Friday, October 4, 2024

பொதுக்காலம் 27 – ஆம் ஞாயிறு 06-10-2024

 பொதுக்காலம் 27 – ஆம் ஞாயிறு 06-10-2024

பொதுக்காலம் 27 – ஆம் ஞாயிறு 06-10-2024

திருப்பலி முன்னுரை

நம்முடைய பாவங்களின் கரையை, தம்முடைய இரத்தத்தால் துடைத்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஆராதிக்க இவ்விறைப் பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே! இன்றைய நாளில் நம் தாய் திருஅவையானது பொதுக்காலத்தின் 27 ஆம் ஞாயிறை சிறப்பாக கொண்டாடுகின்றது. இன்றைய வாசகங்கள் அனைத்தும் நம்மை கடின உள்ளத்தினராய் அல்லாமல், குழந்தைகளின் மனநிலையைக் கொண்டவர்களாக வாழ அழைக்கின்றன. விண்ணகத்தில் கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருந்த இயேசு, நம்முடைய பாவங்களை நீக்க தாழ்ச்சியின் உருவாய் மண்ணகத்தில் மனிதராய் பிறந்தார். வெறுமையை தன் உடைமையாக்கி கொண்டார். பாவிகளாகிய நம்மை தம்முடைய சகோதர, சகோதரிகள் ஆக்கிக் கொண்டார். இயேசு தாழ்ச்சியை தன் கையில் எடுத்ததன் விளைவாக நாம் அனைவரும் பாவத்திலிருந்து மீட்கப்பட்டோம். இயேசுவைப் போல நாம் நம்முடைய கடின மனதை கரைத்து, தாழ்ச்சி என்னும் புண்ணியத்தால் மீட்பு என்னும் நிலை வாழ்வை அடைய முயற்சி செய்வோம். இயேசு கிறிஸ்து தன்னுடைய அன்பை தியாகத்தின் வழியாக வெளிப்படுத்தியது போல, நம்முடைய உறவுகளிடத்தில் நம்முடைய அன்பை, நம்முடைய தியாகத்தின் வழியாக வெளிப்படுத்துவோம். இயேசுவைப்போல தாழ்ச்சியை நமதாக்கிக் கொள்ளும் வரம் வேண்டிய இத்திருப்பலியில் ஜெபிப்போம். மேலும், மனம் முறிவு அதிகரிக்கும் இன்றைய கால சூழலில், ஒருவர் மற்றவருக்குமான புரிதலை அதிகப்படுத்தும் ஆற்றலையும், புரிந்து கொள்ளும் திறனையும் வேண்டியும் சிறப்பாக ஜெபிப்போம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

இறைவன் தன்னுடைய எல்லையில்லா அன்பை தம்முடைய படைப்பின் வாயிலாக வெளிப்படுத்துகின்றார்: மனிதர்களாகிய நம்மை படைக்கும் முன்பே, நாம் வாழ்வதற்கு ஏற்றவாறு இவ்வுலகை உருவாக்குகின்றார். படைப்புகளை, படைப்புகளின் சிகரமாகிய மனிதனிடத்தில் ஒப்படைக்கும் நிகழ்வை விவரிக்கும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

விண்ணக தந்தையின் மகனாம் இயேசு கிறிஸ்து, நம் பாவங்களுக்காக துன்புறுவதற்காய் மனிதராக மண்ணகத்தில் பிறந்தார். நம் பாவங்களுக்காக துன்புற்றதன் வாயிலாக நம்மை தம்முடைய சகோதர, சகோதரிகளாக ஏற்றுக் கொண்டார். எனவே, இறைவனால் தூய்மையாக்கப்பட வேண்டும் என்ற ஆவலுடன் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவிகொடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பை அடித்தளமாக கொண்டு திருஅவையை ஏற்படுத்திய அன்பு இறைவா! வறியவர்களை வாட்டி வதைக்க பயன்படுத்தப்படும் அனைத்து சட்ட திட்டங்களையும், உம்முடைய அன்பின் நெறிமுறைகளால் வென்றெடுக்கும் உறுதியை உம்முடைய திருஅவையின் உறுப்பினர்களாகிய எங்கள் அனைவருக்கும் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. இறைத் திருவுளத்தை இன்முகத்துடன் நிறைவேற்றிய எம் இறைவா! நாட்டை ஆளும் தலைவர்களும், அதிகாரிகளும், தேவையற்ற விஷயங்களில் மக்களின் கவனத்தை திசை திருப்பாமல், நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான தொலைநோக்குப் பார்வை கொண்ட நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான நல்ல அறிவை தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.

3. துன்புறுபவரின் துயர் துடைக்கும் எம் அன்பு இறைவா | ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளில் மீண்டும் தீவிர நிலையை அடைந்துள்ள போர் சூழ்நிலையானது மாறி, அங்குள்ள மக்கள் அமைதியில் வாழவும். போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீரே ஆதரவாகவும், அவர்கள் உள்ளங்களுக்கு உற்ற மருந்தாகவும் இருக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

4. திருக்குடும்பத்தின் நாயகனே எம் இறைவா! பரஸ்பர புரிதலும், உறுதியான அன்பையும் கொண்ட திரு குடும்பத்தை முன் உதாரணமாக கொண்டு, நாங்கள் அனைவரும் எங்களுடைய குடும்பங்களில் வாழவும், ஒருவர் மற்றவருக்கு இடையில் ஏற்படும் மனக்கசப்புகளை ஆரோக்கியமான உரையாடல்கள் மூலம் தீர்வு காண்பதற்கான மன உறுதியையும் தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்.

