இறை வெளிச்சம் புனித திருப்பலி உதவியை வழங்குகிறது. புனித திருப்பலி முன்னுரை நீங்கள் இங்கே காணலாம்.

Friday, January 30, 2026

Ordinary Sunday 4th Week

FEB
01
2026

பொதுக்காலம் நான்காம் ஞாயிறு

YEAR
A

✦ திருப்பலி முன்னுரை

இறையாசிர் பெற இவ்விறைப் பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே! நம்முடைய வலிமையிலும், வலிகளிலிலும்; கிறிஸ்துவின் வல்லமை முழமையாக வெளிப்படுகின்றது. அனைத்து விதமான வரங்களையும் இறைவன் நமக்களித்து, நிலையான பேரின்பத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றார். இருப்பினும், நாம் நம்முடைய மனித பலவீனங்களால்; அப்பாதையிலிருந்து தவறும் பொழுது, காணாமல் போன ஆடுகளை ஆயன் தேடி மீட்பது போல கிறிஸ்து நம்மை மீட்க, நம்மை நோக்கி வருகின்றார். அப்படி நம் மீட்புக்காக நம்மை அணுகிவரும் இறைவனை எளிமையின் இதயம் கொண்டவராக, ஏழ்ழையின் உள்ளம் கொண்டவராக மனமுவந்து ஏற்க வேண்டும்.

ஏனெனில், இவ்வுலகு எவ்வற்றையெல்லாம் வெறுமையெனக் கருதி விலக்குகினறதோ? அவற்றையெல்லாம் இறைவன் தன் அன்பால் அரவணைத்து தன் பதம் ஈர்த்துக்கொள்கின்றார். எனவே, நாம் இவ்வுலகத்தால் நம்முடைய நற்செயல்களின் பொருட்டும், ஏழ்மையின்; பொருட்டும் வெறுக்கப்பட்டாலும் இறைவனின் அசீரும், துணையும் நமக்கு என்றுமிருக்கும் என்ற நம்பிக்கையுடன் இறைவனின் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.

மேலும், சாதி, பணம், இனம் மற்றும் பதவி போன்ற இவ்வுலக அளவுகோல்களை தகர் தெறிந்துவிட்டு, எளிமை, ஏழ்மை மற்றும் அன்பு என்ற விண்ணக திறவுகோல்களின் துணையுடன் இறைவனின் நிழலில் என்றும் இருப்போம் என்ற நம்பிக்கையுடன் எளியவர்களின் இவ்விறைக் கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்.

✦ வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை (செப்பனியா 2: 3, 3: 12-13)

வாழ்வில் எத்தனை இன்னல்களை சந்தித்தாலும், இறைவனின் மீது நம்பிக்கை இழக்காமல், இறைவனின் வார்த்தையின் படி நடப்பவர்களே உண்மையான விசுவாசிகளாவர். பல்வேறு இன்னல்களை சந்தித்த இஸ்ரேயல் மக்களினம், பலமுறை இறைவன் மறுதலித்து, இறைவனின் பாதையிலிருந்து விலகிச் சென்றது. இந்த இஸ்ரேயல் மக்களைப் போல் அல்லாமல், எளியவரின் உள்ளத்துடன், நேர்மையுடன் வாழ அழைக்கும் இறைவாக்கினர் செப்பனியாவின் வார்த்தைகளுக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை ( கொரி 1: 10-13, 17)

இவ்வுலகின் அளவுகோலும், இறைவனும் அளவுகோலும் முற்றிலும் மாறுபட்டவை. இறைவனின் படைப்பில் தங்களுடைய இயலாமையை ஓப்புக்கொள்பவர்கள் இறைவனின் துணை வேண்டி அதை தங்களுடையதாக்கிக் கொள்கின்றனர். ஞானம், அறிவு மற்றும் வலிமை என அனைத்தையும் அடைந்ததாக கருதுபவர்கள் இறைவனை புறக்கணிப்பதால், வீழ்ச்சி அடைகின்றனர். எனவே, எளிமையின் உள்ளதவராக இவைனில் பெருமை பாரட்ட அழைப்புவிடுக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

