இறை வெளிச்சம் புனித திருப்பலி உதவியை வழங்குகிறது. புனித திருப்பலி முன்னுரை நீங்கள் இங்கே காணலாம்.

Saturday, November 2, 2024

பொதுக்காலம் 31-ம் ஞாயிறு 03-11-2024

 

பொதுக்காலம் 31-ம் ஞாயிறு 03-11-2024

பொதுக்காலம் 31-ம் ஞாயிறு 03-11-2024


திருப்பலி முன்னுரை

உலகம் தோன்றியது முதல், இன்று வரை எண்ணற்ற வழிகளில் இறைவன்  தன்னுடைய அன்பை நம்மிடத்தில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார். தன்னுடைய அன்பின் அடையாளமாக, இவ்வுலகை படைத்து நம்முடைய ஆளுகைக்கு உட்படுத்தினார். இத்தகைய உயரிய மதிப்பை நமக்கு அளித்த இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது முழுமையான அன்பையே. இறைவன் தன்னுடைய அன்பை இறைவாக்கினர்கள் வழியாகவும், இறைமகன் இயேசு கிறிஸ்து வழியாகவும் இம்மண்ணுலக மாந்தர்க்கு போதித்தார். நாம் இறைவனின் அன்பை புறக்கணித்து அவரை விட்டு விலகிச் செல்லும் பொழுது தீய நாட்டத்தில் விழுகின்றோம். மனிதருக்குரிய  பண்பை இழக்கின்றோம். கடவுள் நம்மிடம் இருந்தும் எதிர்பார்க்கும் நொறுங்கிய நெஞ்சத்தை மாசுபடுத்துகின்றோம். நம் உள்ளத்தில் படிந்த கறைகளை களைவதற்காக இறைவன் அளித்த ஒரே வழி தான் இறையன்பும், பிறரன்பும். நாம் இறைவனை முழு உள்ளத்தோடும் முழு ஆற்றலோடும் அன்பு செய்யும் பொழுது அது நம்முடைய செயல்களின் வாயிலாக நம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும் நன்மை அளிக்கும். இதுவே இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் இறையன்பும், பிறர் அன்பும் ஆகும். இறையன்பில்லாத பிறர் அன்பும், பிறர் அன்பில்லாத இறையன்பும் அர்த்தமற்றதாகும். ஏனெனில், கடவுளை நேசிப்பவர் அவரின் படைப்பாகிய மனிதர்களையும் நேசிக்க வேண்டும். ஆகவே இறைவன் திருச்சபையின் முதன்மையான கட்டளைகள் என்ற போதித்த இறையாட்சியின் படிப்பினைகளை நம் வாழ்வாக்க வேண்டி இந்த உறவின் கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுக்கும்.

 

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

கடவுளின் கட்டளைகளை கடைப்பிடிப்பவர்கள் தங்கள் வாழ்வில் மென்மேலும் உயர்வடைவார்கள். ஏனெனில், இறைவனின் ஆற்றல் மிகு வார்த்தை நம்மை நன்மையின் பாதையில் வழி நடத்திச் செல்லும். இஸ்ரேல் மக்களை நன்மையின் பாதையில் நடத்தும் பொருட்டு இறைவாக்கினர் மோசே எடுத்துரைக்கும் இறைவாக்குச் செய்திகளுக்கு இம்முதல் வாசகத்தில் கவனமுடன் செவி  கொடுப்போம்

இரண்டாம் வாசக முன்னுரை

நம்மைப் போல மனிதராக இம்மண்ணுலகில் பிறந்து உயிரினத்தை இயேசு கிறிஸ்து, சாவை வென்றதன் வழியாக நம்மில் இருந்து மேம்படுகின்றார். இதன் காரணமாக அவர் வாழும் கடவுளின் தலைமை குருவாக என்றென்றும் திகழ்கின்றார் என்ற மறைபொருளை விளக்கும் இரண்டாம் வாசகத்திற்கு ஆர்வமுடன் செவி கொடுப்போம்.

 

மன்றாட்டுகள்

 

1)       அன்பை அடித்தளமாகக் கொண்டு திருஅவையை கட்டி எழுப்பிய எம் அன்பு இறைவா! திரு அவையின் உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும் இறையன்பையும், பிறர அன்பையும் எவ்வித குறையும் இன்றி கடைபிடிக்க தேவையான அருள் வரங்களை எங்களுக்கு தந்தருள் வேண்டுமென்று உண்மை மன்றாடுகின்றோம்.

 

2)       உலகுக்கு உரு கொடுத்த எம் இறைவா! இவ்வுலகில் மக்களை வழிநடத்தும் அனைத்து தலைவர்களையும் நிறைவாக ஆசீர்வதியும் . இவர்கள் அனைவரும் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து, மக்கள் மீது உன் அன்பு கொண்டு,  அவர்களை அன்பின் பாதையில் நடத்திட வேண்டிய வரங்களை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

 

3)       ஆதரவற்றோருக்கு ஆதரவே எம் இறைவா! முழுமையான அன்பும், முறையான கவனிப்பும் இன்றி தவிக்கும் அனைத்து முதியோர்களுக்காகவும் மன்றாடுகிறோம். இவர்களுக்கு தேவையான அன்பையும் அரவணைப்பையும் தரவேண்டிய பொறுப்புணர்வை எங்களுக்கு தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்.

 

4)       திருக்குடும்பத்தின் சுடரொளியை எம் இறைவா! எங்கள் இல்லங்களில் அன்பு செய்தல், விட்டுக்கொடுத்தல் கீழ்ப்படிதல் போன்ற திருக்குடும்பத்தின் படிப்பினைகளை பின்பற்றவும், அதன் மூலம் எங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் அமைதி நிலவவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

 

5)       அழியும் செல்வமான இம்மன்னக செல்வத்தின் மீது நாட்டம் கொள்ளாமல், நிலையான செல்வமாகிய விண்ணகச் செல்வத்தை உடைமையாக்கி கொள்வதற்கான வழி ஆகிய அன்பை நாங்கள் இறுகி பற்றி கொள்ளவும். பிறர அன்பு பணிகளில் அதிகமாக ஈடுபடவும் வேண்டிய தாராள மனதை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


To Download PDF


No comments:

Post a Comment

Lent 3rd Sunday A - தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

MAR 08 2026 தவக்காலம் மூன...