5. திருப்பலியிலும், திருவழிபாட்டிலும் பங்கு கொள்ள முடியாமல் நோய்வாய்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்கும் எம் பங்கின் பெரியவர்களுக்காக மன்றாடுகின்றோம். ஆன்ம உணவாக உம்மை உட்கொள்ளும் அவர்கள் உன்னுடைய எல்லையில்லா வரங்களால் ஆசிர்வதிக்கப்பட்டு விரைவில் குணம் பெற அவர்களுக்கு தேவையான உடல் நலனை தந்தருள வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


To get the PDF kindly scroll to the top and Follow "இறை வெளிச்சம்"  pdf file will  be sent to your mail ID.


By




Friday, September 27, 2024

பொதுக்காலம் 26-ஆம் ஞாயிறு 29-09-2024

பொதுக்காலம் 26-ஆம் ஞாயிறு 29-09-2024

பொதுக்காலம் 26-ஆம் ஞாயிறு 29-09-2024

திருப்பலி முன்னுரை

    இறைவனுடைய உண்மையின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்க இன்னொரு முறை இந்த இறைப்பீடம் சூழ்ந்துள்ள சகோதர சகோதரிகளே! நாம் அனைவரும் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்றால் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற படிப்பினைகளை மையமாகக் கொண்டு இன்றைய வாசகங்கள் நம்மை சிந்திக்க அழைக்கின்றன. இறைவனின் விருப்பப்படி வாழ்வதற்கு இறைவன் தன்னுடைய ஆவியை நமக்கு வழங்குகின்றார். இறைவனின் சாயலாக இருக்கும் நாம், அந்த இறை ஆவியின் தூண்டுதல் படி வாழ அழைக்கப்படுகின்றோம். நம் வாழ்வை இறைவனுக்கு உகுந்த வாழ்வாக மாற்ற இறைவனளிக்கும் அந்த உன்னத ஆவியின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும். தூய ஆவிக்கு செவி சாய்க்காமல் நாம் நம் விருப்பத்திற்கு செயல்படும் பொழுது பாவத்தில் விழுகின்றோம். நம்மை பாவத்தில் விழச் செய்வது நம்முடைய பேராசையும், சுயநல எண்ணங்களுமே;. நம்மை பாவத்தில் விழச் செய்வது எதுவாகினும் அதை விட்டுவிட்டு, இறைவன் விருப்பப்படி வாழ்வதே இறைவனுக்கு உகந்த வாழ்க்கை. எனவே, நம் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் பேராசையையும், சுயநல எண்ணங்களையும் வெட்டி எறிவதன் மூலம் நம்மை நாம் ஆண்டவருடன் இணைத்துக்கொள்ள முடியும். இறைவனோடு உறவாடும் இந்த உன்னத பலியில், இறைவனின் ஆவியை முழுமையாக பெற முயற்சி செய்வோம். நம்முடைய பேராசைகளையும், சுயநல எண்ணங்களையும் விலக்கிவிட்டு இறைவன் காட்டும் வழியில் நம் வாழ்வை வழிநடத்த வேண்டிய வரங்களை வேண்டி  இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

இறைவன் தன்னுடைய இறைவாக்குறைக்கும் பணிக்கு பலரை தெரிந்து கொண்டார். அவர்களுக்கு தன்னுடைய வாழ்வு தரும் ஆவியை அளித்து புத்துயிர் அளித்தார். இறைவன் மோசேவுக்கு துணையாக 70 மூப்பர்களை தன்னுடைய ஆவினால் நிரப்பி, இறைவாக்குறைக்கும் பணிக்கு அமர்த்தும் நிகழ்வை விவரிக்கும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இவ்வுலகம் அளிக்கும் அழிந்து போகும் செல்வத்தை சேர்ப்பது ஒன்றுக்கு உதவாது. அது பூச்சிகளால் அறிக்கப்பட்டு அழிக்கப்படும். பேராசை எண்ணத்துடனும், சுயநலப் போக்குடனும் நம் வாழ்வை நகர்த்துவது நமக்கு அழிவைத் தரும் என்ற எச்சரிக்கையை கொடுக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவி செவி கொடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பை ஆணிவேராக வைத்து நீர் உருவாக்கிய உம் திரு அவைக்காக மன்றாடுகின்றோம். இறைவாக்கினர்களும், மெசியாவும் எவ்வித தொய்வும் இன்றி இறைப்பணி ஆற்றியது போல உம் திரு அவையின் தலைவர்களும், உறுப்பினர்களும் தளராது இறைப்பணி ஆற்ற தேவையான மன திடத்தை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 


2. நல்ல மேய்ப்பனே எம் இறைவா! இவ்வுலகில் பல்வேறு சித்தாந்தங்களின் அடிப்படையில் மக்களை ஆளும் தலைவர்களுக்காகவும், அதிகாரிகளுக்காகவும் ஜெபிக்கிறோம். இவர்கள் தங்களைப் பின்பற்றும் மக்களை நல்ல வழியில் நடத்திடவும், தங்களுடைய வாழ்வின் சுயநல எண்ணங்களுக்காக மக்களை பயன்படுத்தாமல் இருக்கவும், மக்களின் மேம்பாட்டிற்காக உழைக்க தேவையான மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 