✦ மன்றாட்டுகள்

  1. நிலைவாழ்வை எமக்களிக்க வந்த எம் அன்பு இறைவா! விண்ணகத்தை நாங்கள் உடைமையாக்கி கொள்ள நீர் கற்ப்பித்த வழிகளை அன்றாடும் கடைப்பிடிக்கும் திருஅவையின் அனைத்து உறுப்பினர்களுக்காகவும் மன்றாடுகின்றோம். இயேசு கற்றுத் தந்த வாழ்வின் படிப்பினைகளை நாங்கள் அனைவரும் சரியாக பின்பற்றிட தேவையான இறை ஞானத்தை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  2. உண்மைக்கு உயிர் கொடுக்கும் எம் இறைவா! எம் நாட்டை ஆளும் தலைவர்களும், ஆட்சியாளர்களும் தங்களின் அதிகாரத்தையும், அரசின் செல்வங்களை தங்களுடைய சுய இலாபத்திற்காக பயன்படுத்தாமல், மக்களுக்கு பயன்படும் நல்ல திட்டங்களில் செலவழித்திட வேண்டிய நேர்மையான உள்ளத்ததை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  3. படைப்புகளை ஆளுகை புரியும் எம் இறைவா! உலக வெப்பமயமாதல் மற்றும் கடல் நீர்மட்டத்தின் அளவு அதிகரித்தல் என்ற இருபெரும் பேராபத்தை நோக்கி பயணிக்கும் இவ்வுலகின் இயற்கைச் சூழலைப் பாதுகாத்திட வேண்டுமென்று மன்றாடுகின்றோம். இயற்கையை காப்பதற்கு போதுமான விழிப்புணர்வை தந்து, இயற்கையைக் காப்பாற்றி எங்கள் வாழ்வைக் காப்பாற்றிக் கொள்வதற்கான தெளிவை எங்களுக்கு அளித்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  4. அமைதியை அகிலத்திற்கு அளித்த எம் இறைவா! கடும் போராட்டத்தாலும், வன்முறையாலும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்காக மன்றாடுகின்றோம். போரட்டங்களில் தங்களின் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கு நீரே ஆறுதலாக இருந்து, அவர்களின் நாட்டிலும், வீட்டிலும் அமைதியை மலரச் செய்ய வேண்டுமென்றும், போரில் ஈடுபடும் தலைவர்களின் மனதில் அமைதியை விதைத்திட வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகின்றோம்.
  5. எங்கள் தேவைகளை நன்கறிந்த எம் இறைவா! இந்த திருவழிப்பாட்டில் பங்கு கொள்ளும் அனைவரின் தேவைகளையும் கண்ணோக்கி, அவர்களுக்கு வேண்டிய வரங்களை அளித்தருள வேண்டுமென்று மன்றாடுகின்றோம். மேலும் விண்ணக உணவாகிய உம்மை நாங்கள் இறுகப்பற்றிக் கொண்டு , எளியவராக, நேர்மையுடன் தொடர்ந்து வாழ தேவையான வரங்களை தந்தருள உம்மை மன்றாடுகின்றோம்.


Holy Mass Introduction | Tamil Mass Introduction | Thirupali Munnurai | Sunday Mass Introduction | Ordinary 4th Week | Iraivelicham Mass Introduction



Friday, January 23, 2026

Ordinary 3rd Sunday 2026

🌟 பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு 🌟

25-01-2026

✦ திருப்பலி முன்னுரை

கிறிஸ்து ஏற்படுத்திய அன்பின் பாதையில் இவ்வுலகை தொடர்ந்து அழைத்துச் செல்ல, கிறிஸ்து நம்மை சீடர்களாக தேர்ந்து, இறைவனில் தெளிவடையச் செய்கின்றார்.

கிறிஸ்துவுடன் இணைந்து பயணிக்கும் சகோதர, சகோதரிகளே! இன்று நம்முடைய திருஅவை பொதுக்காலத்தின் மூன்றாம் ஞாயிறை சிறப்புடன் கொண்டாடுகின்றது. ஒற்றுமையுடன், சகோதரத்துவத்தை மையமாக கொண்டு இயங்கும் திருஅவையின் தோற்றத்திற்கான காரணத்தையும், தோன்றிய விதத்தையும் இன்றைய வாசகங்கள் தெளிவாக விளக்குகின்றன. இறைவனை விட்டு விலகிச் சென்று அடிமையாக வாழ்ந்த மக்களினத்தை, அடிமையின் பிடியிலிருந்து மீட்பதற்காக மீட்பர் தோன்றினார். நம்முடைய எதிர்பார்ப்பின்படி நம்மிடையே தோன்றிய மீட்பர் அதிகாரத்தை தவிர்த்து, அன்பை விதைத்தார். இறையன்பு மற்றும் பிறரன்பு என்ற அன்பின் கட்டளைகள் மூலம் இறையரசை இம்மண்ணுலகில் இன்று வரை தொடர்ந்து நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றார்.

