணிக்க தொடங்கினர். இயேசுவின் பெயரால் திருமுழுக்கு பெற்றனர். அவ்வாறு திருமுருக்கு பெற்ற அனைவரும், இறைவன் மீது எவ்வாறு பற்று கொள்ள வேண்டும் என்று கற்பிக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.

பகல் திருப்பலி 

முதல் வாசக முன்னுரை (எசா 52 : 7-10)

இறைவன் தம் இறைவாக்கினர்கள் மூலம் அளித்த இறைவாக்குக்கள் ஒருபோதும் பொய்த்ததில்லை. தன்னுடைய மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், அவர்களை மீட்பின் பாதையில் வழிநடத்திச் செல்லவும் அவர்களுக்கென்று ஒரு அரசரை அனுப்பிய இறைவன் தம் இறைவாக்கினர்கள் மூலம் வரவிருக்கும் மீட்பரைப் பற்றி முன்னுரைக்கின்றார். எனவே, மீட்பரின் வருகைப் பற்றியும், அவரின் வலிமையைப் பற்றியும் இம்முதல் வாசம் அளிக்கும் விளக்கங்களுக்கு கவனமுடன் செவி கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை (எபி 1 : 1 – 18)

இறைவன் பழைய ஏற்பாட்டில பல்வேறு வடிவங்களிவும், இறைவாக்கினர்களின்; மூலமாக மக்களிடம் உறையாடினார் தன் அன்பின் மிகுதியால் மனித உருவெடுத்து மக்களிடையே மனிதராக தோன்றிய இறைமகன், வானதூதர்களை விட மேலானவர். இறையாட்சியை நிறுவியதன் வழியாகவும், தாம் கொண்டுள்ள இறை இயல்பின் காரணமாக தந்தையின் மகனாக இயேசு விளங்குகின்றார் என்ற மறையுண்மையை உணர்த்தும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவி கொடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ஏழைகளைத் தேடிச் சென்ற எம் இறைவா! விளிம்பு நிலை மக்களை தேடிச் சென்று தேற்றும் உன் திரு அவையின் அனைத்து உறுப்பினர்களுக்காகவும் மன்றாடுகிறோம். கிறிஸ்து பிறப்பில் மகிழ்வு கொள்ளும் நாங்கள், கிறிஸ்து பிறந்ததன் நோக்கத்தை நிறைவேற்றவும் எளியவர்களுக்காக வாழவும் வேண்டிய வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

2. தாழ்ச்சியின் உருவே எம் இறைவா! தேவையற்ற ஆடம்பர நிகழ்வுகளிலும், மக்களுக்கு உபயோகமற்ற திட்டங்களிலும் எம் நாட்டுத் தலைவர்கள் பணத்தை வீணடிக்காமல், தொலைநோக்குடைய நல்ல திட்டங்களை தீட்டி, இயேசு பாலன் கொண்டு வந்த நீதியின் பாதையில் மக்களை வழிநடத்தி, அவர்கள் வாழ்வில் உயர்வடையச் செய்ய தேவையான மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


3. திருக்குடும்பத்தின் நாயகனே எம் இறைவா! இயேசு பாலனின் பிறப்பால் திருக்குடும்பத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி எங்கள் இல்லங்களில் ஏற்படவும், எங்கள் குடும்பங்களில் உள்ள தந்தைகளும், தாய்களும் மற்றும் பிள்ளைகளும் திருக்குடும்பத்தை பிரதிபலிக்க வேண்டுமென்றும், திருக்குடும்பத்தில் உள்ள தியாக உணர்வும், பரசபர அன்பும் எங்கள் குடும்பங்களில் மேலோங்க தேவையான இறை ஞானத்தை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

4. நம்பிக்கையை வலுப்படுத்தும் எம் இறைவா! இறை வேண்டலில் ஈடுபட்டு, இறைநம்பிக்கையில் வலுபெற இறைபீடம் சூழ்ந்துள்ள எங்கள் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இயேசு பாலனின் பிறப்பில் நம்பிக்கைக் கொண்ட நாங்கள், இறைவன் காட்டும் புதுப்பாதையில் பயணிக்கவும், இயேசுவோடு சேர்ந்து புதுவாழ்வு பெறவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


