Thursday, March 20, 2025

தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25

 தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25




திருப்பலி முன்னுரை

தவம், செபம் மற்றும் தியாகம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பயணிக்கும் தவக்காலத்தின் மூன்றாம் வாரத்தில், மனம் வருந்தி விண்ணகத்தை உடமையாக்கிக் கொள்ள  நம் அனைவரும் அழைக்கப்படுகின்றோம். நம் பாவங்களுக்காக சிலுவையில் மரித்து உயிர்த்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, பாவமற்ற பரிசுத்த வாழ்வு வாழ்வதற்கான வழிகளை நமக்கு காட்டியுள்ளார்.  ஒரு மரத்தின் கனியின் மூலம் மரமானது அறியப்படுவது போல, நம்முடைய செயல்களே நம்மைப் பற்றி இவ்வுலகுக்கு எடுத்துரைக்கின்றன. எனவே, இத்தவக்காலத்தில் நாம் மேற்கொள்ளும் பக்தி முயற்சிகள் அனைத்தும் நம்முடைய செயல்களில் வெளிப்பட வேண்டும். ஏனெனில், நாம் அனைவரும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டுள்ளோம். ஆகவே, கிறிஸ்துவின் இயல்புகள் நம்மில் வெளிப்பட வேண்டும். ஆவ்வாறாக, கிறிஸ்துவின் இயல்புகளை நாம் பெற வேண்டுமெனில் நம்முடைய பாவங்களுக்காக மனம் வருந்தி, பாவத்தை விலக்கி, அனைவருக்கும் நலமளிக்க கூடிய வகையில் வாழ வேண்டும். மரத்தின் கிளைகளை தரித்து விடுவது போல, நம்மிடத்தில் உள்ள வேண்டாத குணங்களை இத்தவகாலத்தில் விலக்குவோம். கிறிஸ்து வாக்களித்த விண்ணகத்தின் குடிமக்களாக மாற தகுதி பெற வேண்டி இந்த பாவ கழுவாயின் பலியில் பக்தியுடன் பங்கெடுப்போம். 

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

துன்பத்தில் வாடுவோரின் துயர் துடைக்க இறைவன் தன்னுடைய பணியாளர்களை தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருக்கின்றார். எகிப்தில் கடும் கொடுமைகளுக்குள்ளான இஸ்ரேயல் மக்களை, மீட்பதற்கு இறைவன் மோசேவை அனுப்பினார். அவ்வாறு மோசே இறைவனின் பணிக்காக அனுப்பபடும், இறைவன் மோசேவின் நம்பிக்கயை  உறுதிபடுத்தும் வார்த்தைகளைக் கொண்ட இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம். 

இரண்டாம் வாசக முன்னுரை

பாலைநிலத்தில் பயணம் செய்த இஸ்ரேயல் மக்களை இறைவன் நிறைவாக ஆசிர்வதித்து, அவர்களுக்கு தேவையான அனைத்தும் நலன்களையும் அளித்தார். இருப்பினும், இஸ்ரேயல் மக்கள் இறைவனுக்கு எதிராக பாவம் புரிந்தனர். பாவத்தில் விழுந்து இஸ்ரேயல் மக்களை போலில்லாமல், விண்ணகத்தை உறைவிடமாக கொண்ட நம் ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றி விண்ணகத்தின் மக்களாக வாழ அழைக்கும் இவ்விரண்டாம் வாசகத்த்pற்கு பக்தியுடன் செவிகொடுப்போம். 


மன்றாட்டுகள்

1. அன்பை ஆணிவேராக கொண்டு நீர் உருவாக்கிய உம் திரு அவைக்காக மன்றாடுகின்றோம். இறைவாக்கினர்களும், மெசியாவும் எவ்வித தொய்வுமின்றி இறைப்பணி ஆற்றியது போல உம் திரு அவையின் தலைவர்களும், உறுப்பினர்களும் தளராது இறைப்பணி ஆற்ற தேவையான மன திடத்தை தந்தருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.


2. உறவுகளை உன்னத விருந்தின் மூலம் கட்டி எழுப்பும் எம் அன்பு இறைவா! திருப்பலியில் பங்கேற்று ஒரே பாத்திரத்தில் இருந்து நற்கருணை உட்கொள்ளும் நாங்கள் அனைவரும் ஒரே மக்கள் என்ற உணர்வைப் பெற்று எவ்வித வேறுபாடு இன்றி ஒற்றுமையில் நிலைத்திருக்கவும்;. சாகோதரத்துடன் வாழவும் அருள் புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.