இந்த அன்பின் அழைப்பானது முதலில் திருத்தூதர்களுக்கு அளிக்கப்பட்டது. அவர்களும் கிறிஸ்துவின் அன்பின் கட்டளைகளை கற்று, கிறிஸ்துவில் தங்களைக் கரைத்துக் கொண்டனர். அன்று, அன்பின் பாதையில் சகோதரத்துடனும் சமத்துவத்துடனும் பயணிக்க சீடர்களுக்கு அளிக்கப்பட்ட அதே அழைப்பானது, இன்று நமக்கும் அளிக்கப்படுகின்றது. சாதி, பதவி, பணம், செருக்கும் மற்றும் பேராசை என்ற உலக மாயைகளை களைந்து, கிறிஸ்துவின் இறைக்குடும்பத்தில் நம்மை இணைத்து கொள்வோம். அதற்கு தேவையான இறையுதவிகளை அளிக்கும் இவ்வொற்றுமையின் கொண்டாட்டத்தில் அகமகிழ்வுடன் ஒன்றிணைவோம்.

✦ வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை (எசாயா 9: 1-4)

இவ்வுலகிற்கு ஒளியைக் கொண்டுவர வல்ல இறைவனின் பாதையில் நாம் நடக்கும் பொழுது, இறைவன் அளிக்கும் அவ்வொளியைக் கண்டு கொள்வோம். அதன் மூலம், துன்பங்களை தங்கள் வாழ்வில் அனுபவிக்கும் ஒவ்வொருவரும் இறைவன் அளிக்கும் இன்பத்தின் அகமகிழ்வை நிச்சயம் அடைந்திடுவர் மற்றும் இறைவனின் நிலையான உறவில் இணைந்திடுவர் என்ற நம்பிக்கையை அளிக்கும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை ( கொரி 1: 10-13, 17)

கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொண்டு, கிறிஸ்துவின் பெயரால் கூடிய வாழும் நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள். கிறிஸ்து நம்முடைய மனித நிலையை தேர்ந்து கொண்டு, மானிடத்தை உயரத்தினார். எனவே, இறைவனின் பிள்ளைகளாகிய நாம் மானிடத்தின் பண்புகளாகிய சமத்துவத்துவத்தில் மேலோங்கி, நம்மிடத்தில் உள்ள வேறுபாடுகளைக் களைய அழைப்புவிடுக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு இறைக்குடும்பத்தின் உறுப்பினர் என்ற உணர்வுடன் செவிகொடுப்போம்.

✦ மன்றாட்டுகள்

  1. அன்பின் சமுகத்தை கட்டியெழுப்ப வல்ல எம் இறைவா! அகில உலக கிறிஸ்துவர்களின் ஒற்றுமைக்காக இவ்வாரம் முழுவதும் மன்றாடிய நாங்கள் இறைவிருப்பத்தின்படி ஒற்றுமையாக இருக்கவும், எங்கள் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை முன்னிறுத்தாமல் கிறிஸ்துவை மையமாக கொண்டு இறையரசை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் செயல்பட தேவையான அருள்வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  2. எங்களை வழிநடத்தும் நல் ஆயனே எம் இறைவா! சுயநலமற்ற முன்மதியுடன் செயல்பட கூடிய நல்ல தலைவர்களுக்காக மன்றாடுகின்றோம். வெறுப்பு அரசியல் மூலம் மக்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்தி, அரியாமையை விதைக்கும் தலைர்களை தவிர்த்து, பிறநலன நோக்கத்துடன் நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல வல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க தேவையான அறிவொளியை தந்திட வேண்டுமென்று உம்மை மன்றாகின்றோம்.
  3. அறிவின் ஊற்றே எம் இறைவா! வரும் காலங்களில் தேர்வை சந்திக்க உள்ள எம் பிள்ளைகளுக்காக மன்றாடுகின்றோம். இந்த தேர்வுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தேர்வுகளுக்கான தயாரிப்பிற்காக கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல், தேர்வுக்கான தயாரிப்புகளை இன்றே தொடங்கிட தேவையான வரங்களையும், அதற்கு உகந்த மனநிலையும், உடல்நிலையும் அளித்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  4. துன்புறுவோரின் துணையாளரே எம் இறைவா! உலகில் நிலவும் ஏழ்மை, வறுமை, இல்லாமை என்ற நிலைகள் மாறி இருப்பவர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப, சேமித்து, அளவுக்கு அதிகமான பொருட்களை, எழைகளோடு பகிர்ந்து கொண்டு உண்மையான கிறிஸ்தவ வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  5. அரவணைக்கும் எம் இறைவா! இளையோர்கள் தாங்கள் விரும்பிய வாழ்வைக் கிறிஸ்து இயேசுவை அடிக்கல்லாகவும், அவரின் வாழ்வை மூலைக்கல்லாகவும் கொண்டு புதிய சிந்தனைகளோடும், புதிய ஆற்றவோடும் பணிவாழ்வே தங்களின் வாழ்வின் நிலையான வாழ்வு என்பதை உணர்ந்து வாழ்ந்திடத் தூய ஆவியின் வழி நடத்துதலைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