3. நலம் தரும் நற்கருணை நாயகனே எம் இறைவா! இவ்வுலகில் நோய்களாலும், போர்களாலும் மற்றும் கொடிய இனவாதத்தாலும் பாதிப்படைந்து தங்களுடைய அன்றாட வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாமல் தவிக்கும் ஒவ்வொருவருக்காகவும் நாங்கள் மன்றாடுகிறோம். நீரே அவர்களை உம்முடைய பிள்ளைகளாக கருதி அவர்களுக்கு அறுதலாக இருக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம் 


4. உறவுகளை உன்னத விருந்தின் மூலம் கட்டி எழுப்பும் எம் அன்பு இறைவா! திருப்பலியில் பங்கேற்று ஒரே பாத்திரத்தில் இருந்து நற்கருணை உட்கொள்ளும் நாங்கள் அனைவரும் ஒரே மக்கள் என்ற உணர்வைப் பெற்று எவ்வித வேறுபாடு இன்றி ஒற்றுமையில் நிலைத்திருக்கவும் ஆன்மீக வாழ்வில் அருள் புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்


5. நம்பிக்கையை வலுப்படுத்தும் எம் இறைவா! இறை வேண்டலில் ஈடுபட்டு இறைநம்பிக்கையில் வலுபெற இறைபீடம் சூழ்ந்துள்ள எங்கள் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். எங்களுடைய குறைகளை ஏற்று, இறைவழியில் நடந்து, இறைவனின் வல்லமையை பெற எங்களுக்கு தேவையான அருளைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


Thursday, September 19, 2024

பொதுக்காலம் 25 ஆம் ஞாயிறு 22-09-2024

 பொதுக்காலம் 25 ஆம் ஞாயிறு 22-09-2024

பொதுக்காலம் 25 ஆம் ஞாயிறு 22-09-2024


திருப்பலி முன்னுரை

    ஆயனின் அரவணைப்பில், அன்றாடும் மகிழும் சகோதர, சகோதரிகளே! இறைவன் தன்னுடைய எல்லையில்லா அன்பை நம்மிடத்தில் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார். ஆயனற்ற மந்தைகளாய் திரிந்த மக்கள் கூட்டமாகிய நம்மை மீட்பதற்கு எண்ணற்ற இறைவாக்கினர்களையும், நீதிமான்களையும் நம்மிடைய அனுப்பினார். நாம் அவர்களை புறக்கணித்து கடவுளை புறக்கணித்த போதிலும், நம் மீது இறைவன் கொண்ட அன்பானது கடுகளவும் குறையவில்லை. தம் அன்பின் உச்சமாக தன்னுடைய ஒரே மகனையே நமக்கு ஆயனாக அனுப்பினார். பொல்லாதவர்கள் நீதிமான்களை சோதிப்பது போல, தீய எண்ணம் படைத்த பொல்லாதவர்கள் இறைமகன் இயேசு கிறிஸ்துவையும் சோதித்தார்கள். இருப்பினும் இயேசு கிறிஸ்து, தனக்கு அளிக்கப்பட்ட அத்தனை தடைகளையும் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பாக கருதி, பாடுகளின் பலனால் நம் அனைவரையும் ஒரே மக்களினமாக கட்டி எழுப்பினார். சிதறடிக்கப்பட்டு, அல்லல்படும் உள்ளங்களுக்கு நலம் அளிக்கும் நல் ஆயனாக நம் இயேசு கிறிஸ்து விளங்குகின்றார்.. நலம் தரும் நல்ல ஆயிரம் இயேசு கிறிஸ்துவை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும். இயேசு கற்பித்த அன்பின் பாதையில் நாம் நமது வாழ்வை செலுத்த வேண்டும். அப்பொழுதுதான் நாம் இயேசு கிறிஸ்துவை முழுமையாக ஏற்றுக் கொள்கின்றோம். இயேசு கிறிஸ்துவை முழுமையாக ஏற்றுக் கொள்ள வரம் வேண்டி இந்த உறவின் கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கேற்போம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசகம் முன்னுரை

இறைவனின் வார்த்தைகளை கேட்டு, அவற்றின் படி நடப்பவர்களே நீதிமான்கள் ஆவார்கள். இறைவனின் சித்தப்படி வாழும் இந்த நீதிமான்களின் வாழ்வில் பொல்லாதவர்கள் எண்ணற்ற தடைகளை உருவாக்குவார்கள். நீதிமான்களை நீதியின் வழியில் இருந்து வழிமாற்ற அவர்கள் எண்ணற்ற சிக்கல்களை உருவாக்குவார்கள் என்ற செய்திகளை கூறும் முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இறைவன் அளிக்கும் ஞானத்தை பெற நம்முடைய சிற்றின்ப ஆசைகளே தடையாக உள்ளது. நாம் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதும், எதிராக தீங்கு நினைப்பதற்கும் இந்த சிற்றின்ப ஆசைகளை முதன்மை காரணிகளாக அமைகின்றது. சிற்றின்ப ஆசைகளை விடுத்து இறைவன் தரும் ஞாணத்தை பெற அழைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.