5. ஞானத்தின் ஆதாரமே எம் இறைவா! இளைஞர்களும், இளம் பெண்களும் தங்களுடைய வாழ்வில் கிறிஸ்து பாலனின் ஆசிரை உணர்ந்திட உம்மை மன்றாடுகின்றோம். தவறான வழிகாட்டுதல்களால் தங்கள் வாழ்வை சிதைத்து கொள்ளாமல், தங்கள் வாழ்வின் குறிக்கோள்களை நோக்கி அயராது உழைக்க வேண்டிய அருள்வரங்களை இவர்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 



Christmas Mass Introduction 2025
Tamil Mass Introduction
Sunday Mass Introduction
Irai Velicham Mass Introduction
Mass Introduction PDF


Thursday, December 19, 2024

திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு – 22-12-24

திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு – 22-12-24


திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு – 22-12-24

திருப்பலி முன்னுரை

இறைவனின் பிறப்பில் மகிழ்வில் பங்கு கொள்ள, தங்களையே தயார் செய்ய வந்துள்ள சகோதர சகோதரிகளே! நாம் அனைவரும் இன்றைய நாளில் திருவருகை காலத்தின் நான்காம் வாரத்தில் காலடி எடுத்து வைக்கின்றோம். திருவருகைக்காலத்தின் நான்காம் ஞாயிறு அன்பு என்ற இறை பண்பை மையமாக வைத்து நம்மை சிந்திக்க அழைக்கின்றது. இறைவன் தன்னுடைய அன்பை படைப்புகள் வாயிலாக வெளிப்படுத்துகின்றார். மனிதன் தவறிழைத்து தவறிச் சென்ற வேளையிலும் இறைவன் ஒரு பொழுதும் அன்பு செய்யத் தவறியதில்லை. அந்த அன்பின் உச்சமாக தன்னுடைய ஒரே மகனை இவ்வுலகிற்கு அளித்தார். தந்தையின் வலப்புறம் வீற்றிருந்த இறை மகனும் மனித உருவில்; குழந்தையாய் நமக்காக பிறந்தார். இறைவன் ஏற்றுக் கொண்ட இத்துன்பங்கள் வழியாக நம் மீது அவர் கொண்ட அன்பை நமக்கு வெளிப்படுத்துகின்றார். இதைத்தான் அன்னை தெரசா அவர்கள், நம்மிடத்தில் உள்ளவற்றை அன்பு மிகுதியால் பகிரும் பொழுது, நாம் துன்பப்படும் வரை அதை நிறுத்த கூடாது என்கின்றார். இறைமகன் இயேசு தாழ்ச்சியை தனதாக்கிக் கொண்டு இறை நிலையை விட்டு மனித நிலையை ஏற்றதற்கான ஒரே காரணம் அவர் நம் மீது கொண்ட அன்பு. நாமும் தாழ்ச்சியை நமதாக்கிக்கொண்டு, பிறருக்கு உதவும் வகையில் இயேசு காட்டி அன்பின் பாதையில் பயணிக்க இந்த அன்பின் பகிர்வில் பக்தியுடன் பங்கெடுப்போம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

எப்ராத்தா, பெத்லகேமிலிருந்து இஸ்ரயேலின் மீட்பரும் உலகின் ஆண்டவரும் தோன்றுவார் எனக் கூறுகின்றன. மீட்பரின் வருகை அமைதியும் மீட்பும் தரவல்லது. எளிய சிறு இடத்திலிருந்து சிறியதாய் தோன்றும் இறைவன் எண்ணற்ற பல மாற்றங்களை ஆற்ற வல்லவர் என்ற நமபிக்கை அளிக்கும் இம்முதல் வாசகத்திற்கு பக்தியுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இயேசு கிறிஸ்துவின் வருகையால் பழைய ஏற்பாட்டின் பலிகளுக்குப் பதிலாக ஒரு புதிய ஏற்பாடு உருவாகியது. எபிரேயருக்கு எழுதிய இந்த வசனங்கள் கிறிஸ்துவின் தியாகத்தால் இறைவனின் திருவுளம் நிறைவேறி, மனிதர்கள் தூய்மையடைந்ததை அறிவிக்கின்றன. மீட்புப் பெறுவதற்கான வழிகளைக் கற்பிக்கும் இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