                                        

Holy Mass Introduction | Tamil Mass Introduction | Thirupali Munnurai | Sunday Mass Introduction | Baptism of Lord

Friday, January 16, 2026

Ordinary 2nd week Sunday

🌟 பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு 🌟

18- 01- 2026


✦ திருப்பலி முன்னுரை

திருமுழுக்கினால் கிறிஸ்துவோடு பிணைக்கப்பட்டு கிறிஸ்துவின் சகோதர, சகோதரிகளாக இத்திருக்கொண்டாட்டத்தில் பங்கெடுக்கும் அன்பு உள்ளங்களே! இன்று நம்முடைய தாயாம் திருஅவை பொதுக்காலத்தின் 2-ஆம் ஞாயிறை சிறப்புடன் கொண்டாட நமக்கு அழைப்புவிடுக்கின்றது. இன்றைய திருவழிபாட்டு வாசங்கள் அனைத்தும் கிறிஸ்து திருமுழக்கின் வழியாக பெற்ற இறையாசிரைப் பற்றி எடுத்துக்கூறி, கிறிஸ்துவில் பற்றுகொண்ட நம்பிக்கையாளர்களாக நம்மை வாழ அழைக்கின்றது.

கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற பொழுது தூய ஆவியானவர் புறாவின் வடிவில் கிறிஸ்துவின் மீது இறங்கி, கிறிஸ்து மேற்கொள்ளவிருந்த இறையரசின் பணிகளுக்கு பலமளித்து, அலகையின் சோதனைகளை வெற்றி கொள்ள திடமளித்தார். கிறிஸ்துவின் சீடர்களாக திருமுழுக்கினால் புதுபிறப்பினை பெற்ற நாமும் கிறிஸ்துவை போல தூய ஆவியாரின் துணைகொண்டு வாழ்வதன் வழியாக கிறிஸ்து அளிக்கும் மீட்பை நமதாக்கி கொள்ள முடியும். அந்த மீட்பின் வழியாகவே, இறைவனின் அன்பில் என்றும் நிலைத்து நிற்கும் இறைப்பிள்ளைகளாவும், கிறிஸ்துவின் சகோதர, சகோதரிகளே வாழ நம்மையே நாம் தகுதிப்படுத்திக் கொள்ள முடியும். எனவே, இறைவனின் பெருமகிழ்வில் பங்குகொள்ள நம்மை ஆன்ம, உடல் மற்றும் மனரீதியாக தயார்படுத்தும் இந்த தாயரிப்பின் கொண்டாட்டத்தில் பெருமகிழ்வுடன் பங்கெடுத்து கிறிஸ்துவில் அகமகிழ இத்திருப்பலியில் இணைவோம்! இறையருளைப் பகிர்வோம்.

