தவக்காலம் முதல் ஞாயிறு 09-03-25
திருப்பலி முன்னுரை
தவக்காலத்தின் முதல் ஞாயிறு திருப்பலி கொண்டாட்டத்தின் வழியாக சோதனைகளை வெற்றி கொள்ள நம் இறைவன் நமக்கு அழைப்புவிடுகின்றார். இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்கு பெற்ற பின்புஇ தூய ஆவியானவரால் பாலை நிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு 40 நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அலகையின் பேராசை மிக்க வார்த்தைகளுக்கு செவிசாய்க்காமல்இ வாழ்வை துலங்க வைக்கும் இறைவார்த்தையே சிறந்தது என்பதை மேற்கோள் காட்டி சோதனைகளை இறைவார்த்தையினால் வெல்கிறார்.
இத்தவக்காலம் அருளின் காலம்இ இறக்கத்தின் காலம் மற்றும் கடவுளின் அன்பை சுவைக்கும் காலம். இயேசுவின் தியாகத்தை உணர்ந்து அவருடன் பயணிக்க வேண்டிய காலம். அலகை தரும் சோதனைகளையும்இ வேதனைகளையும் கண்டு ஒளிந்து கொள்ளாமல் தர்மம்இ இறைவேண்டல்இ நோன்பு இவைகளைப் பயன்படுத்தி அவற்றை திடமுடன் வெல்வோம். பாவநிலையை அகற்றிஇ தூயவர்களாக வாழ அழைப்பு விடுக்கும் இத்தவக்காலத்தில் முடிந்தவரை முயற்;சி செய்து இயேசுவுக்கு நெருக்கமானவர்களாக மாறுவோம்.
சோதனையில் சிக்கி மனந்தளராமல்இ இறைவார்த்தையை மார்புக்கவசமாக கொண்டுஇ இறைவனின் கல்வாரி பயணத்தில் அவருடன் இணைந்து பயணிக்க தகுதி பெரும்பொருட்டு இந்த தயாரிப்பின் கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்.
வாசக முன்னுரைகள்
முதல் வாசக முன்னுரை : இணைச்சட்டம் 26 : 4-10
இன்றைய முதல் வாசகமானது இணைச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. தம் வலிய கரத்தாலும்இ ஓங்கிய புயத்தாலும்இ அஞ்சத்தக்க பேராற்றலாலும்இ அடையாளங்களாலும் அடிமைதனத்தனத்திலிருந்து விடுவித்த ஆண்டவருக்கு தங்கள் முதற்பலன்களை நன்றி காணிக்கையாக செலுத்த இறைவாக்கினர் மோசோ மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றார். நமக்கு கிடைத்த பலன்களுக்கு நன்றி கூற அழைப்புவிடுக்கும் இம்முதல் வாசத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரைகள் : உரோமையர் 10:8-12
ஆண்டவரின் திருப்பெயரை வாயார அறிக்கையிட்டு மன்றாடும் எவரும் மீட்டு பெறுவர் என்று புனித பவுலடியார் இறைவார்த்தையின் வல்லமையைஇ இரண்டாம் வாசகம் வழியாக எடுத்துக் கூறுகின்றார். எனவே, நாமும் இயேசுவே ஆண்டவரை வாயார அறிக்கையிட்டு எந்தவித பாகுபாட்டிற்கும் இடம் கொடாமல்ஈ இயேசுவின் மீட்பு பாதையில் இணைய அழைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவிசாய்ப்போம்.
மன்றாட்டுகள்
1. நல்லாயனே எம் இறைவா! திருஅவையை வழிநடந்தும் திருப்பணியாளர்கள் அனைவருக்காவும் செபிக்கின்றோம். தூய ஆவியாரின் துணைக்கொண்டுஇ தாம் எடுத்த செயல்கள் அனைத்திலும் வெற்றி பெற்றுஇ தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை நல்வழியில் நடத்தவும்இ சோதனைகளுக்கு இடம் கொடாமல் இறைவார்த்தையையின் படி என்றென்றும் வாழவும் தேவையான வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
2. அன்பின் இறைவாஇ ஏழ்மையிலும்இ பசியாலும்இ பட்டினியாலும் வாடுவோருக்காக செபிக்கின்றோம். இத்தவக்காலத்தில் தர்மம்இ நோன்புஇ இறைவேண்டல் ஆகியவற்றை மையப்படுத்தி வாழும் எம்மக்கள் தங்களால் முடிந்த உதவிகளையும்இ பொருட்களையும் இல்லாதவர்களோடு பகிர்வாழும் மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. வார்த்தையை வாழ்வாக்கிய எம் இறைவா! எங்களுடைய சொற்களாலும்இ செயல்களாலும் பிறர் மனத்தை காயப்படுத்தாமல் அன்புஇ அமைதிஇ பொறுமை போன்ற தூய ஆவியாரின் கனிகளையும்இ ஒருவரை ஒருவர் மதித்துஇ மன்னித்து ஏற்றுக்கொண்டு வாழ வேண்டுமென்றும்இ இறைவனின் வார்த்தைகளை எங்கள் வாழ்வாக்க வரமருள வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகின்றோம்.
4. நம்பிக்கையின் ஊற்றே எம் இறைவா! இத்திருப்பீடம் சூழ்ந்துள்ள அனைத்து இறைமக்களுக்காகவும் செபிக்கிள்றோம். மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல மாறாக கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர் என்பதனை உணர்ந்துஇ இறைவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழவும்இ இத்தவக்காலத்தில் மன்னிப்புஇ இறக்கம்இ பொறுமை போன்ற விழுமியங்களை வார்த்தைகளால் மட்டுமல்லாமல் எங்கள் வாழ்க்கையிலும. பிரதிபலக்க வேண்டிய வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. காணாமல் போன ஆன்மாக்களைத் தேடி மீட்ட எம் அன்பு இறைவா! இறைவனை விட்டு விலகிஇ இறைப் பற்றி இல்லாமல் வாழும் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். இவர்களை உம் எல்லையில்லா வரங்களால் ஆசீர்வதித்துஇ உம் பாதம் திருப்பிஇ இறை ஞானமுடைய நல்ல மக்களாக வாழும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment