இறை வெளிச்சம் புனித திருப்பலி உதவியை வழங்குகிறது. புனித திருப்பலி முன்னுரை நீங்கள் இங்கே காணலாம்.

Friday, November 1, 2024

இறந்த விசுவாசிகள் அனைவர் நாள் – நவம்பர் 02

இறந்த விசுவாசிகள் அனைவர் நாள்  நவம்பர் 02

Scroll to Download
**Tamil All souls day mass introduction 
**Mass introduction
இறந்த விசுவாசிகள் அனைவர் நாள் – நவம்பர் 02

திருப்பலி முன்னுரை

இறைவன் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் முடிவில்லா வாழ்வை தமதாக்கி கொள்வார்கள் என்ற நம்பிக்கையை கொண்ட சகோதர, சகோதரிகளே! இன்றைய நாளில், நாம் அனைவரும், இறந்த ஆன்மாக்களை நினைவு கூறவும், அவர்களுக்காக சிறப்பான முறையில் ஜெபிக்கவும் அழைக்கப்படுகின்றோம். மனிதன் செய்த முதல் பாவத்தின் விளைவாக இவ்வுலகத்தில் பாவமும், சாவும் நுழைந்தது. அப்படி பாவத்தில் விழுந்த மனிதர்களை சாவின் பிடியில் இருந்து மீட்பதற்காக, இறைமகன் இயேசு கிறிஸ்து மனிதராக இவ்வுலகில் பிறந்து, எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தார். இறுதியாக, சிலுவை மரணத்தின் மூலம் பாவத்தின் பிடியில் சிக்கிய மனிதனை மீட்டெடுத்தார். பாவமில்லா வாழ்வு வாழ்ந்ததன் அடையாளமாக விண்ணக வீட்டிற்கு ஏறிச் சென்றார். இயேசு கிறிஸ்து இம்மண்ணுலகில் வாழ்ந்த பொழுது, இறையன்பு, பிறரன்பு, இறைத் திருவுளத்தை நிறைவேற்றல் ஆகிய இறையாட்சியின் விழுமியங்களை முற்றிலுமாக பின்பற்றினார். அதன் நிறைவாக, பாவத்திலிருந்தும் மீண்டு நித்திய வாழ்வை நமதாக்கிக் கொள்ள முடியும் என்று முன்மாதிரி வாழ்வு வாழ்ந்து காட்டினார். அவருடைய சீடர்களாகிய நாமும் அவருடைய வழியை பின்பற்றுவதன் வழியாக நித்திய வாழ்வை நம்முடையதாக்கிக் கொள்ள முடியும். இந்த நித்திய வாழ்வை அடைவதற்காக ஏங்கும் ஒவ்வொரு ஆன்மாவுக்காகவும் இத்திருப்பலியில் செபிப்போம். அதிலும் குறிப்பாக, யாரும் நினையாத ஆன்மாக்களை நினைவு கூறுவோம்! அனைத்து அன்மாக்களும் நித்திய இளைப்பாற்றியை அடைய வேண்டி இத்திருப்பலியில் ஈடுபாட்டுடன் கலந்து கொள்வோம். 

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை (எசேக்கியேல் 37: 1, 4-6, 12-14)

இயேசு இவ்வுலகிற்கு இறுதி தீர்ப்பு வழங்க வரும் நாளில் இறந்த அனைவரும் உயிர்பெற்று எழுவர் என்பதை நாம் நம்முடைய நம்பிக்கை அறிக்கையில் நினைவு கூர்கின்றோம். அதைப்போல, இறைவன் எலும்புகளுக்கும் உயிரளிப்பார். இறந்தவரை உயிர்த்;தெழச் செய்வார் என்று இறைவாக்கினர் எசேக்கியலும் இறைவாக்குரைக்கின்றார். எனவே, கிறிஸ்துவின் பொருட்டு வாழ்வு பெருவோம் என்ற நம்பிக்கையுடன் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை (பேதுரு 1;:3-9)

கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொள்வதென்பது, நம் உதட்டளவில் அவரைப் புகழ்வதல்ல. கிறிஸ்துவின் படிப்பினைகளை பின்பற்றுவதன் மூலமே நாம் கிறிஸ்துவில் கொண்ட நம்பிக்கையை வெளிப்படுத்த முடியும். அப்படி நாம் கிறிஸ்துவில் உண்மையான நம்பிக்கை கொள்ளும் பொழுது நம் வாழ்வில் நிகழும் அற்புதங்களை எடுத்துக் கூறும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

மன்றாட்டுகள்

1. மரித்தோரை உயிர்த்தெழச் செய்யும் எம் இறைவா! ஆன்மாக்களின் மீட்பிற்காக நீர் உருவாக்கிய உம்முடைய திருஅவைக்காக மன்றாடுகின்றோம். உம்முடைய கட்டளையின் படி வாழ்ந்து, இறந்த அனைத்து விசுவாசுகளின் அன்மாக்களையும் கண்ணோக்கியருளும். இவர்கள் தங்கள் வாழ்வில் செய்த அற்ப பாவங்களை மன்னித்து, உம்முடைய விண்ணக வீட்டின் இன்பத்தில் பங்குகொள்ள அவர்களுக்கு உதவியருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 

2. வாழ்வளிப்பவரே எம் இறைவா! எங்களுடைய இல்லங்களிலும், உள்ளங்களிலும் வாழ்ந்து, இறந்த அனைத்து ஆன்மாக்களுக்காகவும் மன்றாடுகின்றோம். இவ்வுலகத்தில் இவர்கள் செய்த அனைத்து நன்மைகளையும் கண்ணோக்கி, அவர்கள் செய்த பாவங்களை மன்னிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். மேலும், இன்றைய நாளில் யாராலும் நினைவு கூறப்படாத ஆன்மாக்களையும் நினைவு கூர்ந்து, அவர்களுக்கு உம்முடைய நித்திய இறைப்பாற்றியை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. போர்களிலும், போராட்டங்களிலும் பிறருக்காக உயிர் நீத்த தியாக உள்ளங்களுக்காக மன்றாடுகின்றோம். பிற நலனுக்காக உயிர் நீத்த இவர்களின் ஆன்மாக்களை நாங்கள் என்றென்றும் நினைவு கூர்ந்து, அவர்களின் தியாகங்களுக்கு மதிப்பளிக்கும் உணர்வை எங்களுக்கு தந்துருள்ள வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

4. எங்கள் பாவங்களுக்காக உயிர் நீத்த எம் இறைவா! சிலுவை மரணத்தின் மூலம் பாவத்திலிருந்து மீட்கப்பட்டு நாங்கள் அனைவரும், மென்மேலும் பாவங்களை செய்யாமல் எங்களுடைய ஆன்மாக்களை காத்துக்கொண்டு, நித்திய வாழ்வை நோக்கி பயணிக்கும் அருள் வரங்களை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

5. இம்மண்ணில் வாழும் மனிதர்களாகிய நாங்கள் அனைவரும் எங்கள் வாழ்விற்கு ஒரு முடிவு உண்டு என்பதை உணர்ந்து, நாங்கள் வாழும் நாட்களில் எங்களால் முடிந்த உதவியை பிறருக்கு செய்தும், பிறர் எங்களு செய்த உதவியை நினைவுகூர்ந்தும்  வாழ வேண்டிய வரங்களை தந்தருள் வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.


#Before download leave your comment and share 

Download

No comments:

Post a Comment

Lent 3rd Sunday A - தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

MAR 08 2026 தவக்காலம் மூன...