✦ வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை (எசாயா 42: 1-4,6-7)

கடவுள் நம்மை தம்முடைய பிள்ளைகளாக கருதுகின்றார். தம்முடைய அன்பின் அடையளமாக அவர் நம்மைத் தேர்ந்து கொண்டார். நாம் இறைனை விட்டு விலகிச் செல்லும் வேளைகளில், தன்னுடைய இறைவாக்கினர்கள் வழியாக வாக்குரைத்து நம்மை நல் வழிப்படுத்துகின்றார். எவ்வித எதிர்பார்ப்புமின்றி நம்மை மீ;ட்க வல்ல இறைவனின் அன்பின் அரவணைப்பை உணர்த்தும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை (திருத்தூதர் பணிகள் 10: 34-38)

மனிதராய் பிறந்த இயேசு கிறிஸ்து இவ்வுலக மக்கள் அனைவருக்கும் மிட்பளித்தார். இறைவன் கிறிஸ்துவின் வழியாக நம் அனைவரையும் ஒரே குலத்தின் மக்களாக ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தார். அப்படி, ஓரின மக்களாக வாழும் நமக்கு பவுல் அடிகளார் வழங்கும் ஆசி பெற்ற வார்த்தைகளை உள்ளடக்கிய இவ்விரண்டாம் வாசகத்திற்கு செவிகொடுத்து இறைவனின் ஆசிரை நமதாக்குவோம்.

✦ மன்றாட்டுகள்

  1. அன்பை அடித்தளமாகக் கொண்டு திருஅவையை கட்டி எழுப்பிய எம் அன்பு இறைவா! திரு அவையின் உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும் இறையன்பையும், பிறரன்பையும் எவ்வித குறையும் இன்றி கடைபிடிக்க தேவையான அருள் வரங்களை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்றும், கிறிஸ்துவின் பிள்ளைகளாக என்றும வாழ்ந்திட வரமளித்திட வேண்டுமென்றும் உண்மை மன்றாடுகின்றோம்.
  2. உலகுக்கு உரு கொடுத்த எம் இறைவா! இவ்வுலகில் மக்களை வழிநடத்தும் அனைத்து தலைவர்களையும் நிறைவாக ஆசீர்வதியும். இவர்கள் அனைவரும் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து, மக்கள் மீது அன்பு கொண்டு, அவர்களை அன்பின் பாதையில் நடத்திட வேண்டிய வரங்களை தந்து, சுயநலமற்ற பிறநல சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  3. ஆதரவற்றோருக்கு ஆதரவே எம் இறைவா! முழுமையான அன்பும், முறையான கவனிப்பும் இன்றி தவிக்கும் அனைத்து முதியோர்களுக்காகவும் மன்றாடுகிறோம். இவர்களுக்கு தேவையான அன்பையும் அரவணைப்பையும் தரவேண்டிய பொறுப்புணர்வை எங்களுக்கு தந்தருளும். எங்கள் வீட்டில் உள்ள முதியவர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு அவர்களை அன்புடன் நடத்திட வேண்டிய அருள் வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  4. அறிவின் ஒளியே எம் இறைவா! எம் நாட்டின் இளைஞர்களும், இளம் பெண்களும் தங்களுடைய வாழ்வில் அடைய வேண்டிய குறிக்கோள்களை நோக்கி பயணித்திட வேண்டிய அறிவொளியை தந்தருளும். விலைமதிப்பற்ற தங்களுடைய நேரத்தை பொழுதுபோக்குகளில் செலவழிக்கமால் தங்கள் வாழ்க்கைக்கு உதவும் அறிவுசார் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டிய அனைத்து வரங்களையும் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  5. அழியும் செல்வமான இம்மண்ணக செல்வத்தின் மீது நாட்டம் கொள்ளாமல், நிலையான செல்வமாகிய விண்ணகச் செல்வத்தை உடைமையாக்கி கொள்வதற்கான வழியாகிய அன்பை நாங்கள் இறுகி பற்றி கொள்ளவும். பிறர அன்பு பணிகளில் அதிகமாக ஈடுபடவும் வேண்டிய தாராள மனதை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

Holy Mass Introduction | Tamil Mass Introduction | Thirupali Munnurai | Sunday Mass Introduction | Baptism of Lord

Saturday, January 10, 2026

Baptism of Lord ஆண்டவரின் திருமுழுக்கு 2026

🌟 ஆண்டவரின் திருமுழுக்கு 🌟

04-01-2026


✦ திருப்பலி முன்னுரை

திருமுழுக்கின் வாயிலாக நம்முடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு நாம் இறைவனின் மாசற்ற பிள்ளைகளாகின்றோம். நாம் பெற்ற திருமுழுக்கின் வழியாக நாம் தேர்ந்தெடுத்த பாதையான கிறிஸ்துவின் பாதையில் பயணிக்கும் பொழுது கிறிஸ்து அருளும் தூய ஆவியின் திருமுழுக்கை பெறுகின்றோம்.