3. நம்பிக்கையை வலுப்படுத்தும் எம் இறைவா! இறை வேண்டலில் ஈடுபட்டு இறைநம்பிக்கையில் வலுபெற இறைபீடம் சூழ்ந்துள்ள எங்கள் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். எங்களுடைய குறைகளை ஏற்று, இறைவழியில் நடந்து, இறைவனின் வல்லமையை பெற எங்களுக்கு தேவையான அருளைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


4. மனம் வருந்துங்கள் என்று மொழிந்த எம் இறைவா! தவக்காலத்தில் பக்தி முயற்சிகளில் ஈடுபடும் எங்களின் செப வாழ்வு, எங்கள் அன்றாட வாழ்வில் வெளிப்பட வேண்டுமென்றும். எங்களிடத்தில் உள்ள தீய குணங்களை விலக்கி விண்ணத்தின் மக்களாக வாழ வரமருளி, உம் மந்தையில் எம்மையும் சேர்த்துக் கொள்ள வேண்டி உம்மை மன்றாடுகின்றோம். 


5. அல்லல்படுவோரின் ஆதரவே எம் இறைவா! பருவநிலை மாற்றத்தாலும், மோசமான உடல்நிலையாலும் பாதிக்கப்பட்டு அல்லல்படும் மக்களை நிறைவாக ஆசிர்வதியும். நீரே அவர்களுக்கு அதரவாக இருந்து, அவர்களின் துயர்துடைத்து அவர்களுக்கு புதுவாழ்வளித்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


To Download PDF



 


Saturday, March 15, 2025

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை

கிறிஸ்து இயேசுவில் அன்புக்குரியவர்களே, 

தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு திருப்பலி இயேசுவின் தோற்றம் மாற்ற் நிகழ்வைப் பற்றி சிந்திக்க அழைப்புவிடுக்கின்றது. 

இயேசு தோற்றம் மாறும் பொழுது அவருடைய மனித சாயல் மறைந்து, இறைசாயல் வெளிப்படுகிறது. இயேசு தாபோர் மலையில் வேண்டிக் கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது, அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது. இந்த தோற்றம் மாறும் நிகழ்வானது இயேசு மனித சாயலும், இறைசாயலும் கொண்டுள்ளார் என்பதை உறுதிபடுத்தி, அவர் கடவுளின் மகன் என்றும், நமக்காக இவ்வுலகிற்கு வந்து, நம் பாவங்களுக்காக தன் உயிரை கையளிக்க போகிறார் என்பதன் முன் அடையாளமாக இருக்கிறது. இயேசு இறைவேண்டல் வழியாக துன்பத்தை ஏற்க வலிமை பெறுகிறார், மனவுறுதி கொள்கிறார். இதன் மூலம் தன் பாடுகளை ஏற்க ஆயத்தமாகிறார். 

ஒவ்வொரு திருப்பலியும் இயேசுவின் பாடுகளை தியானிக்கவும், மனமாற்றம் பெறவும் அழைப்புவிடுக்கிறது. இத்தவக்காலத்தில் பக்தி நிறை செயல்களை செய்து, செபத்தில் நிலைத்து, திருப்பலிக்கு முக்கியதுவம் கொடுத்து, நம் பாவங்களுக்காக மனம் வருந்தி, மன்னிப்பு பெற்று. நம் வாழ்வில் மாற்றம் பெற இத்திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசகம் முன்னுரை தொடக்கநூல் 15:5-12, 17-18, 21 

இன்றைய முதல் வாசகமானது தொடக்கநூலிலருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆபிரகாம் ஆண்டவர் மீது கொண்ட நம்பிக்கையும், அதற்கு கைமாறாக இறைவன் அபிரகாமுக்கு ஆசிளித்து அவருடன் உடன்படிக்கை செய்து கொண்டதையும் எடுத்துரைக்கிறது. ஆபிரகாம் போல் ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்ளவும், அவருடைய முடிவில்லா. அன்பையும், ஆசிரையும் பெற்று கொள்ள அழைப்புவிடுக்கும் இம்முதல் வாசகத்திற்கு பக்தியுடன் செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை பிலிப்பியர் 8:17-4:1 

இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் விண்ணக வாழ்வை பற்றி சிந்திக்க அழைப்புவிடுக்கிறார். விண்ணகமே நம் தாய்நாடு என்பதை மையப்படுத்தி, இவ்வுலகில் நாம் வாழும் வாழ்வானது நிலையில்லாதது. எனவே, மண்ணகம் சார்ந்தவை பற்றி எண்ணாமல் விண்ணகம் பற்றி சிந்திக்க அழைப்புவிடுக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு செவிமடுப்போம்.


மன்றாட்டுகள்

1. மனமாற்றத்தின் பாதையில் மக்களை வழிநடத்த திருஅவையை ஏற்படுத்திய எம் இறைவா! கிறிஸ்துவின் சீடர்களாகிய நாங்கள் அனைவரும், கிறிஸ்துவின் போதனைகளின் படி எங்கள் வாழ்வை நடத்தவும், கிறிஸ்துவின் பாடுகள் மூலம் நாங்கள் பெற்ற மீட்மை என்றென்றும் காத்துக்கொள்ள வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

2. பாவிகனை மன்னிக்கும் எம் இறைவா! குற்றங்கள் புரிந்து, அதற்காக தண்டனை அனுபவிக்கும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்கள் அனைவரும் தங்கள் தவறுகளுக்காக மனம் வருந்தி, தங்கள் வாழ்வை புதிய பாதையில் அமைத்துக் கொள்ள தேவையான அனைத்து வரங்களையும் பொழிந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. அமைதியை ஏற்படுத்த வந்த எம் இறைவா! எங்கள் இல்லங்களில் அமைதி, ஒற்றுமை, விட்டுக்கொடுத்தல் போன்ற இறைப்பண்புகள் மேலோங்கிட வேண்டுமென்றும், மனமாற்றத்தின் காலமாகிய இத்தவக்காலத்தில் எங்கள் குடும்பங்களில் உள்ள உறவு பிணைப்புகள் வலுப்பெற தேவையான அருள்வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

4. தங்கள் நாடுகளையும், வீடுகளையும் இழந்து அகதிகளாக வாழும் அனைத்தும் மக்களையும் நிறைவாக அசீர்வதிக்கும்படி மன்றாடுகின்றோம். கடுமையான மன மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகும் இவர்களை நாங்கள் அனைவரும் எங்களுடைய சகோதரர்களாக கருதி அவர்களுக்கு மதிப்பும், நல்வாழ்வும் அளிக்க தேவையான தாராள மனதை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

5. அன்பின் இறைவா, ஏழ்மையிலும், பசியாலும், பட்டினியாலும் வாடுவோருக்காக செபிக்கின்றோம். இத்தவக்காலத்தில் தர்மம், நோன்பு, இறைவேண்டல் ஆகியவற்றை மையப்படுத்தி வாழும் எம்மக்கள் தங்களால் முடிந்த உதவிகளையும், பொருட்களையும் இல்லாதவர்களோடு பகிர்வாழும் மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


To Download PDF

Wednesday, March 5, 2025

தவக்காலம் முதல் ஞாயிறு 09-03-25

தவக்காலம் முதல் ஞாயிறு 09-03-25

தவக்காலம் முதல் ஞாயிறு 09-03-25

திருப்பலி முன்னுரை

தவக்காலத்தின் முதல் ஞாயிறு திருப்பலி கொண்டாட்டத்தின் வழியாக சோதனைகளை வெற்றி கொள்ள நம் இறைவன் நமக்கு அழைப்புவிடுகின்றார். இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்கு பெற்ற பின்புஇ தூய ஆவியானவரால் பாலை நிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு 40 நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அலகையின் பேராசை மிக்க வார்த்தைகளுக்கு செவிசாய்க்காமல்இ வாழ்வை துலங்க வைக்கும் இறைவார்த்தையே சிறந்தது என்பதை மேற்கோள் காட்டி சோதனைகளை இறைவார்த்தையினால் வெல்கிறார். 

