Thursday, October 24, 2024

பொதுக்காலம் 30-ஆம் ஞாயிறு 27-10-2024

பொதுக்காலம் 30-ஆம் ஞாயிறு 27-10-2024

பொதுக்காலம் 30-ஆம் ஞாயிறு 27-10-2024

திருப்பலி முன்னுரை

நம்மிடத்தில் உள்ள குறைகள் தான், நாம் நிறைவுள்ள இறைவனோடு ஒன்றிணைவதற்கான முதன்மையான காரணம். வளமையான வாழ்வு வாழ்பவர்களின் பக்கத்தில் இறைவன் இருப்பதை விட, வலி நிறைந்த வாழ்க்கையை வாழ்பவர்களின் உள்ளத்தில் இருக்கின்றார் என்பது நிதர்சனம். நம் வாழ்வில் நாம் வலிகளை சந்திக்கின்றோம் என்றால் இறைவன் நம் உள்ளத்தில் குடி கொண்டுள்ளார் என்று பொருள் கொள்ளலாம். ஏனெனில், நம்மிடத்தில் உள்ள குறையை நிறைவு செய்ய, இறைவனே நேரடியாக நம்மை தேடி வருகின்றார். இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைப்பது போல இறைவன்தாமே நலிவுற்றவர்களின் ஆதரவாக இருக்கின்றார். உடலளவிலும், உள்ளத்தளவிலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இயேசு கிறிஸ்து குணமளிக்கின்றார். நம் ஒவ்வொருவரிடத்திலும் உள்ள குறையை மற்றவரிடத்தில் உள்ள நிறைவை வைத்து சரிசெய்து செய்ய வாழ்வில் நிறைவுகாண இறைவன் நம் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றார். பார்வையற்றோர், முதியோர் மற்றும் இயல்பான வாழ்க்கையை வாழ இயலாதவர்கள் அனைவருக்கும் உதவி செய்ய இறைவன் நம்மை அழைக்கின்றார். இந்த அழைப்புக்கு நம்மையே நாம் தகுதி ஆக்கிக் கொள்வதற்கு நாம் உறுதியான இறை நம்பிக்கை பெற்றவர்களாக இருக்க வேண்டும். எனவே, இயேசுவைப் போல இயலாதவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்யும் மனதையும், அதற்கு தேவையான ஆழ்ந்த இறை நம்பிக்கையும் வேண்டி இந்த அன்பின் கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம். 

வாசக முன்னுரைகள் 

முதல் வாசகம் முன்னுரை 

இறைவாக்கினர்களில் மிகவும் முக்கியமானவராக கருதப்படும் இறைவாக்கினர் எரேமியா, இஸ்ரேயலிருந்து சிதறடிக்கப்பட்ட இஸ்ரேல் மக்கள் பெருங்கூட்டமாய் இறைவனை நோக்கி வருவர் என்றும், அவர்களில் பார்வையற்றோரும், கால் ஊனமுற்றோரும், கருவுற்றோரும், பேருகால பெண்களும் அடங்கி இருப்பர் என்று இறைவாக்குரைப்பதை இம்முதல் வாசகத்தில் வாசிக்க கேட்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை 

திருமுழுக்கு பெற்ற நம் அனைவருக்கும் வழங்கப்பட்ட அழைத்தல் வாழ்வானது நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டதல்ல. இறைவனே, தன்னுடைய இறைபணியை ஆற்றுவதற்கு தேவையான பணியாளர்களை தேர்ந்தெடுக்கின்றார். அவ்வகையில் தன்னுடைய பணியை செய்ய இறைமகன் இயேசு கிறிஸ்துவை இறைவன் அழைத்தார் என்ற கூற்றை விளக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம். 


மன்றாட்டுகள்


1. சிதறிய உள்ளங்களை சீர்படுத்தும் எம் இறைவா! மனதளவில் காயப்பட்ட உம்முடைய பிள்ளைகளாகிய எங்களை நிறைவாக ஆசீர்வதியும் , பார்வையற்ற பார்த்தல்மேயோவின் கண்களுக்கு ஒளி தந்து ஆசீர்வதித்ததை போல, நொறுங்கி எங்கள் உள்ளங்களை சீரமைத்து ஒளிதர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 


2. வழிநடத்தும் எம் இறைவா, எங்களை வழி நடத்தும் திரு அவை  மற்றும் அரசியல் தலைவர்களுக்காக மன்றாடுகின்றோம். தங்களுக்கு அளிக்கப்பட்ட பதவியை பிறருக்கு பணி செய்ய கிடைத்த வாய்ப்பாய் கருதி பணியாற்றிட தேவையான வரங்களைத் இவர்களுக்கு தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்.


