இறை வெளிச்சம் புனித திருப்பலி உதவியை வழங்குகிறது. புனித திருப்பலி முன்னுரை நீங்கள் இங்கே காணலாம்.

Friday, December 19, 2025

Advent 4th Week Mass Introduciton

திருவருகைக்கால நான்காம் ஞாயிறு

21 – 12 – 2025

இம்மானுவேல் – கடவுள் நம்மோடு | திருவருகைக்காலம்

“இம்மானுவேல் – கடவுள் நம்மோடு” ✨

✦ திருப்பலி முன்னுரை

மீட்பரின் வருகையை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருக்கும் சகோதர, சகோதரிகளே! கிறிஸ்துவின் போதனைகளில் தனிச்சிறப்பிடம் பெற்ற அன்பு என்ற இறைக் கொடையைப் பற்றிக் சிந்திக்க இத்திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறு நம்மை அன்புடன் அழைக்கின்றது. இறைவன் மனிதனை அன்பு செய்கின்றார். தம் அன்பின் அடையளமாக மனிதர்களைப் படைத்து காத்து வருகின்றார். அதற்கு, கைமாறாக, இறைவன் நம்மிடமிருந்து பாவமற்ற வாழ்வை பரிசாக கேட்கின்றார்.

இந்த பாவமற்ற வாழ்வை எப்படி வாழ்வது என்றும், மாசில்லா இதயத்தை எப்படி இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்றும் கிறிஸ்து தம் அன்பின் போதனைகள் மூலம் நமக்கு கற்பித்துள்ளார். கிறிஸ்துவின் கட்டளையை ஏற்று அதன்படி வாழ்வோம் எனில் நம்மிடையே அன்பு என்றென்றும் நிலைப் பெற்றிருக்கும். மேலும். கடவுள் அன்பின் வடிவில் என்றும் நம்முடன் வாழ்வார் என்ற மறை உண்மைகளை இன்றைய வாசகங்களும் எடுத்துரைக்கின்றன. எனவே, கிறிஸ்து பிறப்பிற்காக நம்மைத் தாயாரிக்கும் இந்நாட்களில் கிறிஸ்து பிறப்பிற்கான நோக்கத்தை குறையின்றி கற்றறிவோம்.

நம்மோடு என்றும் இருப்பதற்காக நம்மிடையே தோன்றிய ‘இம்மானுவேல்’, இறைவனையும் நம் அயலாரையும் அன்பு செய்ய வேண்டும் என்று கற்பித்தார். அந்த அன்பின் பொன்மொழிகளை நம்முடைய வாழ்வாக்கி, அன்பின் வடிவாய் நம்முடன் என்றும் இருக்கும் கடவுளை உணரும் வரம் வேண்டி இந்த அன்பின் பகிர்வில் பக்தியுடன் பங்கெடுத்து, இறைவனின் அன்பின் பிள்ளைகளாக மாறுவோம். இறைவனில் ஒளிர்ந்திடுவோம்.

இம்மானுவேல் – கடவுள் நம்மோடு | திருவருகைக்காலம்

“இம்மானுவேல் – கடவுள் நம்மோடு” ✨

✦ கிறிஸ்துமல் ரீத் முன்னுரை – அன்பு

கடவுளுக்கும் மனிதருக்குமான அன்பின் உறவென்பது எதிர்பார்ப்புகளால் நிறைந்து அல்ல. உண்மையில், நம்முடைய அன்பு என்பது பிரதிபலனற்ற நம்முடைய தியாகச் செயல்களின் மூலமே வெளிப்படுகின்றது. இறைவன் தன்னுடைய அன்பின் அடையாளமாக எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி தன்னையே நமக்காக தியாகம் செய்தார். இயேசு பாலனின் வரவை எதிர்பார்த்து காத்திருக்கும் நாமும் நம்முடைய இறையன்பையும், பிறரன்பையும் நம்முடைய தியாகச் செயல்களால் அணி சேர்க்க வேண்டும். நம்முடைய பகிர்வின் செயல்களை, நம்முடைய சுய வளர்ச்சியை இவ்வுலகிற்கு முரசறைக்கும் அயுதமாக பயன்படுத்தாமல், பிறரின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமைத்து, அன்பினால் இவ்வுலகை கட்டியெழுப்புவோம் என்ற உறுதியுடன் இந்நான்காம் திரியை எற்றி இறைவனின் அன்பில் சரணடைவோம்.

