பொதுக்காலம் 33 ஆம் ஞாயிறு
(16-11-2025)
திருப்பலி முன்னுரை
இறை உறவில் ஒன்றிணைந்த சகோதர சகோதரிகளே! இன்று நம்முடைய திருஅவை பொதுக்காலத்தின் 33 ஆம் ஞாயிறை சிறப்பிக்க நமக்கு அழைப்பு விடுக்கின்றது. பொதுக்காலத்தின் இறுதி நாள் வாசகங்கள் அனைத்தும் எதிர்வரும் திருவருகை காலத்திற்கு நம்மை தயார் செய்கின்றன. இன்றைய வாசகங்கள் கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்வோர் எவ்வாறு வாழ வேண்டும் என்று கற்பிக்கின்றன. அனைவரையும் அன்பு செய்யுங்கள் என்று மொழிந்த கிறிஸ்துவுக்கு இவ்வுலகம் சிலுவையை பரிசாக அளித்தது. இருப்பினும், கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டிருந்த பொழுதும் “இவர்களை மன்னியும”; என்ற வார்த்தையின் மூலம் இவ்வுலகின் மீது அவர் கொண்ட அன்பை வெளிப்படுத்தினார். இயேசுவை பின்பற்றும் நாம் நம்முடைய சோதனை காலத்திலும் நம்பிக்கையில் நிலை பெற்று வாழ அழைக்கப்படுகின்றோம் நம்பிக்கையாளர்களின் சமூகமாகிய நாம் நம்முடைய செயல்களில் கிறிஸ்துவை வெளிப்படுத்துவோம. நம்முடைய ஜெப வாழ்வு நம்முடைய விசுவாசத்தையும், நம்மைச் சுற்றியுள்ளவரின் விசுவாசத்தையும் அதிகப்படுத்துவதற்கான வழியாக இருக்க வேண்டும். எனவே, ஜெபத்தின் மூலம் நம்முடைய விசுவாசத்தை உறுதிப்படுத்தவும், அந்த நம்பிக்கையின் பலனாக நற்செயல்கள் புரிந்து இச்சமூகத்தை முழுமை பெறச் செய்ய தேவையான அருள் வரங்கள் வேண்டி இந்த மீட்பின் தயாரிப்பில் மகிழ்வுடன் பங்கெடுப்போம்
வாசக முன்னுரைகள்
முதல் வாசக முன்னுரை
பாவத்தின் பிடியிலிருந்து நாம் மீண்டெழும் பொழுது நம்முடைய மனித இயல்புகளைத் துறந்து இறைப்பண்புகளைப் பெறுகின்றோம். அப்படி, நாம் நிதியின் பாதையில் நடக்கும் பொழுது நம்முடைய உள்ள அழுக்குகள் அகன்று, இறைவனுக்கு ஏற்ற வாழ்வு வாழ முடியும் என்றும், இறைவனில் நம்பிக்கை கொள்வோர் புதுவாழ்வு பெறுவர் என்றும் நம்பிக்கையூட்டும் இம்முதல் வாசகத்திற்கு செவிகொடுப்போம்
இரண்டாம் வாசக முன்னுரை
கிறிஸ்து இறந்து உயிர்த்து பின்பு திருத்தூதர்கள் கிறிஸ்துவின் வாக்கின்படி தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டனர். தங்களுடைய வார்த்தைகளால் மட்டும் இயேசுவை கற்பிக்காமல், தங்களுடைய செயல்களில் கிறிஸ்துவின் படிப்பினைகளை வெளிப்படுத்pனார். திருத்தூதர்களைப் போன்று செயல்களின் மூலம் கிறிஸ்துவை வெளிப்படுத்த அழைபு;பு விடுக்கும் இவ்விரண்டாம் வாசகத்தை பக்தியுடன் கவனிப்போம்.
மன்றாட்டுகள்
1. உம் அன்பின் அடையாளமாக திருஅவையை ஏற்படுத்திய எம் இறைவா! உம் திருஅவையின் உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும், அன்பை எங்கள் வாழ்வின் அடித்தளமாக கொண்டு வாழவும், நாங்கள் அடைந்த இறையனுபவத்தையும், இறை ஆனந்தத்தையும் பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் தேவையான வரங்களைப் பொழிந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
2. வாழ்வளிக்கும் எம் இறைவா! இயற்கை இடர்களாலும், மனிதச் செயல்களாலும் தங்கள் வாழ்வை இழந்த அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். பல உயிர்களையும், உறவுகளையும் இழந்த இவர்களுக்கு நீரே துணையாக இருக்க வேண்டுமென்றும், அவர்கள் வாழ்வின் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்ப தேவையான உதவிகளைச் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
3. சிலுவை மரணத்தால் இவ்வுலகை மீட்ட எம் இறைவா! நாங்கள் எங்கள் வாழ்வில் சந்திக்கும் துன்பங்களை எதிர் கொள்ள வேண்டிய மன உறுதியை எங்களுக்கு அளித்தருளும். எங்களுடைய நம்பிக்கை வாழ்வில் தளராமல், நம்பிக்கையின் துணை கொண்டு அனைத்து தீமைகளை வெற்றி கொள்ள எங்களுக்கு தேவையான இறைஞானத்தை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
4. காயப்பட்ட ஆடுகளை தேடிச் செல்லும் இறைவா! சமூகத்தில் உடலளவிலும், உள்ளத்தளவிலும் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும், நாங்கள் உதவியாக இருக்க அருள்புரியும். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதற்கும் எங்களுக்கு தேவையான நல்ல மனதை தந்தருள வெண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
.jpeg)
No comments:
Post a Comment