மன்றாட்டுகள்

  1. பரிபூரண அன்பை பொழியும் எம் இறைவா! உம் அன்பின் போதனைகளை உலகெங்கும் கொண்டு சென்றிட நீர் ஏற்படுத்திய திருஅவையின் உறுப்பினர்கள் அனைவரும், உம்முடைய பிறப்பிற்காக தங்களை தயார் படுத்தவும், தங்களிடம் உள்ள உயர்ந்த பண்புகளை பிறருக்கு உகந்த வகையில் பயன்படுத்திடவும் தேவையான வரங்களை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  2. அன்பின் ஆழத்தை எங்களுக்கு காட்டிய எம் இறைவா! எங்களிடத்தில் உள்ள அனைத்து அன்புகளும், எங்களுடைய பகிர்வின் வாயிலாக வெளிப்படவும், உம்மையே நாங்கள் முன் மாதிரியாக கொண்டு, அன்பின் பிரதிபலிப்பாக மாறாவும், நீர் காட்டும் அன்பின் பாதையில் தொடர்ந்து பயணம் செய்யவும் தேவையான வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  3. அமைதியை ஏற்படுத்த வந்த எம் இறiவா! சிரியாவிலும்; மற்ற உலக நாடுகளுக்கிடையில் நடைபெறும் போர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைதியான வாழ்வளிக்கவும், இந்த நிலையை எதிர்கொள்ள உம்முடைய அமைதியும் அன்பையும் பொழிந்து, நீரே அவர்களுக்கு அறுதலாக இருக்க வேண்டுமென்று எம்மை மன்றாடுகின்றோம்.
  4. அனைவருக்கும் ஆறுதலளிக்கும் எம் இறைவா, இயற்கை பேரழிவுகளால் தங்கள் வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து வாழும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து, அவர்களின் இயல்பு வாழ்க்கை;க்கு மீண்டும் திரும்பிட தேவையான உதவிகளைச் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  5. தேடிச் சென்று உதவும் உம் இறைவா! உலகெங்கும் பொருளாதார நெருக்கடிகளாலும், வறுமையாலும் வாடும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்களுக்கு தேவையான உதவிகளை ஆற்றிட வேண்டிய நல்ல மனதையும், சமமான பொருளாதார வளர்ச்சியை நோக்கி எம் சமுகத்தை வழிநடத்திட வேண்டிய வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

Friday, December 13, 2024

திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு – 15-12-2024

திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு – 15-12-2024



திருப்பலி முன்னுரை

எளிய வடிவில் ஆழமான விசுவாசத்தைக் கொண்டிருந்த இடையர்களுக்கு தோன்றிய வான தூதர்கள் பெருமகிழ்வு தரும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கின்றோம் என்று கிறிஸ்துவின் பிறப்பை அறிவித்தார்கள். வறண்டு போன இதயங்களை வளமிகு இதயமாக மாற்ற இறைமகன் இயேசு கிறிஸ்து இவ்வுலகில் பிறந்து, இறைவனின் ஈடில்லா கொடையான மகிழ்ச்சியை நமக்கு தருகின்றார். இறைவனில் நம்பிக்கை கொண்டு, அமைதியின் பாதையில் பயணித்தால் இறைவன் தரும் மகிழ்ச்சியை நாம் பெற முடியும். திருவருகைக்காலத்தின் மூன்றாம் வாரமும், இறைவன் அருளும் மகிழ்ச்சியை மையமாக வைத்து நம் வாழ்வை சீர்படுத்த நம்மை அழைக்கின்றது. இன்றைய வாசகங்களும் இதைனையே எடுத்துரைக்கின்றன. இறைவன் தரும் மகிழ்ச்சியை நாம் எவ்வாறு பெற்று அக்களிக்க வேண்டும் என்று முதல் இரண்டு வாசகங்களும் கூறுகையில், நற்செய்தி வாசகம் நாம் அந்த மகிழ்வை பெறுவதற்கான வழியை காட்டுகின்றது. நாம் நம்மிடத்தில் உள்ளவற்றை பிறரோடு பகிர்ந்து வாழ்வதன் மூலம், நம்மை நிலைகுலையச் செய்யும் பயத்தை துறந்து மகிழ்வை பற்றி கொள்கின்றோம். மாட்டு தீவனத் தொட்டியில் பிறந்த இயேசு கிறிஸ்து தன்னையே இவ்வுலகத்திற்கு உணவாக பகிர்ந்தளித்ததன் மூலம் இறைவன் தரும் நிலையான பெரு மகிழ்வில் பங்கெடுத்தார். நாமும் நம்மிடம் உள்ள நல்ல குணங்களையும், தேவைக்கு அதிகமான செல்வத்தையும் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் பொழுது இறைவன் தரும் பெருமகிழ்வில் பங்கு கொள்ள முடியும். எனவே பகிர்வின் பண்பை நம் இயல்பாக மாற்ற இந்த மகிழ்வின் கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்.