மண்ணுலக மாந்தரை பாவத்திலிருந்து மீட்க தோன்றிய இறைமகன், இறைவனின் பாதையில் என்றும் நடக்க திருமுழுக்கின் மூலம் தன் இறைத்தன்மையை உறுதி செய்தார். இதன் அடையாளமாக இறைமகன் இயேசு கிறிஸ்து யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்ற பொழுது, இறைவனின் தூய ஆவியானவர் புறா வடிவில் இயேசுவின் மீது இறங்கி வந்தார். நம்மை பாவத்திலிருந்து மீட்டு, நிலையான பேரின்ப வாழ்விற்கு அழைத்துச் செல்ல வல்ல கிறிஸ்துவின் மீது இறைவன் கொண்ட அன்பை, “என் அன்பார்ந்த மகன் இவரே, இவர் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” என்ற தன் அன்பு வார்த்தைகளால் வெளிப்படுத்துகின்றார். இறைவன் இயேசுவிற்கு அருளிய அதே தூய ஆவியை நமக்கும் நம்முடைய திருமுழுக்கின்; பொழுது அளிக்கின்றார். இயேசு தான் பெற்றுக்கொண்ட தூய ஆவியின் ஆற்றலால் இறைவனுக்கு உகந்த வாழ்க்கையை வாழ்ந்து, இறைத்திருவுளத்தை நிறைவேற்றினார். நாமும் நாம் பெற்றுக்கொண்ட தூய ஆவியின் வல்லமையால் நம்முள் உள்ள மன அழுக்குகளை அகற்றி இறைவன் காட்டும் அன்பின் பாதையில் என்றென்றும் பயணிப்போம். அந்தப் பயணத்திற்கு தடையாக உள்ளவற்றை, திருமுழுக்கின் வாயிலாக நாம் பெற்றுக் கொண்ட தூய ஆவியின் துணையுடன் வெற்றி கொண்டு இறைவனின் பிள்ளைகள் என்ற உறுதியுடன் இந்த இறைசமுகத்தின் சங்கமத்தில் சங்கமிப்போம்.

✦ வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை (எசாயா 42: 1-4,6-7)

ஆயனின் வருகை எதிர்பார்த்து மந்தை காத்திருப்பது போல, நமக்கு வாழ்வளிக்க வரும் எல்லாம் வல்லவரின் வருகைப் பற்றி விரிவானக் குறிப்புகள் இன்றைய முதல் வாசகத்தில் தரப்பட்டுள்ளது. துவண்டு கிடந்த மக்களினத்திற்கு புதுப்பொலிவளிக்க வல்ல மீட்பரை வரவேற்கும் படி இறைவாக்கினர் எசாயா அவர்கள் இறைவாக்குறைக்கின்றார். எனவே, இறைவனிடமிருந்து வரும் மீட்பையும், மீட்பரையும் நமதாக்குவதற்கான வழிகளைக் கற்பிக்கும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை (திருத்தூதர் பணிகள் 10: 34-38)

மனிதராய் பிறந்த அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவன் அளிக்கும் அருள் வெளிப்படுத்தப்படுகின்றது. மனிதராய் நம்மிடையே பிறந்த இயேசு கிறிஸ்து நம்மை அனைத்து தீமைகளிலிருந்து காத்து, நீதியின் பாதையில் நடத்திடுவார் என்றும், இறைவனிடமிருந்து பெற்ற தூய ஆவியின் வல்லமையுடன் அலகையை வெற்றி கொண்டார் என்ற இறை உண்மைகளை விளக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