இத்தவக்காலம் அருளின் காலம்இ இறக்கத்தின் காலம் மற்றும் கடவுளின் அன்பை சுவைக்கும் காலம். இயேசுவின் தியாகத்தை உணர்ந்து அவருடன் பயணிக்க வேண்டிய காலம். அலகை தரும் சோதனைகளையும்இ வேதனைகளையும் கண்டு ஒளிந்து கொள்ளாமல் தர்மம்இ இறைவேண்டல்இ நோன்பு இவைகளைப் பயன்படுத்தி அவற்றை திடமுடன் வெல்வோம். பாவநிலையை அகற்றிஇ தூயவர்களாக வாழ அழைப்பு விடுக்கும் இத்தவக்காலத்தில் முடிந்தவரை முயற்;சி செய்து இயேசுவுக்கு நெருக்கமானவர்களாக மாறுவோம். 

சோதனையில் சிக்கி மனந்தளராமல்இ இறைவார்த்தையை மார்புக்கவசமாக கொண்டுஇ  இறைவனின் கல்வாரி பயணத்தில் அவருடன் இணைந்து பயணிக்க தகுதி பெரும்பொருட்டு இந்த தயாரிப்பின் கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை : இணைச்சட்டம் 26  : 4-10 

இன்றைய முதல் வாசகமானது இணைச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. தம் வலிய கரத்தாலும்இ ஓங்கிய புயத்தாலும்இ அஞ்சத்தக்க பேராற்றலாலும்இ அடையாளங்களாலும் அடிமைதனத்தனத்திலிருந்து விடுவித்த ஆண்டவருக்கு தங்கள் முதற்பலன்களை நன்றி காணிக்கையாக செலுத்த இறைவாக்கினர் மோசோ மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றார். நமக்கு கிடைத்த பலன்களுக்கு நன்றி கூற அழைப்புவிடுக்கும் இம்முதல் வாசத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரைகள் : உரோமையர் 10:8-12 

ஆண்டவரின் திருப்பெயரை வாயார அறிக்கையிட்டு மன்றாடும் எவரும் மீட்டு பெறுவர் என்று புனித பவுலடியார் இறைவார்த்தையின் வல்லமையைஇ இரண்டாம் வாசகம் வழியாக எடுத்துக் கூறுகின்றார். எனவே, நாமும் இயேசுவே ஆண்டவரை வாயார அறிக்கையிட்டு எந்தவித பாகுபாட்டிற்கும் இடம் கொடாமல்ஈ இயேசுவின் மீட்பு பாதையில் இணைய அழைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவிசாய்ப்போம்.

மன்றாட்டுகள்

1. நல்லாயனே எம் இறைவா! திருஅவையை வழிநடந்தும் திருப்பணியாளர்கள் அனைவருக்காவும் செபிக்கின்றோம். தூய ஆவியாரின் துணைக்கொண்டுஇ தாம் எடுத்த செயல்கள் அனைத்திலும் வெற்றி பெற்றுஇ தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை நல்வழியில் நடத்தவும்இ சோதனைகளுக்கு இடம் கொடாமல் இறைவார்த்தையையின் படி என்றென்றும் வாழவும் தேவையான வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 


2. அன்பின் இறைவாஇ ஏழ்மையிலும்இ பசியாலும்இ பட்டினியாலும் வாடுவோருக்காக செபிக்கின்றோம். இத்தவக்காலத்தில் தர்மம்இ நோன்புஇ இறைவேண்டல் ஆகியவற்றை மையப்படுத்தி வாழும் எம்மக்கள் தங்களால் முடிந்த உதவிகளையும்இ பொருட்களையும் இல்லாதவர்களோடு பகிர்வாழும் மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


3. வார்த்தையை வாழ்வாக்கிய எம் இறைவா! எங்களுடைய சொற்களாலும்இ செயல்களாலும் பிறர் மனத்தை காயப்படுத்தாமல் அன்புஇ அமைதிஇ பொறுமை போன்ற தூய ஆவியாரின் கனிகளையும்இ ஒருவரை ஒருவர் மதித்துஇ மன்னித்து ஏற்றுக்கொண்டு வாழ வேண்டுமென்றும்இ இறைவனின் வார்த்தைகளை எங்கள் வாழ்வாக்க வரமருள வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகின்றோம்.