3. காயப்பட்ட ஆடுகளை தேடிச் செல்லும் இறைவா! சமூகத்தில் உடலளவிலும், உள்ளத்தளவிலும் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும், நாங்கள் உதவியாக இருக்கவும், அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதற்கும் எங்களுக்கு தேவையான வரங்களை தந்துள்ள வேண்டும் என்று உண்மை மன்றாடுகின்றோம்.


4. தேடிச் சென்று உதவும் இறைவா! பல்வேறு பிரச்சனைகளால் காப்பகங்களில் இருக்கும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்களுக்கு எங்களால் இயன்ற உதவிகளை நாங்கள செய்;யவும், எங்கள் இல்லங்களில் உள்ள குறைபாடுள்ளவர்களை நன்றாக கவனித்து கொள்ளதற்கும் தேவையான வரங்களை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


5. துன்புறும் ஊழியனே எம் இறைவா ! பேரிடர் காலங்களிலும், மற்ற ஆபத்து நேரங்களிலும் மீட்பு பணியில் ஈடுபடும் அனைத்து தன்னார்வ தொண்டர்களுக்காகவும் மன்றாடுகிறோம். இவர்கள் புரியும் வேலைகள் நீரே இவர்களுக்கு பாதுகாப்பு அளித்து, அவர்களுக்கு எவ்வித் ஆபத்தும் நேரிடாதபடி காத்தருள் வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


Thursday, October 17, 2024

பொதுக்காலம் 29-ஆம் ஞாயிறு 20-10-2024

பொதுக்காலம் 29-ஆம் ஞாயிறு 20-10-2024

பொதுக்காலம் 29-ஆம் ஞாயிறு 20-10-2024

திருப்பலி முன்னுரை

மன்னக மாந்தரின் பாவங்களைப் போக்க தம் இன்னுயிர் தந்த இயேசுவைக் காண இவ்விறைப்பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே! பொதுக்காலத்தின் 29-ஆம் ஞாயிறு திருவழிபாட்டு வாசகங்கள் அனைத்தும் நம்மை தாழ்ச்சியுள்ள நல்ல தொண்டனாக வாழ அழைக்கின்றது. விண்ணகத்தில் இறைவனுடன் இருந்த இறைமகன் நம் அகத்தை சீரமைப்பதற்காய் இம்மண்ணகத்தில் பிறந்தார். கிறிஸ்து இறைவனாக இருந்த போதிலும் இறைவனுக்குரிய பண்புகளை மட்டும் பற்றிக்கொள்ளவில்லை. மனிதராக பிறந்து அனைத்து சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டார். அவர் பாவம் ஏதும் செய்யவில்லையென்றாலும், நம்முடைய பாவங்களுக்காக துன்புற்று, துன்புறும் ஊழியனாக திகழ்ந்தார். உலகையே ஆள நினைத்த பல அரசரகள் மணிமுடி சுமந்து ஆட்சி செய்தனர், தங்கள் அரியணையை இழந்தனர். நம்முடைய கிறிஸ்து அரசரோ முள்முடி சூடி, இவ்வுலகை இன்றும் ஆட்சி செய்கின்றார். இதற்கு காரணம் இயேசுவின் தாழ்ச்சியும், பிறரன்பு நேசமுமே. இயேசவின் சீடர்களாகிய நாம் அனைவரும் தலையேழு புண்ணியங்களில் ஒன்றான தாழ்ச்சி என்ற நற்குணத்தை அடையாக அணிய அழைக்கப்படுகின்றோம். பிறரன்பும், தாழ்ச்சியும் இருக்கும் இடத்தில் பெரியவர் சிறியவர், உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற எந்த பாகுபாடும் இருக்காது. எனவே. இறைவனின் அருளைப் பெற, தாழ்ச்சியை நமதாக்க இந்த உன்னத கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்;.