மன்றாட்டுகள்

1. இன்னல்கள் மூலம் எங்களை பாவத்திலிருந்து மீட்ட எம் அன்பு இறைவா! பாவத்திலிருந்து நீர் மீட்ட அன்பின் சமூகத்தை, அன்பின் வழியில் தொடர்ந்து நடத்திச் செல்லும் திருஅவையையும், அதன் அனைத்து உறுப்பினர்களையும்  ஆசீர்வதியும், இவர்கள் அனைவரும் மக்களை வழிநடத்தும் நல் ஆயர்களாக செயல்பட வேண்டிய இறை ஞானத்தை தந்தருள வேண்டுமென்று  உம்மை மன்றாடுகின்றோம்.

2. நீதிமான்களின் பக்கம் நிற்கும் என் அன்பு இறைவா! எந்த சூழ்நிலையிலும் நீதி தவறாது, உண்மைக்காக சான்றுபகரும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்கள் அனைவரும் நீதியின் பாதையில் தொடர்ந்து பயணிக்க தேவையான மன வலிமையை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. வழிநடத்து நாயகனே எம் இறைவா! வாழ்வில் சாதிக்கும் எண்ணத்துடன் அன்றாடம் போராடும் இளைஞர், இளம் பெண்களை உன் பாதம் சமர்ப்பிக்கின்றோம், இவர்களுக்கு நீரே நல்ல வழிகாட்டியாகவும், ஆயனாகவும் இருந்து அவர்களின் லட்சியத்தை அடைய அவர்களுக்கு உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. காணாமல் போன ஆன்மாக்களைத் தேடி மீட்ட அன்பு இறைவா! இறைவனை விட்டு விலகி, இறைப் பற்றி இல்லாமல் வாழும் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். இவர்களை உம் எல்லையில்லா வரங்களால் ஆசீர்வதித்து, உம் பாதம் திருப்பி, இறை ஞானத்தை உடைய நல்ல மக்களாக வாழும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

5. இயற்கையை ஆளுகை புரியும் இறைவா! மாறிவரும் பருவநிலை மாற்றத்தை நாங்கள் உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் எங்கள் வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்ளவும், மென்மேலும் இயற்கையை காயப்படுத்தாமல் அதனை அழகுப்படுத்தும் புண்ணிய செயல்களில் ஈடுபடவும் வேண்டிய அறிவை எங்களுக்கு தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்


To Download PDF

Friday, September 13, 2024

பொதுக்காலம் 24ம் ஞாயிறு 15-09-2024

பொதுக்காலம் 24ம் ஞாயிறு 15-09-2024

பொதுக்காலம் 24ம் ஞாயிறு 15-09-2024

திருப்பலி முன்னுரை

இறைவனிடத்தில் கொண்ட நம்பிக்கையை செயல்களால் வெளிப்படுத்த இவ்விறைப்பிடம் சூழ்ந்துள்ள சகோதர சகோதரிகளே! இறைவனின் மீது எல்லையற்ற அன்பு கொண்ட இறைவாக்கினர்களும்இ இறைவனின் அடியார்களும் தங்கள் செயல்களின் மூலம் தங்களுடைய நம்பிக்கையை வெளிப்படுத்தினர். சொல் வடிவத்தில் வெறும் வார்த்தைகளாக இருக்கும் தங்களின் நம்பிக்கைகளுக்கு செயல் வடிவில் உயிர் அளிக்கின்றனர். இறை திருவுளத்தை தங்கள் வாழ்வின் பாதையாக கொண்டு அதில் பயணிக்கின்றனர். இறைவன் அனைவரிடத்திலும் அன்பாய் இருக்கிறார் என்று போதிப்பதை விடஇ இறைவன் இப்படித்தான் அன்பாய் இருப்பார் என்று நம்முடைய செயல்கள் மூலம் நாம் இறைவனின் பண்பை வெளிப்படுத்த வேண்டும். இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களையும் இறைவன் நேசிக்கின்றார் என்ற இறைச் செய்தியை நாம் நம்முடைய வார்த்தைகளால் எடுத்துரைக்காமல் நம்முடைய செயல்களால் எடுத்துரைக்க வேண்டும். நம்முடைய இறை விசுவாசத்தை நம்முடைய செயல்களால் நிறைவேற்றுவதே இறைத் திருவுளம். இறைமகன் இயேசு கிறிஸ்துஇ இம்மண்ணுலகில் மனிதராய் பிறந்து அத்தனை இன்னல்களுக்கும் உள்ளாகி தன்னுடைய உன்னத செயல்களின் பலனாக நம்மை பாவத்திலிருந்து மீட்டார். விண்ணகத்திலிருந்து மண்ணகம் இறங்கி வந்த மீட்பரைப் போல நாம் நம்முடைய விசுவாசத்திற்கு செயல் வடிவம் கொடுக்கவும்இ நம்முடைய அன்பை வெறும் வார்த்தைகளால் அல்லாமல்இ செயல்களால் வெளிப்படுத்த தேவையான இறை வரங்களை வேண்டி முழு ஈடுபாட்டுடன் பலியில் இணைவோம்.

வாசகம் முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

இறைவாக்கை எடுத்துரைத்த இறைவாக்கியர் எசயாவிற்கு இஸ்ரவேல் மக்கள் மத்தியில் எண்ணற்ற எதிர்ப்புகள் இருந்தாலும்இ இறைவன் மீது கொண்ட பற்றின் காரணமாக தொடர்ந்து இறைவாக்குறைக்கும் பணியை ஆற்றினார். தம்முடைய விசுவாசத்தை எவ்வித தயக்கமும் இன்றி இறை பணி ஆற்றுவதற்கான உறுதியை எடுக்கும் வார்த்தைகள் தாங்கிய இம் முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம். 