கிறிஸ்துமஸ் ரீத் - மகிழ்ச்சி முன்னுரை

நம்பிக்கையும் அமைதியும் வலுப்பெற்ற இடத்தில் மகிழ்ச்சி குடிகொள்ளும். திருவருகை காலத்தின் மூன்றாம் வாரத்தில் மகிழ்ச்சி என்று இறை வரத்தை பற்றி சிந்திக்கவும் அதை பெறுவதற்காகவும் நாம் அழைக்கப்படுகின்றோம். இறைவனின் எல்லையில்லா அன்பை நாம் பெரும்பொழுது இறைவனின் பெருமகிழ்வில் பங்கெடுக்கின்றோம். இறைவனின் எல்லையில்லா அன்பை பெறுவதற்கான ஒரே வழி, இறைவன் அளித்த இறையன்பு மற்றும் பிறரன்பு கட்டளைகளை பின்பற்றுவதே. நாம் நம் அயலாரை நேசித்து, அவரோடு பகிர்ந்து வாழும் பொழுது இறைவன் நம் மீது அன்பு கூறுகின்றார். இவ்வாறாக, அன்பு கூறும் இறைவன் நமக்கு மகிழ்ச்சியை தருகின்றார். இறைவன் தரும் பெரு பெரு மகிழ்வில் பங்கெடுக்க நம்மை நாம் தகுதியாக்கவும், அதன் மூலம் நம் வாழ்வில் ஒளி பெறுவதன் அடையாளமாக இம்மூன்றாம் திரியாகிய மகிழ்வின் திரியில் ஒளியேற்றி நம் வாழ்வை பொலிவடையச் செய்வோம் இறைவன் தரும் ஆசிகளை நிறைவாக பெறுவதற்காக முழு மனதுடன் ஜெபிப்போம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

இறைவாக்கினர் செப்பனியா எழுதிய நூலிளிருந்து கொடுக்கப்பட்டுள்ள முதல் வாசகத்தில் இறைவாக்கினர் அவர்கள், மக்களுக்கு தைரியத்தையும், மகிழ்ச்சியையும் வழங்கும் வார்த்தைகளை பகிர்கின்றார். அஞ்சாமை, நம்பிக்கை, மற்றும் மகிழ்ச்சியை வாழ்வில் அளிக்கவல்ல இவ்வார்த்தைகள், இறைவனின் அன்பையும் அருளையும் நமக்குள் உறுதியூட்டுவதற்காய் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

ஆண்டவரில் இணைந்த மகிழ்ச்சி, நன்றியுடன் கூடிய இறை வேண்டல், மற்றும் அஞ்சாமையை ஆகியவற்றை வளியுறுத்தும் இவ்விரண்டாம் வாசகம், கடவுளின் அமைதியானது நம் உள்ளத்தையும் மனத்தையும் காத்திடும் என்பதைக் கூறுகின்றன. இறைவனின் பிறப்பில் மகிழ்வதற்காய் நமக்கு அழைப்பு விடுக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவிகொடுப்போம்.

மன்றாட்டுகள்

  1. மகிழ்வை மணம் பரப்பச் செய்ய திருஅவையை ஏற்படுத்திய எம் இறைவா! திருஅவையினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் நற்செய்தியை பரப்பவும், அன்பும் அமைதியும் நிறைந்த வாழ்வை மேற்கொள்ளவும் அவர்களுக்கு உம் அருளை அளித்து, ஒருமைப்பாட்டில் வாழ வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  2. நீதியுடன் உலகை ஆளும் எம் இறைவா! உலகத் தலைவர்கள் அனைவரும் நீதியுடன் மக்களின் நன்மைக்காக செயல்படவும். அவர்களுக்கு தெய்வீக அறிவும் சக்தியும் அளித்து, மகிழ்ச்சியுடன் வாழவும், பிறரின் மகிழ்ச்சிக்காக உழைக்கவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  3. மகிழ்வை அளிக்கவல்ல எம் இறைவா! எங்கள் இதயங்களில் மகிழ்ச்சி மலர்ந்து, அன்பும் அமைதியும் நிறைந்த வாழ்வை வாழந்திடவும், எங்கள் இதயத்தில் குடிகொள்ளும் மகிழ்வை, பிறருடன் பகிர்ந்து வாழும் பக்குவத்தை தந்தருள வேண்டுமென்றும், உம் அருளால் வாழ்வில் மகிழ்ச்சி பரவி, அமைதியில் வாழ வரமருள வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகிறோம்.
  4. மகிழ்வின் மகிமையை உணர்த்த குடும்பங்களை கட்டியெழுப்பும் எம் இறைவா! அனைத்து குடும்பங்களுக்கும் மகிழ்ச்சி மற்றும் அமைதியையும் அளித்து, அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அன்பும் பரிவும் கொண்டு வாழவும், தங்கள் உறவுகளில் ஒருமைப்பாட்டுடன் இருக்கவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  5. இயற்கையை ஆளுகை புரியும் எம் இறைவா! எங்களுக்கு வேண்டிய மழையை தந்தமைக்காக உமக்கு நன்றி கூறும் இவ்வேளையில், வரவிருக்கும் நாட்களிலும் போதிய மழயைப் பெற்று, இயற்கையுடன் இணைந்து வாழம் ஆற்றலைத் தந்தருள வேண்டுமென்றும், கன மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகள் புரிந்திட வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகின்றோம்.