வாசக முன்னரைகள்

முதல் வாசக முன்னுரை

இறைவன் இறைமக்களை பாவத்தின் பிடியிலிருந்து மீட்டு இறைப்பாதையில் நடத்திட எண்ணற்ற முயற்சிகளைச் செய்தார். பல இறைவாக்கினர்களை மக்களிடையே அனுப்பினார். அவ்வாறு அனுப்பப்பட்ட இறைவாக்கினர்கள் இறைவனின் துன்புறும் ஊழியனாக இருந்து மக்களை பாவத்திலிருந்து எவ்வாறு மீட்டார்கள் என்பதை விளக்கும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

மனிதராக பிறந்த இயேசு கிறஸ்து நம்மைப் போல பல வகைகளில் சோதிக்கப்பட்டார். ஆனால், அவர் நம்மைப்போல பாவம் ஏதும் செய்யவில்லை. இரக்கமும், பரிவும் கொண்ட நம் இறைவன் நமக்கெல்லாம் தலைமைக் குருவாக இருக்கின்றார். நம் பாவங்களுக்காக உயீர் நீத்த நம் இறைவன், நம்மை புதுவாழ்வு வாழ அழைக்கின்றார். புதுவாழ்வு பெறும் ஆவலுடன் இவ்விரண்டாம் வாசகத்தை பக்தியுடன் கவனிப்போம்.


மன்றாட்டுகள்

1. பாவிகளைத் தேடிச் சென்று மீட்ட எம் அன்பு இறைவா! நீர் ஏற்படுத்திய பிறரன்பு பணிகளை, தொண்டருக்கெல்லாம் தொண்டாராக இருந்து இன்று வரை ஆற்றி வரும் திருஅவையின் அனைத்து உறுப்பினர்களுக்காவும் மன்றாடுகின்றோம். நற்செய்தி அறிவிப்பிலும், இறை சேவை புரிவதிலும் நாங்கள் எதிர்கொள்ளும் சவால்களில் எங்களுடன் இருந்து எங்களை வலுப்படுத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்


2. தாழ்ச்சியின் உருவே எம் இறைவா! எம் மக்களை ஆளும் தலைவர்களும், அதிகாரிகளும் தாங்கள் மக்களின் பணியாளர்கள் என்பதை முழமையாக உணர்ந்து, மக்களின் நல்ல சேவகர்களாக செயல்படவும், மக்களுக்கு தேவையான அரோக்கியமான திட்டங்கனை இயற்றவும் தேவையான உள்ள அற்றலை தந்தருன வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


3. உழைப்பின் உயர்வை அறிந்த எம் இறைவா! கடினமாக உழைத்து இந்த சமுதாயத்தின் அனைத்து தேவைகளும் நிறைவேற்றும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். நாங்கள் எங்களுடைய பணியில் ஈடுபடும் பொழுது எந்தவித துன்பங்களும் எங்களை நெருங்காதபடியும், நாங்கள் பணியை சிறப்புடன் ஆற்ற தேவையான ஆற்றலையும் தந்தருளு வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


4. இயற்கையை ஆளகை புரியும் எம் இறைவா! இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவரும் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பவும், இயற்கை பேரிடர்களை சமாளிக்கும் அறிவையும், இயற்கையின் போக்கை புரிந்து கொண்டு நாங்கள் அனைவரும் இயற்கையினை சேதபடுத்தாமல் இருக்க வேண்டிய பொறுப்பையும் எங்களுக்கு தந்தருளு வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


5. எங்களுக்கு எல்லாமுமான எம் இறைவா! செபமாலைக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட இந்த மாதத்தில் நாங்கள் எடுக்கும் பக்தி முயற்சிகள் அனைத்திலும்; உம் ஆசீரை பொழிந்தருள வேண்டுமென்றும், நாங்கள் எழுப்பும் மன்றாட்டுகளுக்கு செவிசாய்த்து எங்கள் ஆன்மீக வாழ்வில் நாங்கள் மென்மேலும் வளர அருள்புரிய வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகின்றோம்.