இரண்டாம் வாசக முன்னுரை

நம்முடைய விசுவாசமும் வாழ்வும் ஒரே பாதையில் பயணிக்க வேண்டும். நம்மிடத்தில் நம்பிக்கை உண்டேனில் அது நம் செயல்கள் மூலம் வெளிப்பட வேண்டும். நாம் நம் சகோதர சகோதரிகளிடத்தில் நட்புறவு பேண வேண்டும் என்ற செய்திகளை தாங்கி வரும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவி கொடுப்போம்.


மன்றாட்டுகள்

  1.    விசுவாசத்தை மண்ணில் விதைக்க நீர் உண்டாக்கிய திருஅவையின் அனைத்து உறுப்பினர்களும், தாங்கள் பெற்ற விசுவாசத்தின் பலனை தங்கள் செயல்களால் வெளிப்படுத்தி, இறை மக்களின் உள்ளத்தை இறைவன் வாழும் இல்லங்களாக மாற்றும் வரம் தர வேண்டுமென்று இறைவா உன் மன்றாடுகின்றோம்.

     

    2.   எதிர்ப்புகள் மத்தியிலும் இறை திருவுளம் நிறைவேற்றிய இறைவா|. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பொருட்படுத்தாமல் நேர்மையாக உழைக்கும் அனைவரும், தங்களுடைய பணியை தொடர்ந்து நேர்மையுடன் ஆற்ற தேவையான மன வலிமையை தந்தருள் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

     

    3.   சிலுவை மூலம் பாவத்தை வென்ற எம் இறைவா! கடுமையான சூழலில் நடுவிலும் உம்முடைய சிலுவையின் மகிமையை எடுத்துரைக்கும் அனைத்து இறை நம்பிக்கையாளர்களுக்காகவும் மன்றாடுகின்றோம். தன்னார்வ மனம் கொண்ட இளைஞர், இளம் பெண்கள் அனைவரும் ஆன்மீகத்தில் மென்மேலும் வளர தேவையான இறைஞானத்தை தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்.

     

    4. சொல்லுக்கு செயல் வடிவம் அளிக்கும் அற்றலை எங்கள் அனைவருக்கும் தந்தருளும். பிறரிடத்தில் நாங்கள் கொண்டுள்ள அன்பை வெறும் வார்த்தைகளால் வெளிப்படுத்தாமல் அன்பு நேச செயல்களால் வெளிப்படுத்தி, அன்பால் எம் சமுகத்தை கட்டி எழுப்ப வேண்டிய அணைத்து வரங்களை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

     

    5.   இறை திருவுளத்தை நிறைவேற்றுவதையே உணவாகக் கொண்ட எம் இறைவா! திருமுழுக்கினால் இறைவனின் அழைப்பு பெற்ற அனைவரும் இறைவனின் திருவுளத்தை அறிந்து, இறைவன் நமக்கென அளித்துள்ள பணியை சிறந்த முறையில் ஆற்றிட தேவையான மனதிடத்தை தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்.


To Download PDF

Friday, September 6, 2024

பொதுக்காலம் 23ம் ஞாயிறு 08 - 09 - 24

பொதுக்காலம் 23ம் ஞாயிறு 08 - 09 - 24

பொதுக்காலம் 23ம் ஞாயிறு 08-09-25

திருப்பலி முன்னுரை

இறைவனின் வார்த்தைகளை உள்வாங்க இவ்விறைப்பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே ! இறைவனிடத்தில் நாம் காட்டும் அன்பிற்கு நமக்கு கைமாறு கிடைக்காமல் போகாது. இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட மக்களினமாகிய இஸ்ரேயல் மக்கள் கூட்டம் இறைவனுடைய எல்லையில்லா அன்பை ஒவ்வொரு நொடியும் பெற்று மகிழ்ந்தது. நம்முடைய மனதை தூய்மையாக்கும் பொழுது இஸ்ரேயல் மக்களைப் போல நாமும் இறைவனின் அளவற்ற அன்பை அடைய முடியும். பகட்டில்லாத, செருக்கற்ற எளிய உள்ளமே இறைவன் வாழ விரும்பும் தூய்மையான இல்லம். இந்த எளிய உள்ளங்களின் குரலுக்கு செவிசாய்த்து,  இயேசு கிறிஸ்து பலரின் நோய்களை குணப்படுத்தினார். இயேசு எப்பொழுதெல்லாம் பிறரின் பிணிகளை குணப்படுத்துகின்றாரோ? அப்பொழுதெல்லாம் அவர்களின் தூய உள்ளத்தில் இயேசுவே குடி கொள்கின்றார். நம் உள்ளத்தை தூய்மைபடுத்த இறைவனை நோக்கிச் செல்ல வேண்டும். அதற்கு அயத்தமாக நம்மைச் சுற்றியுள்ள அனைத்து சாரரையும் எவ்வித வேறுபடியின்றி சமமாக நடத்த வேண்டும். பொருள் இருப்பவரிடத்தில் அன்பு பாராட்டி, பொருள்ளற்றவரிடத்தில் வெறுப்பை கக்கும் உள்ளங்கள் இறைவன் வாழ்வதற்கு உகந்த இல்லம் அன்று. நாம் நம்மைச் சுற்றியுள்ள அனைவரையும் எவ்வித பாகுபாடுமின்றி நடத்த, நமக்கு தேவையானது எளிய உள்ளமே. அப்படிபட்ட எளிய உள்ளங்களின் குரல்களுக்கு இறைவன் இசையாமல் போகமாட்டார். நம்முடைய உள்ளத்தை இறைவனுக்கு உகந்த இல்லமாக மாற்ற, பாரபட்சமற்ற இந்த சமதர்ம கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்குகொள்வோம்.


வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

இறைவனிடத்தில் நாம் நம்மை முழமையாக ஒப்படைக்கும் பொழுது, நமக்கு தேவையான அனைத்து நலன்களையும் இறைவன் நமக்கு அருள்வார். இறைவனில் உறுதிகொண்டு, இறைநம்பிக்கையில் திடமாய் இருப்பவர்கள் வாழ்வில் இறைவன் பல புதுமைகளை நிகழ்த்துவார் என்று இறைவாக்குரைக்கும் இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளுக்கு இம்முதல் வாசகத்தில் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இறைவன் வாழும் ஆலயத்தில், இறைநம்பிக்;கையாளர்களே செல்வர்களே. ஒரு மனிதன் வைத்திருக்கும் பொருள் செல்வத்தினால், அவரின் இறையனுபவத்தை நாம் மதிப்பிடக் கூடாது. யாவரையும் சமமாக நடத்த வேண்டும். செருக்கற்ற எளிய உள்ளத்துடன் நாம் வாழ வேண்டும் என்ற திருத்தூதர் யாக்கோபின் வார்த்தைகளை தாங்கிய இவ்விரண்டாம் வாசகத்தை பக்தியுடன் கவனிப்போம்.

 

மன்றாட்டுகள்


1. எளிய உள்ளங்களின் குரலுக்கு செவிகொடுத்த எம் இறைவா! எளியவர்களை பேணுவதற்காக நீர் ஏற்படுத்திய திருஅவையின் உறுப்பினர்கள் அனைவரையும் நிறைவாக ஆசிர்வதியும், காயப்பட்ட எளிய உள்ளங்களை நீர் தேடி மீட்டார் உம் பதம் திருப்பினிர். நாங்களும் எளிய உள்ளத்தை பெற்று இறைவனால் மீட்கப்பட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

 

2. நலமளிப்பவரே எம் இறைவா! உடல் நோய்களையும், பல்வேறு உடல் குறைபாடுகளைக் கொண்டுள்ள அனைவருக்கும் நலமளித்து, அவர்களின் எளிய குரலுக்கு செவிசாய்த்து, அவர்களுக்கு குணமளிக்க வேண்டுமென்றும், அவர்கள் வாழ்வில் புதுமைகளை நிகழ்த்த வேண்மென்றும் உம்மை மன்றாடுகின்றோம்.

 

3. எளியவர்களின் இன்னல் துடைத்த எம் இறைவா! எம் நாட்டை ஆளும் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் உள்ளத்தை தொட்டு ஆசிர்வதியும். பணம் படைத்தவர்களுக்கு மட்டும் சேவை புரியாமல், மக்களின் தேவையறிந்து அனைவருக்கும் சமமான சேவைபுரியும் நல்ல மனதை இவர்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

 

4. குறையுள்ள உள்ளங்களைக் குணப்படுத்தும் எம் இறைவா! செருக்கு, பாரபட்ச குணம், உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற சமுக நோய்களால் ஆட்டிப்படைக்கப்படும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இறைவனால் படைக்கப்பட்ட அனைவரும், இறைவனின் சாயல் என்பதை உணர்ந்து, அனைவரையும் சமமாக நடத்தம் நல்ல மனதை இவர்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

 

5. ஒற்றுமையை உருவாக்கும் எம் இறைவா! தாய் திருஅவையின் ஒரு பகுதியாகிய எங்கள் பங்கை உம் பாதம் ஒப்படைக்கின்றோம். எம் பங்கில் உள்ள அனைத்து குடும்பங்களையும் நிறைவாக ஆசிர்வதித்து, எங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் அமைதியும், ஒற்றுமையும் நிலவ வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