✦ வாசக முன்னுரைகள்

முதல் வாசகம் (எசாயா 7:10–14):
கடவுள் நம்முடைய அன்றாட வாழ்வில் நிகழத்தும் அற்புதற்களை நாம் கண்ணோக்க வேண்டும். நம்முடைய தேவைகளை நம்மைவிட நன்கறிந்த இறைவனை சோதித்தல் ஆகாது என்ற எசாயா இறைவாக்கினரின் வார்த்தைகள் நம்முடைய நம்பிக்கை அளவிட அழைக்கின்றது. எவ்வித ஐயமும் இன்றி பிறக்கவிருக்கும் மீட்பரை வரவேற்க அழைக்கும் இம்முதல் வாசகத்திற்கு நம்பிக்கையுடன் செவிகொடுப்போம்..

இரண்டாம் வாசகம் (உரோமையர் 1:1–7):
உலகையே தங்கள் அளுகைக்கு உட்படுத்தியதாக கருதிய உரோமையர்களின் மத்தியில் இயேசுவின் மீது அன்பு கொண்டவர்களுக்காக பவுல் எழுதிய வார்த்தைகள் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கொடுக்கப்பட்டுள்ளுது. பாவத்திலிருந்து நம்மை மீட்க வல்ல, நற்செய்தியை அறிவிப்பதற்கு நம்மிடையே தோன்றவிருக்கும் மீட்பரைப் பற்றி எடுத்துரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

✦ மன்றாட்டுகள்

  1. பூரண அன்பை பொழியும் எம் இறைவா! உம் அன்பின் போதனைகளை உலகெங்கும் கொண்டு சென்றிட நீர் ஏற்படுத்திய உம் திருஅவையின் உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும், உம்முடைய பிறப்பிற்காக எங்களை தயார் செய்து, எங்களிடம் உள்ள உயர்ந்த பண்புகளை பிறருக்கு உகந்த வகையில் பயன்படுத்திட தேவையான வரங்களை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  2. அன்பின் ஆழத்தை எங்களுக்கு காட்டிய எம் இறைவா! எங்களிடத்தில் உள்ள அன்பின் பகிர்வுகள் வெறும் வார்த்தை அளவில் மட்டுமில்லாமல், எங்களுடைய செயலகளின் வாயிலாக வெளிப்படவும், உம்மையே நாங்கள் முன் மாதிரியாக கொண்டு, அன்பின் பிரதிபலிப்பாக மாறாவும், நீர் காட்டும் அன்பின் பாதையில் தொடர்ந்து பயணம் செய்யவும் தேவையான வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  3. பஅமைதியை ஏற்படுத்த வந்த எம் இறைவா! உலக நாடுகளுக்கிடையில் நடைபெறும் போர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மன்றாடுகின்றோம். போர்ச் சூழலை எதிர்கொள்ள உம்முடைய அமைதியும் அன்பையும் பொழிந்து, நீரே அவர்களுக்கு அறுதலாக இருக்க வேண்டுமென்றும், போர்களில் ஈடுபடும் அரசியல்வாதிகளை அன்பின் பாதையில் நடத்திட வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகின்றோம்.
  4. அனைவருக்கும் ஆறுதலளிக்கும் எம் இறைவா, இயற்கை பேரழிவுகளால் தங்கள் வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து வாழும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து, அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பிட தேவையான உதவிகளைச் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்..
  5. தேடிச் சென்று உதவும் உம் இறைவா! உலகெங்கும் பொருளாதார நெருக்கடிகளாலும், வறுமையாலும் வாடும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்களுக்கு தேவையான உதவிகளை ஆற்றிட வேண்டிய நல்ல மனதையும், சமமான பொருளாதார வளர்ச்சியை நோக்கி எம் சமுகத்தை வழிநடத்திட வேண்டிய ஆற்றலையும் கொடையாக தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

Lent 3rd Sunday A - தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

MAR 08 2026 தவக்காலம் மூன...