✦ மன்றாட்டுகள்

  1. இயேசுவின் பெயரால் திருமுழக்கு பெற்று, இறைச் சமுகமாய் ஒன்று கூடி வாழும் திருஅவையின் அனைத்து உறுப்பினர்களும் இயேசு காட்டிய அன்பின் பாதையில் தொடர்ந்து பயணிக்கவும், நாங்கள் பெற்ற திருமுழக்கின் உன்னதத்தை உணர்ந்து, தூய ஆவியின் வாழிகாட்டுதல்களின் படி எங்கள் வாழ்வை சீரமைக்க வேண்டிய அருள் வரங்களை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  2. உண்மையை உலகுக்கு அளிக்க வந்த எம் அன்பு இறைவா! கடமை, கண்ணியம் தவறாது உழைக்கும் அனைத்து தலைவர்களுக்காகவும், அதிகாரிகளுக்காகவும் மன்றாடுகின்றோம். எந்த சூழலிலும் கடமை தவறாது உழைக்கும் உண்மையானவர்களுக்கு, உண்மையின் வழியில் தொடர்ந்து பயணிப்பதற்கான ஆற்றலையும், உண்மையின் வழியில் செல்லாதோர்க்கு தகுந்த ஞானத்தை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  3. எங்கள் தேவைகளை நன்கறிந்த எம் இறைவா! கடும் நோய்களாலும், தீராத மன உளைச்சலாலும் அல்லல்படும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். விண்ணகத்திலிருந்த மண்ணகத்திற்கு இறங்கி வந்த மண்ணக உணவாகிய நீரே, அவர்களுக்கு ஆறுதலாக இருந்து நலமளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  4. விண்ணக உணவாக மண்ணகம் வந்த எம் இறைவா! அன்றாட உணவில்லாமல் வீடுகளிலும், வீதிகளிலும் வசிக்கும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்களுக்கு ஆன்மா உணவையும், அன்றாட உணவையும் அளிக்க வழிவகை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  5. ஞானத்தை வாரி வழங்கிய எம் அன்பு இறைவா! கிறிஸ்துவை மையமாகக் கொண்டு சிறிய திருஅவையாக கூடி செபிக்கும் நாங்கள் அனைவரும், கிறிஸ்துவின் போதனைகளுக்கு ஏற்றவாறு எங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளவும், எம் பங்கிலுள்ள் இறைப் பணியாளர்களும், இறைமக்களும் ஆன்ம வாழ்வில் மென்மேலும் வளர அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

Holy Mass Introduction | Tamil Mass Introduction | Thirupali Munnurai | Sunday Mass Introduction | Baptism of Lord

Friday, January 2, 2026

Lord's Epiphany Mass Introduction

🌟 ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா 🌟

04-01-2026

“ஒளி அனைவருக்கும் வெளிப்பட்டது”


✦ திருப்பலி முன்னுரை

விண்ணகத்திலிருந்து மண்ணகம் இறங்கி வந்த இயேசு பாலனின் ஆசீரானது, எளிமையான இறை நம்பிக்கையை கொண்ட இடையர்களுக்கும், ஆழமான ஞானத்தை பெற்ற ஞானிகளுக்கும் நிறைவாக வழங்கப்பட்டது. ஏனெனில், இவர்கள் இருவருமே இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டு, இறைவனின் ஆசீரை வேண்டினர். இதனால் இறைவன் அருளிய ஆசீர் அவர்களுக்கு நிறைவாக கிடைத்தது. மாட்டு தொழுவத்தில் பிறந்த இயேசு பாலன், இடையர்கள் மற்றும் ஞானிகளின் உள்ளத்திலும் பிறந்தார். அதன் விளைவாக இடையர்கள் ஆர்ப்பரித்தார்கள், ஞானிகள் காணிக்கைகளை பாலனுக்கு பரிசாக அளித்தனர்.

வானதூதரும், வான் நட்சத்திரமும் இயேசு பாலனை காண இடையர்களுக்கும் ஞானிகளுக்கும் அழைப்பு அளித்தது போல இன்றைய திருவழிபாட்டின் வாயிலாக நமக்கும் அழைப்பு விடுக்கப்படுகின்றது. இயேசுவை காண வந்த மூன்று ஞானிகளுக்கு இவ்வுலகில் தாங்களிடத்தில் இருந்த சிறந்தவைகளை இறைவனுக்கு காணிக்கையாக அளித்தனர். நாம் எதை இத்திரு வழிபாட்டின் வாயிலாக இறைவனுக்கு அளிக்க வேண்டும்; என்று சிந்திப்போம். நீங்கள் குழந்தையாய் மாறாவிடில், விண்ணரசிற்குள் புக முடியாது என்று மொழிந்த இயேசுவே நம்மிடத்தில் குழந்தையாக பிறந்துள்ளார். எனவே, அக்குழந்தைக்கு போட்டி, பொறாமை அற்ற எளிய குழந்தை உள்ளத்தை பரிசாக அளிப்போம். கடினப்பட்ட நம் உள்ளத்தை கள்ளமில்லாத ஒன்றாக மாற்ற இந்த பகிர்வின் கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்.