பொதுக்காலம் 29-ஆம் ஞாயிறு 20-10-2024


உண்மையாக உழையுங்கள்

ஊதியத்திற்காக அல்ல, ஊழியத்திற்காக


To Download Pdf

**Thirupali Munnurai**

**Mass Introduction**

**Sunday**

Wednesday, October 9, 2024

பொதுக்காலம் 28-ஆம் ஞாயிறு - 13-10-2024

 பொதுக்காலம் 28-ஆம் ஞாயிறு - 13-10-2024

பொதுக்காலம் 28-ஆம் ஞாயிறு - 13-10-2024

திருப்பலி முன்னுரை

    இறைவன் அளிக்கும் ஞானத்தை இன் முகத்துடன் பெற்றுச் செல்ல இவ்விறைப்பிடம் சூழ்ந்துள்ள சகோதர சகோதரிகளே! பொதுக்காலத்தின் 28-ஆம் ஞாயிறு வழிபாட்டு கொண்டாட்டத்தின் வாசகங்கள் அனைத்தும், நிலையான செல்வமாகிய, இறைவன் அளிக்கும் ஞானத்தை பற்றிக்கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கின்றது.  இறைவன் ஒருவரே நிறைவுள்ளவர் என்பதே அந்த ஞானம். மனிதர்களாகிய நாம், மண்ணக பார்வையில் செல்வர்களாக இருந்தால், விண்ணகத்தை நமதாக்க முடியாது. ஏனெனில், செல்வம் இருக்கும் இடத்தில் செருக்கும் இருக்கும், செருக்கு மிகுந்த உள்ளத்தில் இறைவன் வாழ்வதில்லை. தாழ்ச்சியான, எளிமையான, ஏழைகளின் உள்ளத்தில்தான் இறைவன் வாழ்கின்றார்.  அப்படி கடினப்பட்ட உள்ளத்தை கரைப்பதற்காக இறைவன் அளித்த அமுத வழி தான் இறைவா வார்த்தையின் படி வாழ்வது. கடவுளுடைய உயிருள்ள வார்த்தையை உள்வாங்கி, தியானித்து, அதை நம் வாழ்வாக்கும் பொழுது, செருக்கு மிகுந்த நம் உள்ளம் இறைவன் வாழக்கூடிய சிறந்த இல்லமாக மாறும். மண்ணக மாந்தர்களை மகிழ்விக்க நாம் செல்வங்களை சேர்த்தால், விண்ணகம் சென்றடைய முடியாது, விண்ணகவேந்தரான இறைவனின் வார்த்தையின் படி வாழும் பொழுது இறை ஞானம் பெற்று விண்ணகத்தை நமதாக்கிக் கொள்வோம். எனவே, நாம் விண்ணகத்தில் குடிகொள்ளவும், இறைவன் நம் அகத்தில் குடிகொள்ளவும் நம்மை தயார் செய்யும் இந்த உன்னத கொண்டாட்டத்தின் பக்தியுடன் பங்கெடுப்போம்.


வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

    பொன்னை விடவும், போர் கருவிகளை விடவும் ஒரு நாட்டை ஆள்வதற்கு தேவையானது ஞாணமே என்பதை உணர்ந்த அரசர் சாலமோன், இறைவனிடத்தில் ஞானத்தின் பெருமையை எடுத்துச் சொல்லி அதை மன்றாடிக் கேட்கும் வார்த்தைகளை தாங்கிய இம்முதல் வாசகத்திற்கு  கவனமுடன் சொல்லிக்கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

    தொடக்கத்தில் வாக்காக இருந்த கடவுள், மனிதராய் தோன்றி இறை மக்களிடத்தில் இறைவாக்கு உரைத்தார். இறைவன் தன்னுடைய படைப்புகளின் மூலமும் இறைவார்த்தைகளின் மூலமும் தன்னை வெளிப்படுத்துகின்றார். இறைவன் அருளிய அந்த வார்த்தைகளின் ஆழத்தையும், அதன் மேன்மையையும் எடுத்துக் கூறும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு செவி கொடுப்போம்.


மன்றாட்டுகள்

1.   ஏழைகளைத் தேடிச் சென்ற எம் இறைவா! விளிம்பு நிலை மக்களை தேடிச் சென்று தேற்றும் உன் திரு அவையின் அனைத்து உறுப்பினர்களுக்காகவும் மன்றாடுகிறோம். இயலாதவர்களுக்கு இவர்கள் செய்யும் உதவியை மன்மேலும் சிறப்பாக ஆற்றிட தேவையான உதவிகளை அளித்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

2.   தாழ்ச்சியின் உருவே எம் இறைவா! தேவையற்ற ஆடம்பர நிகழ்வுகளிலும், மக்களுக்கு உபயோகமற்ற திட்டங்களிலும் எம் நாட்டுத் தலைவர்கள் பணத்தை வீணடிக்காமல், தொலைநோக்குடைய நல்ல திட்டங்களை தீட்டி, மக்களின் வாழ்வை உயரச் செய்ய தேவையான மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3.   நொருங்கிய உள்ளத்தை பலியாக கேட்ட எம் இறைவா! பேராசை, தீச்செயல், வஞ்சகம், பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு போன்ற உள்ள அழக்குகளை அகற்றி, எங்கள் இல்லங்களை நாங்கள் அலங்கரிப்பது போல, எங்கள் உள்ளங்களையும் அலங்கரிக்கும் வரம் வேண்டி உம்மை மன்றாடுகின்றோம்.

4.   இன்னலிலும் இறைவாக்குரைத்த எம் இறைவா! வேத போதக நாடுகளில் எத்தனையோ இன்னல்களுக்கு நடுவில் உம் இறை வார்த்தையை எடுத்துரைக்கும் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். இவர்களுடைய இன்னல்களை நீர்தாமே துடைத்து தருள வேண்டுமென்று, அவர்கள் செய்யும் பணியில் அவர்கள் நிறைவு காண வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

5.   வார்த்தைக்கு வாழ்வளிக்கும் எம் இறைவா! இறைஞானம் பெற இறைப்பிடம் சூழ்ந்துள்ள நாங்கள் அனைவரும், பிறரன்பு பகிர்வில் வெறும் சொல் வீரர்களாய் மட்டும் இல்லாமல், செயல் வீரர்களாய் இருந்து, பிறரன்பு பணியில் ஈடுபட்டு இறைஞானத்தை எமதாக்கும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


To Download PDF

Friday, October 4, 2024

பொதுக்காலம் 27 – ஆம் ஞாயிறு 06-10-2024

 பொதுக்காலம் 27 – ஆம் ஞாயிறு 06-10-2024

பொதுக்காலம் 27 – ஆம் ஞாயிறு 06-10-2024

திருப்பலி முன்னுரை

நம்முடைய பாவங்களின் கரையை, தம்முடைய இரத்தத்தால் துடைத்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஆராதிக்க இவ்விறைப் பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே! இன்றைய நாளில் நம் தாய் திருஅவையானது பொதுக்காலத்தின் 27 ஆம் ஞாயிறை சிறப்பாக கொண்டாடுகின்றது. இன்றைய வாசகங்கள் அனைத்தும் நம்மை கடின உள்ளத்தினராய் அல்லாமல், குழந்தைகளின் மனநிலையைக் கொண்டவர்களாக வாழ அழைக்கின்றன. விண்ணகத்தில் கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருந்த இயேசு, நம்முடைய பாவங்களை நீக்க தாழ்ச்சியின் உருவாய் மண்ணகத்தில் மனிதராய் பிறந்தார். வெறுமையை தன் உடைமையாக்கி கொண்டார். பாவிகளாகிய நம்மை தம்முடைய சகோதர, சகோதரிகள் ஆக்கிக் கொண்டார். இயேசு தாழ்ச்சியை தன் கையில் எடுத்ததன் விளைவாக நாம் அனைவரும் பாவத்திலிருந்து மீட்கப்பட்டோம். இயேசுவைப் போல நாம் நம்முடைய கடின மனதை கரைத்து, தாழ்ச்சி என்னும் புண்ணியத்தால் மீட்பு என்னும் நிலை வாழ்வை அடைய முயற்சி செய்வோம். இயேசு கிறிஸ்து தன்னுடைய அன்பை தியாகத்தின் வழியாக வெளிப்படுத்தியது போல, நம்முடைய உறவுகளிடத்தில் நம்முடைய அன்பை, நம்முடைய தியாகத்தின் வழியாக வெளிப்படுத்துவோம். இயேசுவைப்போல தாழ்ச்சியை நமதாக்கிக் கொள்ளும் வரம் வேண்டிய இத்திருப்பலியில் ஜெபிப்போம். மேலும், மனம் முறிவு அதிகரிக்கும் இன்றைய கால சூழலில், ஒருவர் மற்றவருக்குமான புரிதலை அதிகப்படுத்தும் ஆற்றலையும், புரிந்து கொள்ளும் திறனையும் வேண்டியும் சிறப்பாக ஜெபிப்போம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