Thursday, December 5, 2024

திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு 08-12-2024

திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு 08-12-2024



திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு 08-11-2024

திருப்பலி முன்னுரை

கிறிஸ்துவின் வருகைக்கான தயாரிப்பில் இருக்கும் நாம், திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிறில் அமைதி என்ற இறைவனின் பேரருளை மையமாகக் கொண்டு சிந்திக்க அழைக்கப்படுகின்றோம். அமைதி என்பது, நம் அகத்திலிருந்து பிறக்கின்றது என்கிறார் புத்தர். உண்மையில், சமுக பழுமைவாதத்தாலும் உலக மாயைகளாலும் நாம் உண்மையான அமைதியை அடைய முடியாது. பள்ளங்கள் நிறைந்த இந்த பாதையை சமன்செய்யவே, இயேசு பாலன் நம் அகத்தின் அமைதியை அலங்கரிக்க நம்மிடையே பிறக்கிறார். எவ்வித பிரச்சனைகளுமின்றி, சண்டை சச்சரவுகளும் இல்லாமல் வாழ்வது முழமையான அமைதி அல்ல. முழுமன நிறைவுடன், இறைவனோடு இணைந்த நிலையில் வாழ்வதே அகநிலை அமைதியாகும். மனிதர்கள் தங்கள் வாழ்வின் பிரச்சனைகளை பணம், பதவி மற்றும் உலக இன்பங்கள்  மூலமாக திர்வு கண்டு அமைதி அடையலாம் என்று கருதுகின்றனர்.  உலக நாடுகள் தங்களின் எல்லைகளில் உயரக கருவிகளையும், ஆயுதங்களையும் கொண்டு துப்பாக்கி மொழியினால் அமைதியை நிலைநாட்ட முயற்சிக்கின்றனர். உண்மையான அமைதி என்பது நாம் ஒருவர் மற்றவரிடத்தில் கொண்டுள்ள அன்பின் மூலமாகவே முழுமை பெறும். அமைதி இழந்த இவ்வுலகிற்கு அமைதியை கொணர வந்த பாலன் இயேசுவின் புன்னகையின் மலர்ச்சியைப் போல் நம் வாழ்வில் அமைதி மலர வேண்டி, இந்த அகஅமைதி அளிக்க வல்ல உயர்வின் பலியில் பக்தியுடன் பங்கெடுப்போம்.

கிறிஸ்துமஸ் ரீத் - அமைதி முன்னுரை

திருவருகைக்காலத்தின் இரண்டாம் வாரத்தில் இயேசு பாலன் அளிக்கும் அமைதி என்னும் கொடையை பெற்றுக் கொள்ள நம்மையே நாம் ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். கிறிஸ்துவினுடைய பிறப்பு, சமூகத்தின் கடைநிலையானவர்கள் என்று கூறப்பட்ட இடையர்களுக்குதான் முதலில் அருளப்பட்டது. இயேசு பாலனின் ஆசிரும் அவர்களுக்குத்தான் முதலில்  வழங்கப்பட்டது. ஏனெனில், கிறிஸ்து இவ்வுலகிற்கு கொண்டு வரும் அமைதியானது எளியவர்களுக்கானது. திருவருகைக்காலத்தின் முதல் வாரத்தில் நம்முடைய நம்பிக்கை உறுதிப்படுத்திய நாம் இரண்டாம் வாரத்தில் இறைவன் அருளும் அமைதியை பெறுவதன் அடையாளமாக அமைதியின் திரியை ஏற்றி இவ்வாரம் முழுவதும் இறைவன் அருளும் அக அமைதியை நம் ஆடையாக ஏற்றுக் கொள்ள சிறப்பாக வேண்டி ஜெபிப்போம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