4. நம்பிக்கையின் ஊற்றே எம் இறைவா! இத்திருப்பீடம் சூழ்ந்துள்ள அனைத்து இறைமக்களுக்காகவும் செபிக்கிள்றோம். மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல மாறாக கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர் என்பதனை உணர்ந்துஇ இறைவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழவும்இ இத்தவக்காலத்தில் மன்னிப்புஇ இறக்கம்இ பொறுமை போன்ற விழுமியங்களை வார்த்தைகளால் மட்டுமல்லாமல் எங்கள் வாழ்க்கையிலும. பிரதிபலக்க வேண்டிய வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


5. காணாமல் போன ஆன்மாக்களைத் தேடி மீட்ட எம் அன்பு இறைவா! இறைவனை விட்டு விலகிஇ இறைப் பற்றி இல்லாமல் வாழும் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். இவர்களை உம் எல்லையில்லா வரங்களால் ஆசீர்வதித்துஇ உம் பாதம் திருப்பிஇ இறை ஞானமுடைய நல்ல மக்களாக வாழும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


To Download PDF


Saturday, March 1, 2025

திருநீற்று புதன் 05-03-2025

திருநீற்று புதன் 05-03-2025

திருநீற்று புதன் 05-03-2025


திருப்பலி முன்னுரை

கிறிஸ்துவின் பாடுகளையும் அதனால் நாம் பெற்ற மீட்பையும் பற்றி சிந்திக்க இவ்விறைப்பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே! நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஆடம்பரமான பலிகளை நம்மிடமிருந்து எதிப்பார்ப்பதில்லை. மாறாக, நொறுங்கிய மற்றும் தாழ்ச்சிமிக்க உள்ளத்தையே எதிர்பார்க்கின்றார். அதன்படி, இறுமாப்புக் கொண்ட நம்முடைய உள்ளங்களை இறைவனின் கருணை கொண்டு கரைக்க இத்தவக்காலம் நமக்கு உதவுகின்றது. கிறிஸ்து நமக்காக அனுபவித்த பாடுகளை எண்ணி மனம் மாற்றத்தின் பாதையில் பயணிக்க தயராகும் நாளே இச்சாம்பல் புதனாகும். மண்ணிலிருந்து தோன்றிய நாம் மீண்டும் மண்ணுக்கே திரும்புவோம் என்ற உண்மையை நமக்கும் உணர்ந்தும் அடையாளமாக இன்றைய திருப்பலியில் நம் நேற்றியில் சாம்பலானது பூசப்படுகின்றது.

மோசே நாற்பது நாட்கள் நோன்பிருந்து பத்துகட்டகளையைப் பெற்றார். இஸ்ரேயல் மக்கள் நாற்பது ஆண்டுகளாக பாலைநிலத்தில் பயணம் செய்து கானான் நாட்டை அடைந்தார்கள். இறைமகன் இயேசு கிறிஸ்து நாற்பது நாட்களாக பாலைவனத்தில் தனித்திருந்து செபித்தார். இவர்களைப் போன்று நாமும் இத்தவக்காலத்தை இறைவனை அனுகிச் செல்வதற்கான காலமாக கடைபிடிப்போமெனில் இயேசு காட்டும் மீட்பின் பாதையை நமக்கானதாக மாற்ற முடியும். 

எனவே, எளிய உள்ளதவராய் உதட்டளவில் மட்டும் நோன்பிருந்து, இறைவேண்டல் புரியாமல் நம் உள்ளத்தளவில் நோன்பிருந்து இறைவேண்டல்களை மேற்கொள்வதற்கு தேவையான ஆற்றல்களை வேண்டி இம்மனமாற்றத்தின் பகிர்வில் பக்தியுடன் பங்கெடுப்போம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம். உள்ளத்தை கிழித்து கொள்ளுங்கள் என்று இறைவாக்கினர் யோவேல் முன்னறிவிக்கிறார். மனமாற்றம் என்பது ஒருவர் தாம் செய்த தவறை உணர்ந்து, பாவத்திலிருந்தும் மற்றும் எல்லா வகையான தீமையிலிருந்தும் விலகி திரும்பி வருவதை குறிக்கும். கடவுள் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர் மற்றும் நீடிய பொறுமை உள்ளவர் என்பதை உணர்த்தும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

தவக்காலம் இதுவே தகுந்த காலம். இன்றே மீட்பின் நாள் என்று புனித பவுலடியார் இவ்விரண்டாம் வாசகத்தின்; வழியாக கடவுளோடு ஒப்புரவாக நமக்கு அழைப்புவிடுக்கிறார். அவரின் அழைப்பை ஏற்று கடவுளிடமிருந்து நாம் பெற்ற அருளை மீண்டும் புதுமிக்க வழிகாட்டும் இவ்வாசகத்திற்கு மனம் திறந்து செவிமடுப்போம்.