இறைவன் தன்னுடைய எல்லையில்லா அன்பை தம்முடைய படைப்பின் வாயிலாக வெளிப்படுத்துகின்றார்: மனிதர்களாகிய நம்மை படைக்கும் முன்பே, நாம் வாழ்வதற்கு ஏற்றவாறு இவ்வுலகை உருவாக்குகின்றார். படைப்புகளை, படைப்புகளின் சிகரமாகிய மனிதனிடத்தில் ஒப்படைக்கும் நிகழ்வை விவரிக்கும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

விண்ணக தந்தையின் மகனாம் இயேசு கிறிஸ்து, நம் பாவங்களுக்காக துன்புறுவதற்காய் மனிதராக மண்ணகத்தில் பிறந்தார். நம் பாவங்களுக்காக துன்புற்றதன் வாயிலாக நம்மை தம்முடைய சகோதர, சகோதரிகளாக ஏற்றுக் கொண்டார். எனவே, இறைவனால் தூய்மையாக்கப்பட வேண்டும் என்ற ஆவலுடன் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவிகொடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பை அடித்தளமாக கொண்டு திருஅவையை ஏற்படுத்திய அன்பு இறைவா! வறியவர்களை வாட்டி வதைக்க பயன்படுத்தப்படும் அனைத்து சட்ட திட்டங்களையும், உம்முடைய அன்பின் நெறிமுறைகளால் வென்றெடுக்கும் உறுதியை உம்முடைய திருஅவையின் உறுப்பினர்களாகிய எங்கள் அனைவருக்கும் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. இறைத் திருவுளத்தை இன்முகத்துடன் நிறைவேற்றிய எம் இறைவா! நாட்டை ஆளும் தலைவர்களும், அதிகாரிகளும், தேவையற்ற விஷயங்களில் மக்களின் கவனத்தை திசை திருப்பாமல், நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான தொலைநோக்குப் பார்வை கொண்ட நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான நல்ல அறிவை தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.

3. துன்புறுபவரின் துயர் துடைக்கும் எம் அன்பு இறைவா | ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளில் மீண்டும் தீவிர நிலையை அடைந்துள்ள போர் சூழ்நிலையானது மாறி, அங்குள்ள மக்கள் அமைதியில் வாழவும். போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீரே ஆதரவாகவும், அவர்கள் உள்ளங்களுக்கு உற்ற மருந்தாகவும் இருக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

4. திருக்குடும்பத்தின் நாயகனே எம் இறைவா! பரஸ்பர புரிதலும், உறுதியான அன்பையும் கொண்ட திரு குடும்பத்தை முன் உதாரணமாக கொண்டு, நாங்கள் அனைவரும் எங்களுடைய குடும்பங்களில் வாழவும், ஒருவர் மற்றவருக்கு இடையில் ஏற்படும் மனக்கசப்புகளை ஆரோக்கியமான உரையாடல்கள் மூலம் தீர்வு காண்பதற்கான மன உறுதியையும் தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்.

5. திருப்பலியிலும், திருவழிபாட்டிலும் பங்கு கொள்ள முடியாமல் நோய்வாய்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்கும் எம் பங்கின் பெரியவர்களுக்காக மன்றாடுகின்றோம். ஆன்ம உணவாக உம்மை உட்கொள்ளும் அவர்கள் உன்னுடைய எல்லையில்லா வரங்களால் ஆசிர்வதிக்கப்பட்டு விரைவில் குணம் பெற அவர்களுக்கு தேவையான உடல் நலனை தந்தருள வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


To get the PDF kindly scroll to the top and Follow "இறை வெளிச்சம்"  pdf file will  be sent to your mail ID.


By




தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25

 தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25 திருப்பலி முன்னுரை தவம், செபம் மற்றும் தியாகம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பயணிக்கும் தவக்காலத்தின் மூன்...