பாருக்கு நூலிளிருந்து வாசிக்கப்படும் முதல் வாசகம்; எருசலேமின் மறுமலர்ச்சியையும், கடவுளின் மாட்சியிலும் இரக்கத்திலும் அது அடையும் உயர்வையும் எடுத்துரைக்கிறது. பகைவரால் சிதறிய இஸ்ரேயல் மக்களை கடவுள் திரும்ப அழைத்து, நீதியுடனும் அமைதியுடனும் புதுப்பாதையில் நடத்திடுவார் என்ற நம்பிக்கையும், இறைவனின் மக்களை இறைவன் கைவிடுவதில்லை என்ற உறுதியையும் அளிக்கும் இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

திருத்தூதர் பவுல், பிலிப்பியர்களின் நற்செய்திப் பணியில் காணப்படும் உறுதியையும் கடவுளின் கருணையையும் புகழ்ந்து எழுதுகிறார். அவர் அவர்களுக்கான தனது மன்;றாட்டுகளையும், ஆவலையும் பகிர்ந்துகொள்கிறார். அன்பிலும் அறிவிலும் மேன்மேலும் வளர்ந்து, குற்றமற்றவர்களாக நேர்மையுடன் வாழ்ந்து, கிறிஸ்துவின் நாளுக்கென்று நீதியின் செயல்களால் நிரம்பியவர்களாக இறைவனை மகிழ்விக்கவே வாழ வேண்டும் என்ற பவுலின் உள்ளக் குரலை இவ்விரண்டாம் வாசகத்தில் வாசிக்கக் கேட்போம்.

மன்றாட்டுகள்

  1. அமைதி இழந்து தவிக்கும் வேளைகளில் ஓடி சென்று உதவும் உம்; திருஅவையின் அனைத்து உறுப்பினர்களும் நீர் கற்றுத் தந்த அமைதியின் பாதியை இம்மண்ணுலகில் நிறுவிடவும், உன் பிறப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் எங்கள் அனைவர் வாழ்விலும் அமைதி மலரவும் வரமருள வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
  2. பல்வேறு கலவரங்களிலும், வன்முறையிலும் தங்கள் வாழ்க்கையை இழந்த அனைவருக்காகவும்  மன்றாடுகிறோம். அமைதியிழந்து அகதியாய் தவிக்கும் இவர்களுக்கு நீரே ஆறுதலாக இருந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் மனக்காயங்களுக்கு மருந்தாகவும் இருக்க வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்
  3. எங்கள் குடும்பங்கள் அனைத்தும் திரு குடும்பத்தை பிரதிபலித்து, திருக்குடும்பத்தில் நிலவிய அன்பு, அமைதி மற்றும் பரிவு போன்ற இறை மதிப்பீடுகளில் மேலோங்கவும், கிறிஸ்துவின் பிறப்பால் திருக்குடும்பம் நிறைவு பெற்றது போல, கிறிஸ்துவின் வருகையால் எங்களின் ஒவ்வொருவரின் குடும்பமும் நிறைவு பெற வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. கிறிஸ்துவின் அன்புப் பணியை உலகெங்கும் ஆற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்காவும் மன்றாடுகின்றோம். இவர்களுக்கு நீரே துணையாக இருக்க வேண்டுமென்றும், மேலும் இவர்கள் செய்யும் பணியை தொடர்ந்தாற்ற தேவையான இறை அழைத்தல்களை எங்கள் பங்கில் உருவாக்கி தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  5. எங்களை அதிகமாக நேசிக்கும் அன்பு இறைவா! இறைவனே மனிதனாக பிறந்து இயற்கையின் அங்கமானதை நாங்கள் உணர்ந்து, இயற்கையுடன் இணைந்து வாழ எங்களுக்கு தேவையான அறிவையும், பருவநிலை மாற்றத்தோடு இணைந்து வாழும் ஆற்றலையும் எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..

Lent 3rd Sunday A - தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

MAR 08 2026 தவக்காலம் மூன...