திருநீற்று பூசும் சடங்கு முன்னுரை

பழைய ஏற்பாட்டில்; கோணிiயை ஆடையாக அணிந்து சாம்பல் பூசி தங்கள் பாவங்களுக்காக மனம் வருந்தும்படி இறைவாக்கினர்கள் மக்களை அழைத்தார்கள். அதேபோல் மனம் மாற்றத்தின் காலமாகிய தவக்காலத்தில் அடியெடுத்து வைப்பதன் அடையாளமாக இப்பொழுது, அருள்பணியாளர் நம்மை அனைவரையும் இச்சடங்கில் பங்கேற்க அழைப்பார். அதன் பின்னர் திருநீற்றின் மீது செபித்து அதை ஆசிர்வதித்து “மனம் திரும்பி நற்செய்தியை நம்புங்கள்” என்ற சொல்லியபடி திருநீற்றை நம் நெற்றியில் பூசுவார். இறைமக்கள் அனைவரும் இச்சடங்கில் பக்தியுடனும் அமைதியுடனும் பங்கெடுக்கவும்.

மன்றாட்டுகள்

1. மனமாற்றத்தின் பாதையில் மக்களை வழிநடத்த திருஅவையை ஏற்படுத்திய எம் இறைவா! கிறிஸ்துவின் சீடர்களாகிய நாங்கள் அனைவரும், கிறிஸ்துவின் போதனைகளின் படி எங்கள் வாழ்வை நடத்தவும், கிறிஸ்துவின் பாடுகள் மூலம் நாங்கள் பெற்ற மீட்மை என்றென்றும் காத்துக்கொள்ள வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

2. பாவிகனை மன்னிக்கும் எம் இறைவா! குற்றங்கள் புரிந்து, அதற்காக தண்டனை அனுபவிக்கும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்கள் அனைவரும் தங்கள் தவறுகளுக்காக மனம் வருந்தி, தங்கள் வாழ்வை புதிய பாதையில் அமைத்துக் கொள்ள தேவையான அனைத்து வரங்களையும் பொழிந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. அமைதியை ஏற்படுத்த வந்த எம் இறைவா! எங்கள் இல்லங்களில் அமைதி, ஒற்றுமை, விட்டுக்கொடுத்தல் போன்ற இறைப்பண்புகள் மேலோங்கிட வேண்டுமென்றும், மனமாற்றத்தின் காலமாகிய இத்தவக்காலத்தில் எங்கள் குடும்பங்களில் உள்ள உறவு பிணைப்புகள் வலுப்பெற தேவையான அருள்வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

4. தங்கள் நாடுகளையும், வீடுகளையும் இழந்து அகதிகளாக வாழும் அனைத்தும் மக்களை நிறைவாக அசீர்வதிக்கும்படி மன்றாடுகின்றோம். கடுமையான மன மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகும் இவர்களை நாங்கள் அனைவரும் எங்களுடைய சகோதரர்களாக கருதி அவர்களுக்கு மதிப்பும் நல் வாழ்வும் அளிக்க தேவையான தாராள மனதை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

5. மனமாற்றத்தின் காலமாகிய இத்தவக்காலத்தில் காலடி எடுத்து வைக்க இத்திருநீற்று புதன் திருப்பலியில் பங்கேற்க வந்துள்ள அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இறை வாரத்தை படித்து, தியானித்து அதன் படி வாழ்ந்து இத்தவகாலத்தை பயனுள்ளதாக மாற்ற தேவையான அருள் வரங்களை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 



Ash Wednesday Mass Liturgy 2025
Ash Wednesday Mass Introduction 2025
Ash Wednesday Iraivelicham

தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25

 தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25 திருப்பலி முன்னுரை தவம், செபம் மற்றும் தியாகம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பயணிக்கும் தவக்காலத்தின் மூன்...