இறை வெளிச்சம் புனித திருப்பலி உதவியை வழங்குகிறது. புனித திருப்பலி முன்னுரை நீங்கள் இங்கே காணலாம்.

Saturday, August 10, 2024

பொதுக்காலம் 19-ம் ஞாயிறு 11 - 08 - 2024

 பொதுக்காலம் 19-ம் ஞாயிறு


பொதுக்காலம் 19-ம் ஞாயிறு


திருப்பலி முன்னுரை

விண்ணக உணவின் உன்னதத்தை உணர இவ்விறைப் பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே! மனிதர்கள் ஆகிய நாம் நம்முடைய வாழ்வில் உயர்த்த நிலையை அடைய நாளும் அயராது உழைக்கின்றோம். ஆனால், நாம் தேடி அலையும் அந்த உயர்ந்த நிலை உண்மையானதா, என்று சிந்திக்க பொதுக்காலத்தின் 19-ம் ஞாயிறு திருப்பலி வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுகின்றன. சொந்தம் மறந்து, தூக்கம் இழந்து, நாம் சேர்க்கும் செல்வம் இம்மண்கத்தை சார்ந்தது, அழியக் கூடியது. தந்தையிடமிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவாகிய இயேசு கிறிஸ்துவே, நாம் தேடி சேர்க்க வேண்டிய உண்மையான செல்வம். நாம் இம்மண்ணுலகை சார்ந்தவற்றில் நாட்டம் கொள்ளும் பொழுது, நம்மையே அறியாமல் பொறாமை, கோவம், தலைக்கணம் மற்றும் பல வேண்டா குணங்கள் நமக்கே தெரியாமல் நம்மை ஆட்சி செய்கின்றது. விண்ணக உணவாகிய இயேசு காட்டும் அன்புப் பாதையில் நாம் பயணிக்கும் பொழுது இறையன்பிலும் , பிறரன்பிலும் செழித்து நிலைவாழ்வை நமதாக்கி கொள்கின்றோம். விண்ணகத் தந்தை அளித்த, விண்ணக உணவாம் இயேசுவை பெறுவதற்காக, நிலைவாழ்வளிக்க வல்ல இந்த மகிழ்வின் கொண்டாட்டத்தில் பங்குகொள்வோம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

நம் வாழ்வின் தொடகத்தையும், முடிவையும் அறிந்தவர் இறைவன் ஒருவரே, தன் வாழ்வின் பணிகளை முடித்து விட்டாதாக கருதி இறைவினிடத்தில் தன் உயிரை ஒப்படைக்கும் இறைவாக்கினர் எலியாவை தன்னுடைய பணிக்காக தயார் செய்யும் விண்ணகத் தந்தையின் அன்பை பிரதிபலிக்கும் இம்முதல் வாசகத்திற்கு பக்தியுடன் செவி கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகள். பிள்ளைகள் வழிதவறதும் பொழுது, பெற்றோர் மனம் வருந்துவது போல, நம் இறைவன், நம்முடைய தீய குணங்களின் பொருட்டு வருந்துகின்றார் என்ற இறைவனின் துயரையும்,. இயேசு தம்மையே நமக்களித்த போல நாமும் நம்மை பிறக்காக அளித்திட வேண்டும் என்ற அழைப்பையும் அளிக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.

மன்றாட்டுகள்

1. நிலைவாழ்வை எமக்களிக்க வந்த எம் அன்பு இறைவா! விண்ணகத்தை நாங்கள் உடைமையாக்கி கொள்ள நீர் கற்ப்பித்த வழிகளை அன்றாடும் கடைப்பிடிக்கும் திருஅவையின் அனைத்து உறுப்பினர்களுக்காகவும் மன்றாடுகின்றோம். இயேசு கற்றுத் தந்த வாழ்வின் படிப்பிகளை நாங்கள் அனைவரும் சரியாக பின்பற்றிட தேவையான இறைஞானத்தை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

2. உண்மைக்கு உயிர் கொடுக்கும் எம் இறைவா! எம் நாட்டை ஆளும் தலைவர்களும், ஆட்சியாளர்களும் தங்களின் அதிகாரத்தை, எந்த ஒரு தனி மனிதரின் வாழ்வையும் குலைப்பதற்காகவும் பயன்படுத்தாமல், அவர்களின் வாழ்வை வளப்படுத்தும் மனித பண்புகளை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. படைப்புகளை ஆளுகை புரியும் எம் இறைவா! இயற்கை பேரிடரினால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அனைவருக்காகவும். மன்றாடுகின்றோம். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து, அவர்கள் மீண்டும் இயல்பு நிலை வாழ்க்கைக்கு திரும்ப வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

4. அமைதியை அகிலத்திற்கு அளித்த எம் இறைவா! கடும் போராட்டத்தாலும், வன்முறையாலும் பாதிக்கப்பட்ட வங்கதேச மக்களுக்காக மன்றாடுகின்றோம். போரட்டங்களில் தங்களின் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கு நீரே ஆறுதலாக இருந்து, அவர்களின் நாட்டிலும், வீட்டிலும் அமைதியை மலரச் செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்

5. எங்கள் தேவைகளை நன்கறிந்த எம் இறைவா! இந்த திருவழிப்பாட்டில் பங்கு கொள்ளும் அனைவரின் தேவைகளையும் கண்ணோக்கி, அவர்களுக்கு வேண்டிய வரங்களை அளித்தருள வேண்டுமென்றும், மேலும் விண்ணக உணவாகிய உம்மை நாங்கள் இறுகப்பற்றிக் கொள்ள வரமருள உம்மை மன்றாடுகின்றோம்.


To download pdf 


No comments:

Post a Comment

Lent 3rd Sunday A - தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

MAR 08 2026 தவக்காலம் மூன...