✦ வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

பல்வேறு துன்பங்களினால் அவதியுற்ற இவ்வுலக மக்களுக்கு ஒளியை வழங்க இறைவனே மனிதனாக பிறந்தார். வாட்டமுற்ற மக்களின் மனதை இறைமகனின் பிறப்பின் முன்னறிவிப்பு செய்தி மூலம் இறைவாக்கினர் எசாயா வளமடையச் செய்கின்றார். இறைவனின் பிரதிநிதியாக அவர் கூறும் ஆசிர்வாத மொழிகளை உள்ளடக்கிய இம்முதல் வாசகத்திற்கு அவலுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

அறிவில் மிகுந்த எத்தனையோ ஞானிகளுக்கும், இறைவாக்கினர்களுக்கும் கிடைக்க அரிய பெரும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. இறைப்பண்பை கொண்ட இறைவன் மனிதராய் பிறந்ததன் மூலம் நம்மை அவருடைய உடன் பங்காளியக மாற்றுகின்றார். எளியவர்களாகிய நமக்கு அளிக்கப்பட்ட இந்த இறைவெளிப்பாடு எத்தனை மதிப்புமிக்கது என்று விளக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்

✦ மன்றாட்டுகள்

  1. எளியவர்களைத் தேடிச் செல்லும் எம் அன்பு இறைவா! விளிம்பு நிலை மக்களை தேடிச் சென்று தேற்றும் உன் திரு அவையின் அனைத்து உறுப்பினர்களுக்காகவும் மன்றாடுகிறோம். இயேசு பாலனின் பிறப்பால் மகிழும் நாங்கள் அனைவரும் இயலாதவர்களுக்காக நாங்கள் செய்யும் சேவைகளை மென்மேலும் சிறப்பாக செய்திட தேவையான உதவிகளை அளித்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  2. தாழ்ச்சியின் உருவே எம் இறைவா! தேவையற்ற ஆடம்பர நிகழ்வுகளிலும், மக்களுக்கு உபயோகமற்ற திட்டங்களிலும் எம் நாட்டுத் தலைவர்கள் பணத்தை வீணடிக்காமல், தொலைநோக்குடைய நல்ல திட்டங்களை தீட்டி, மக்களின் வாழ்வை உயரச் செய்ய தேவையான மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  3. நநொருங்கிய உள்ளத்தை பலியாக கேட்ட எம் இறைவா! பேராசை, தீச்செயல், வஞ்சகம், பொறாமை, செருக்கு, போன்ற உள்ள அழக்குகளை அகற்றி, எங்கள் இல்லங்களை நாங்கள் அலங்கரிப்பது போல, எங்கள் உள்ளங்களையும் அலங்கரித்து ஞானிகள் தங்களிடத்தில் இருந்தவற்றில் சிறந்ததை உமக்கு அளித்தது போல, நாங்களும் எம்மையே உமக்கு காணிக்கையாக்கும் மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  4. வார்த்தைக்கு வாழ்வளிக்கும் எம் இறைவா! இறைஞானம் பெற இறைப்பிடம் சூழ்ந்துள்ள நாங்கள் அனைவரும், பிறரன்பு பகிர்வில் வெறும் சொல் வீரர்களாய் மட்டும் இல்லாமல், செயல் வீரர்களாய் இருந்து, பிறரன்பு பணியில் ஈடுபட்டு இறைஞானத்தை எமதாக்கும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  5. குழந்தைகளை விரும்பிய எம் அன்பு இறைவா! தலைமுறை இடைவெளியாலும், தகவல் தொழில் நுட்ப கருவிகளாலும் கட்டுண்டு தவிக்கும் எம் குழந்தைகளுக்கு, இறையரசின் மேன்மைகளை உணர்த்தும், நல்ல பண்புகனை கொண்ட வழிகாட்டிகளை அளித்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

Holy Mass Introduction | Tamil Mass Introduction | Thirupali Munnurai | Sunday Mass Introduction

Lent 3rd Sunday A - தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

MAR 08 2026 தவக்காலம் மூன...