To download pdf





Friday, August 30, 2024

பொதுக்காலம் 22-ம் ஞாயிறு 01 – 09 - 2024

 பொதுக்காலம் 22-ம் ஞாயிறு 01 – 09 - 2024

Scroll down for pdf

** Thirupali Munnurai **

** Sunday Mass Introduction**

பொதுக்காலம் 22-ம் ஞாயிறு 01 – 09 - 2024

திருப்பலி முன்னுரை

உள்ளமென்னும் இறை இல்லத்தை புதுப்பிக்க, இறை வெள்ளமாய் திரண்டு வந்துள்ள சகோதர, சகோதரிகளே! பொதுக்காலத்தின் 22-ம் ஞாயிறு வாசகங்கள் அனைத்தும் , நம்முடைய வழிபாடுகளும், வாழ்க்கையும் பதிவேடுகளோடும், பகட்டோடும் நின்று விடாமல், பண்பட்ட வாழ்வை நோக்கி பயணப்பட வேண்டுமென்ற இறை ஒழுங்கின் படி வாழ நமக்கு அழைப்பு விடுக்கின்றது. உண்மையான ஞானம் இறைவனிடமிருந்தே வருகின்றது. அறிவாளிகள் இறைவனின் கட்டளைகளைப் கற்று, அவற்றை தங்களுடைய வாழ்வாக்குகின்றனர். அறிவிலிகள் ஏட்டில் உள்ள விதிகளை பிடித்து கொண்டு ஞானத்தை கடைசிவரை பெறாமலே செல்கின்றனர். இறைவன் நமக்கு தரும் உன்னதமான கட்டளைளில் முதன்மையானது பிறரிடத்தில் அன்புகாட்டுவது. எனவே, பிறரன்பு பணியில் ஈடுபடுபவரே ஞானமுடையோர். அன்புடையோர் பிறருக்கெதிராய் செயல்பட மாட்டார்கள். அன்னை தெரசா தன்னுடைய இறை ஞானத்தின் வெளிப்பாடாக நலிந்தவர்களிடத்தில் அன்பு பாராட்டினார். இன்னல்களின் மத்தியில் தன்னை எதிர்த்தவர்களுக்கும், இன்முகத்துடன் பணியாற்றினார். இதுவே, இறை வெளிப்பாடு. இதுவே இறைவன் அளிக்கும் ஞானம். ஆகவே, ஞானத்தை நமத்தாக்க அன்புப் பாதையில் பயணிப்போம். அன்பின் பலியில் இணைவோம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

இறைவனின் ஆசி பெற்ற பேரினமாய் திகழ, இறைவனின் கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும். எகிப்தின் பிடியிலிருந்து இஸ்ரேயல் மக்களை மீட்ட இறைவன், அவர்களுக்கு, நியமங்களையும், ஒழுங்குமுறைகளையும் அளித்து அவர்களை ஒரு பேரினமாக்கி, காத்து, வழிநடத்தும் நிகழ்வை எடுத்துக்கூறும் இம்முதல் வாசகத்திற்கு செவி கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இறைவார்த்தைகளை அறிந்து, அதன்படி வாழ்வது வெறும் வாழிபாட்டில் மட்டும் பிரதிபலிக்கக் கூடாது. அது நம் வாழ்விலும் வெளிப்பட வேண்டும். இன்னலுறுபவர்களுக்கும், எளியவர்களுக்கு நாம் செய்யும் சேவையே, இறைவனுக்கு நாம் செய்ய வேண்டிய சேவை என்ற இறைஞானத்தை தரும் இவ்விரண்டாம் வாசககத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.

மன்றாட்டுகள்

1. எளியவர்களின் இல்லமாக திரு அவையை உருவாக்கிய எம் இறைவா! உன் அன்பின் நீட்ச்சியாக நீர் ஏற்படுத்திய திரு அவையின் அனைத்து உறுப்பினர்களுக்காகவும் மன்றாடுகின்றோம். எளியவர்களிடத்தில் அதிக அன்பு செலுத்தி, காயப்பட்ட ஆடுகளை தேடி அரவணைக்க தேவையான இறைவலிமையை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

2. உண்மைக்கு குரல் கொடுத்த எம் இறைவா! சமூகத்தில் உள்ள பிரச்சனைகளையும், அடக்குமுறைகளையும், நாங்கள் கண்டும் காணதது போல் இல்லாமல், நாங்களும் சமுகத்தின் ஒரு அங்கம் என்பதை உணர்ந்து, எங்களுடைய சமுக பொறுப்புகளை ஆற்றிட தேவையான மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. இயற்கையை ஆளுகை செய்யும் எம் இறைவா! நீர் நல்லதென கண்டு படைத்த இயற்கையை, நாங்கள் நல் முறையில் பாதுகாக்கவும், இயற்கையின் அசூர மாற்றங்கள் எங்கள் வாழ்வின் அன்றாட செயல்களை பாதிக்காமால், இயற்கையோடு நாங்கள் என்றும் இணைந்திருக்கும் அருள் வேண்டி உம்மை மன்றாடுகின்றோம்.

4. வார்த்தைக்கு வாழ்வளிக்கும் எம் இறைவா! இறைஞானம் பெற இறைப்பிடம் சூழ்ந்துள்ள நாங்கள் அனைவரும், பிறரன்பு பகிர்வில் வெறும் சொல் வீரர்களாய் மட்டும் இல்லாமல், செயல் வீரர்களாய் இருந்து, பிறரன்பு பணியில் ஈடுபட்டு இறைஞானத்தை எமதாக்கும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

5. நொருங்கிய உள்ளத்தை பலியாக கேட்ட எம் இறைவா! பேராசை, தீச்செயல், வஞ்சகம், , பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு போன்ற உள்ள அழக்குகளை அகற்றி, எங்கள் இல்லங்களை நாங்கள் அலங்கரிப்பது போல, எங்கள் உள்ளங்களையும் அலங்கரிக்கும் வரம் வேண்டி உம்மை மன்றாடுகின்றோம்.



To download pdf


Wednesday, August 21, 2024

பொதுக்காலம் 21-ம் ஞாயிறு 25 – 08 – 2024

 பொதுக்காலம் 21-ம் ஞாயிறு 25 – 08 – 2024

பொதுக்காலம் 21-ம் ஞாயிறு 25 – 08 – 2024

திருப்பலி முன்னுரை

இறைவனின் வார்த்தைகளைக் கேட்டு இறைவழியில் பயணிக்க இவ்விறைப்பீடம் சூழ்ந்துள்ள இயேசுவில் பிரியமான சகோதர, சகோதரிகளே ! தொடக்கத்தில் வாக்கு இருந்தது, அவ்வாக்கு கடவுளோடு இருந்தது, அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது என்ற யோவான் நற்செய்தியாளரின் வார்த்தைகளின் சுருக்கத்தை தியானிக்க பொதுக்காலத்தின் 21-ஆம் ஞாயிறாகிய இன்று நாம் அனைவரும் அழைக்கப்படுகின்றோம். கடவுளோடு விண்ணகத்தில் வீற்றிருந்த இயேசு, மண்ணகத்தில் மனிதராக பிறந்து, மனிதராக வாழ்ந்து, இறைபடிப்பினைகளை வார்த்தையாலும், தன்னுடைய வாழ்வாலும் மக்களுக்கு போதித்தார். இயேசுவினுடைய அன்பின் போதைனைகள் மீது பலர் நம்பிக்கைக் கொண்டனர், சிலர் அவற்றின் மீது நம்பிக்கைக் கொள்ளவில்லை. நாமும் பல நேரங்களில் இயேசுவின் போதைனைகளில் இருந்து தவறி நடக்கின்றோம், இதற்கு காரணம், நாம் இயேசுவினுடைய இறைத்தன்மையை பற்றிய முழமையான அனுபவம் பெறாததே காரணமாகும். நாம் நம்முடைய ஊனியல்புகளுக்கு இடம் கொடுக்;காமல், தூய ஆவியால் முழமையாக ஆட்கொள்ளப்படும் பொழுது, இயேசு காட்டும் பாதையில் பயணிக்க முடியும். தூய அவியால் முழமையாக ஆட்கொள்ளப்படுவதற்காகவும், இயேசுவின் வார்த்தைகளை நம் வாழ்வாக்கவும் வேண்டியும் இந்த உறவின் விருந்தில் பங்கேற்போம்.  

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

 வேற்று தெய்வங்கள் மீதும் ஆர்வம் கொண்டு பொய் தெய்வ வழிபாட்டில் ஈடுபட்ட இஸ்ரேயல் மக்களை, இறைவன் தன்னுடைய பணியாளராகிய யோசவா மூலம் நெறிப்படுத்துகின்றார். இறைவனின் வார்த்தைகளுக்கு செவிகொடுத்த இஸ்ரேயல் மக்களும், இறைவன் தங்களுக்கு செய்த அரும் அடையாளங்களை எண்ணி, இறைவன் பதம் திரும்பும் நிகழ்வை விவரிக்கும் இம்முதல் வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

 கிறிஸ்துவை மனமகனாவும், கிறிஸ்து ஏற்படுத்திய திருஅவையை மனமகளாகவும் உருவகப்படுத்திய பவுல் அடிகளார், திருஅவையின் உறுப்பினர்காளாகிய நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்று போதிக்கின்றார். கிறிஸ்து நமக்காக செய்த தியாகங்களை நினைவுகூர்ந்து, கிறிஸ்துவர்களுக்கு உகந்த வாழ்வு வாழ நமக்கு அழைப்பு விடுக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.


மன்றாட்டுகள்

1. உமது அன்பின் வெளிப்பாடாக திருஅவையை ஏற்படுத்திய எம் இறைவா! கிறிஸ்து விட்டுச் சென்ற அன்பின் பணியை, இன்றும் தியாக உள்ளத்தோடு பணியாற்றும் திருஅவையின் உறுப்பினர்களுக்களாகிய எங்கள் அனைவருக்காகவும் செபிக்கின்றோம். கிறிஸ்துவின் தியாகப் பணியில் எங்களை மேலும் ஈடுபடுத்திக் கொள்ள தேவையான இறைவலிமையைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

 

2. வார்த்தைகளால் உலகை உருவாக்கிய எம் இறைவா! உம் அன்பையும், வல்லமையையும் வெளிப்படுத்துவதற்காக உருவாக்கிய இயற்கையை நாங்கள் எங்களுக்கு அளித்த பரிசாக எண்ணி, இயற்கையை நல்ல முறையில் காக்கவும், மனிதர்களாகிய நாங்களும் இயற்கையின் அங்கம் என்று உணர தேவையான வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


3. திருக்குடும்பத்தின் நாயகனே எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் உள்ள தந்தைகளும், தாய்களும் மற்றும் பிள்ளைகளும் திருக்குடும்பத்தை பிரதிபலிக்க வேண்டுமென்றும், திருக்குடும்பத்தில் உள்ள தியாக உணர்வும், பரசபர அன்பும் எங்கள் குடும்பங்களில் மேலோங்க தேவையான இறை ஞானத்தை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


4. நலம் அளிக்கும் நாயகனே எம் இறைவா! எம்-பாக்ஸ்(ஆ-pழஒ) என்ற புதியவகை கிருமியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவில் நலமளிக்க வேண்டுமென்றும், இந்த புதியவகையை கிருமியை கட்டுபடுத்த வேண்டிய போதிய அறிவை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


5. விண்ணக படிப்பினைகளை மண்ணகம் வந்து போதித்த எம் இறைவா! இறைஞானத்தின் வெளிப்பாடாக நீர் எமக்களித்த திருவிவிலியத்தின் மேன்மையை உணர்ந்து திருவிவிலியத்தில் உள்ள வார்த்தைகளை குறையின்றி கற்று, தியானித்து, எங்கள் வாழ்வில் பின்பற்ற வரமருள வேண்டுமென்று உம்மை

 மன்றாடுகின்றோம்.


To download pdf



தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25

 தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25 திருப்பலி முன்னுரை தவம், செபம் மற்றும் தியாகம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பயணிக்கும் தவக்காலத்தின் மூன்...